தொலைக்காட்சி!!

Search This Blog

Friday, July 25, 2014

கண்ணில் கருவளையமா? கவலைய விடுங்க!

பெண்களுக்கு மட்மின்றி ஆண்களுக்கும் பெரிய பிரச்சனையே கண்ணுக்கு கீழே ஏற்படுகின்ற கருவளையம் தான்.
அந்த கருவளையத்திற்கு தீர்வு தருகிறது எலுமிச்சை.
* அரை டீஸ்புன் எலுமிச்சைச் சாறுடன், 5 துளி தேன், ஒரு டீஸ்பூன் பார்லி பவுடர் கலந்து, முகத்தில் பூசி 5 நிமிடம் கழித்து கழுவுங்கள்.
* எலுமிச்சைச்சாறு முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயை நீக்கிவிடும். பார்லி பவுடர் சேர்ப்பதால் முகம் ப்ளீச் செய்தது போல் பளிச்சென்று பிரகாசிக்கும்.
* ஜூரம், தூக்கமின்மையால் கண்களுக்குக் கீழ் ஏற்படும் கருவளையத்தைப் போக்குகிறது எலுமிச்சை.
* 2 டீஸ்பூன் வெள்ளரி விதை பவுடருடன், அரை டீஸ்பூன் எலுமிச்சைச்சாறு சேர்த்து, இது கலக்கும் அளவுக்குப் பாலைவிட்டு பேஸ்ட் செய்யுங்கள். இந்த பேஸ்ட்டை கண்ணுக்குக் கீழ் பூசி, காய்ந்ததும் கழுவுங்கள்.
* கருவளையத்தைப் போக்கி, நல்ல நிறத்தைத் தருவதுடன் சருமத்தை மிருதுவாக்கும் தன்மையும் இந்த சிகிச்சைக்கு உண்டு.
* இளம் வயதிலேயே சிலருக்கு தோல் துவண்டு வயதான தோற்றத்தைத் தரும்.
* இதற்கு அருமையான வைத்தியம் எலுமிச்சையில் இருக்கிறது. துருவிய உருளைக்கிழங்கு - அரை கப் எலுமிச்சைச் சாறு - அரை டீஸ்பூன், சிவப்பு சந்தனம் - ஒரு டீஸ்பூன், இந்த மூன்றையும் சுடு தண்ணீரில் கலந்து பேஸ்ட் ஆக்குங்கள்.
* முகத்தை ஒரு மெல்லிய மஸ்லின் துணியால் மூடி, அதன் மேல் இந்த பேஸ்ட்டைத் தடவி அரை மணி நேரம் கழித்துக் கழுவுங்கள். முகத்தில் உள்ள தோல் பகுதி இறுகி, இளமையான தோற்றம் கிடைக்கும்.

No comments:

Post a Comment