தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 25 மார்ச், 2014

இந்து தர்ம நுட்பங்கள் - காய்கறிகளை பறிப்பது ஜீவ ஹிம்சையா? ஒரு தெளிவான பார்வை:-


ஆடு - கோழி - மாடு போன்றவை ஐயறிவு கொண்ட உயிரினங்கள். மரம் - செடி - கொடிகள் ஓரறிவு கொண்ட உயிரினங்கள். பிராணிகள் தாங்கள் கொல்லப் படும் பொழுதும் - வதைக்கப் படும் பொழுதும், பரிதாபமான முறையில் வலியால் கதறித் துடிக்கின்றன. 

ஐயறிவு உயிரினங்களைப் போல் நரம்பு மண்டலமோ (Nervous System) - புலன்கள் சார்ந்த உணர்ச்சிகளை உணரும் அமைப்போ (Sensory System) மரம் - செடி - கொடிகளுக்கு கிடையாது. பழங்கள் - காய்கறிகள் இவைகளைப் பறித்த பின்னரும் மரமோ, செடியோ மடிவதில்லை. காலத்துக்கு காலம் தளிர் விடுவதும் பூப்பதும் காய்ப்பதும் பழுப்பதும் இயற்கை.

தெய்வத் திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள் இது குறித்த ஒரு கேள்விக்கு 'செடி கொடிகளை வேருடன் பிடுங்குவதில் சிறிது பாவம் உண்டு. காய்கறிகளை எடுப்பது பாவம் ஆகாது. இது நமக்கு நகமும் முடியும் அகற்றுவது போல்' என்று அறத்தை அறிவுறுத்துகிறார்.

திருமந்திரம் - கொல்லாமை:-
கொல்லிடு குத்தென்று கூறிய மாக்களை
வல்லடிக் காரர் வலிக்கயிற்றால் கட்டிச்
செல்லிடு நில்லென்று தீவாய் நரகிடை
நில்லிடும் என்று நிறுத்துவர் தாமே!!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக