தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 27 ஏப்ரல், 2014

அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட மகள்: வெறித்தனமாக அடித்து துவைத்த தாய்......

கரீபியன் தீவைச் சேர்ந்த பெண்மணி தனது மகளை பெல்ட்டால் அடித்த காணொளி இணையதளத்தில் வெளியாகி, அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

டிரினிடாட் அண்ட் டொபாகோ நாட்டை சேர்ந்த பார்ட்லெட் என்ற பெண்மணி தனது 12 வயது மகள், அரை நிர்வாண புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்துள்ளாதாக கூறி பெல்ட்டால் அடித்துள்ளார்.
தனது மகளை பெல்டால் அடித்த இந்த 6 நிமிட காணொளி தற்போது இணையதளத்தில் வெளியாகி இதுவரை 43,000 நபர்கள் கண்டுள்ளனர்.
இந்த காணொளியை கண்டவர்களில் சிலர், தாயின் தரப்பில் நியாயம் உள்ளதாகவும், மேலும் பலர் இது முறைகேடாக நடந்துள்ளதாகவும் கூறியுள்ளார்கள்.
இதனையடுத்து பார்ட்லெட்யின் மற்ற இரு மகள்கள், இணையதளத்தில் மற்றொரு காணொளி வெளியிட்டுள்ளார்கள். இதில் பார்ட்லெட் ஒரு நல்ல தாய் என்றும், மேலும் தங்கள் அக்காவின் நன்மைக்காகவே இவ்வாறு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள்.
இதுகுறித்து பார்ட்லெட் கூறுகையில், தனது மகளை நல்வழியில் கொண்டு செல்வதற்காக சிறைக்கு செல்ல கூட தயராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக