தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 13 மார்ச், 2014

மரண வீடுகளில் இறந்தவரை கடவுளாகப் பாவித்து அபிடேகம் செய்யும் முறை கிரித்தியம்


மரண வீடுகளில் இறந்தவரை கடவுளாகப் பாவித்து அபிடேகம் செய்யும் முறை கிரித்தியம் எனப்படுகிறது .
திருமுறைகள் இதற்க்கு விசேடமாக இல்லை ,சடங்கள் எல்லாம் சிவனே ,விருப்பு வெறுப்பு அற்ற நிலை ,
இதனால் ஓதுவார்கள் ஓதுவது சிவனாகக் கருதியே !!

திருப்பொற் சுண்ணம் சிவனை முதன்மைப்படுத்தி பாடப் பெற்றது. மாணிக்கவாசகர் தில்லை வழியாகச் சென்று கொண்டிருக்கும் போது மகளிர் பாட்டுப் பாடிப் பொற்சுண்ணம் இடித்துக் கொண்டிருப்பதைக் கண்ணுற்றார். பொற் சுண்ணம் என்பது அழகிய வாசனைப் பொடி என்பதாகும். இச்சுண்ணம் பல்வேறு வாசனைப் பொருட்களை ஒன்று சேர்த்து இடிக்கப்படுவதாகும்.

இதை இடிக்கும் போது களைப்புத் தோன்றாத விதத்தில் மகளிர் வாய்க்கு வந்தபடி பாடல்களைப் பாடிக் கொண்டு சுண்ணத்தை இடித்தனர். மாணிக்கவாசக சுவாமிகள் அவர்களுக்கென தாள கதிக்கு ஏற்ப அமைக்கப் பெற்ற ஓசை நயம் கொண்ட இருபது பாடல்களைப் பாடியுள்ளார். இதைப் போன்று தான் மாணிக்கவாசக சுவாமிகள் திருவெம்பாவைப் பாடல்களையும் பாடியுள்ளார்.

குளிர்மிக்க மார்கழி மாதத்தில் மகளிர் நீராடிக் கொண்டிருந்ததைக் கண்ணுற்ற வாகீசர் சிவனின் புகழைப் பாடித் துயில் எழுப்பும் வகையில் மற்றொரு திருவாசகமாக திருவெம்பாவையை பாடியுள்ளார். அதேபாணியில் இப் பொற் சுண்ணப் பாடல்களும் மகளிர் சிவனின் புகழைப்பாடி பொற்சுண்ணம் இடிப்பதற்கெனப் பாடப் பெற்றது.

பொற்சுண்ணம், தாள இசையோடு கூடிய பாடல்

திருப்பொற் சுண்ணப் பாடல்கள் பற்றிக் கூறுவதற்கு முன் திருப்பொற் சுண்ணம் என்றால் என்ன, அது எதற்குப் பயன்படுத்தப்படுகின்றது. அதன் மகிமை போன்றவற்றை சற்றுச் சுருக்கமாகக் கூறுவது இதற்குப் பொருத்தமாக விருக்கும். வாதவூரர் புராணம் பாடல் 63ல் கூறப்பட்டவாறு மாணிக்கவாசகர் தில்லை ஊர் வழியாகச் சென்று கொண்டிருக்கும் போது மகளிர் பொற்சுண்ணத்தை உரலில் போட்ட உலக்கையால் இடிப்பதைக் கண்டு அவர்களுக்கென திருப்பொற் சுண்ணப் பாடல்களைப் பாடியுள்ளார்.

இச் சுண்ணம் பல்வேறு வகைப்பட்ட பொருட்களுடன் வாசனைத் திரவிய பொருட்களும் சேர்த்து இடிக்கப்படுவதாகும். சிலப்பதிகாரத்தில் வரும் மாதவி குளிப்பதற்கு பயன்படுத்திய பொடி மிகப் பல வாசனைப் பொருட்கள் சேர்த்து இடிக்கப்பட்டதாகும். மிகப் பழங்காலத்தில் இத்தகைய சுண்ணத்தைக் கிராமங்களில் வாழும் மக்கள் தாங்களே இடித்துத் தயாரித்துக் கொண்டனர் என அறிய முடிகின்றது.

இவ் வகைச் சுண்ணத்தை மகளிர் குளிப்பதற்குப் பயன்படுத்திய தோடு சாதாரண நிலையிலும் பூசிக் கொண்டனர். கோவில்களுக்குச் செல்லும் சைவப் பிரமுகர்களின் தலையிலும் இது தெளிக்கப்பட்டது. மங்களகரமான விழாக்களின் போது இப்பொடி தெளிக்கப்பட்டு வந்துள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக இறைவனு க்கு அபிஷேகப் பொருளாகவும் பொற்சுண்ணம் பயன்படுத்தப்படு கின்றது.

பொற்சுண்ணத்தை இருவரோ அல்லது நால்வரோ எதிர் எதிராக நின்று கொண்டு இடித்தனர் என்பதை அறிய முடிக்கின்றது. உரலில் உள்ள சிறிய குளியில் ஓர் உலக்கைக்கு மேல் ஒரே நேரத்தில் உள்ளே செல்ல முடியாது எனவே இடிப்பவர்கள் ஒருதாள கதியை அடிப்படையாகக் கொண்டு, ஒன்று, மூன்று, இரண்டு, நான்கு என்ற முறையில் மாறி மாறி இடித்தனர் என்பதைத் தொல்காப்பியத் தில் குறிப்பிடப்படும் வற்றைப் பாட்டு மூலம் அறிய முடிகின்றது.

இந்த தாளக் கதிக்கு ஏற்ப உலக்கை விள வேண்டுமானால் அதற்கேற்ற இசையோடு கூடிய பாடல் ஒன்று வேண்டும். திருவாசகத்தில் வரும் திருப்பொற் சுண்ணம் இந்த தாள கதிக்கு ஏற்ப அமைக்கப் பெற்ற ஓசை நலம் கொண்ட இசைப்பாடல்களைக் கொண்டதாகும். திருவாசகத்தின் பிற பாடல்களில் காணப் பெறாத இசையமைப்பு திருப்பொற்சுண்ணத்தில் மட்டும் அமைந்திருத்தலைக் காணலாம்.

திருப் பொற் சுண்ணம் எல்லா உயிர்க்கும் தலைவனாகிய இறைவனின் புகழை உரலின் எதிரெதிராக நிற்கும் பெண்கள் பாடிக் கொண்டே மாறிமாறி இடிக்கும் தாள கதியில் அமைந்துள்ளது. இறைவனின் புகழைப் பாடும் போது, மனம் இறையன்பில் மூழ்கியிருக்க, பாடலின் தாள கதிக்கேற்ப, உலக்கை பிடித்த கைகள் மட்டும் மாறி மாறி இடிக்கின்றதைக் காணலாம்.

திருப்பொற் சுண்ணமும் ஈமக்கிரியையும்

திருப்பொற் சுண்ணம் மங்களகரமான பாடல் சொல்லப் போனால் சைவக் கோவில்களில் உற்சவ காலங்களில் கொடியேற்றப்படும் போதும், கொடி இறக்கப்படும் போதும் திருப்பெற் சுண்ணம் படிக்கப்படுகின்றது. அப்பேர்பட்ட பாடலை அமங்கல நிகழ்வில் மரணச் சடங்கின் போது படிக்கலாமா என்ற ஐயப்பாடு சிலர் மத்தியில் தோன்றுகிறது.

இத்தகைய ஐயப்பாட்டை சில பாமர மக்கள் மாத்திரமன்றி தமது நூலில் தமிழ் நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் அ.சு. ஞானசம்பந்தன் திருவாசகம் என்ற தமது நூலில் திருப்பொற் சுண்ணப் பாடல்கள் பற்றிக் குறிப்பிடுகையில் பின்வருமாறு தனது ஆதங்கத்தைத் தெரிவிக்கின்றார் “சைவத்திலும் திருவாசகத்திலும் எல்லையற்ற ஈடுபாடு கொண்டு, அன்றாடம் திருவாசகப் பாராயணம் செய்யும் யாழ்ப்பாண வாழ் சைவப் பெருமக்கள் வீட்டிலும் தென்பாண்டிச் சைவர் கள் பலர் வீட்டிலும் இன்றும் ஒரு தவறு நிகழ்ந்து வருகின்றது. மங்களகரமான பொற்சுண்ணம் இடிப்பதை என்ன காரணத்தினாலோ, சாவு வீட்டில் செய்து வருகின்றனர்.

இது சிந்திக்கப்பட வேண்டிய ஒன்று” எனப் பேராசிரியர் கூறியுள்ளார். இவ்வாறு சந்தேகம் பொதுவாக ஏற்படுவது இயல்பு தான். ஆனால் சைவ சமயத்தின் சித்தாந்தத்தை சற்று ஆழமாக நோக்கும் போது அதில் தவறில்லை என்று எண்ணத் தோன்று கின்றது. பரமாத்மா இறைவன் மனிதர் களாகிய எம் ஆத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் இடையே தொடர்புள்ளது.

ஈற்றில் ஆத்மா பரமாத்மாவுடன் இரண்டறக் கலக்கின்றது. அதுதான் முக்தி பேறு “சீவன் சிவனென்றறி” என்று யோக சுவாமிகள் கூறி வைத்தார். சிவனுக்கும் சீவனுக்கும் உள்ள தொடர்பை திருமூலர் பின்வருமாறு கூறுகின் றார். “தெள்ளத் தெளிர்ந்தார்க்கு சீவன் சிவலிங்கம்” “உள்ளம் பெரும் கோயில், ஊன் உடம்பு ஆலயம்” என்றும் கூறப்பட்டுள் ளது.

மாணிக்கவாசகர் கடவுளை சோதி வடிவில் கண்டு பாடியவர். அவர் அருளிய திருவாசகப் பாடல்களில் பெரும்பாலும் முழுமுதற் கடவுளாகிய சிவனைப் புகழ்ந்து பாடியுள்ளார்.

ஆதலி னால் ஒருவர் இறந்தவுடன் அவரின் ஆத்மா இறைவனைச் சென்றடைவதாகக் கருதி, சைவப் பெருமக்களின் மரணச் சடங்கின் போது திருப்பொற் சுண்ணப்பாட்டு படிக்கப்படுகிறது. இடிக்கப்படும் பொற்சுண்ணம் இறந்தவருக்கு அளிக்கப்படு கின்றது. ஆத்மா சிவகதியடைய வேண்டு மென்பதே இதன் நோக்கமாகும். இற்றைக்கு பல்லாண்டு காலமாக இந்த வழக்கு இருந்து வருகின் றது. மேலும் சைவப் பெருமக்க ளால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தொன்றாகும்.

சிவம்தான் எல்லாம்

திருப்பொற் சுண்ணப் பாடல் களில் நிறைய சமய தத்துவப் பொருள் மேலோட்டமாகக் காணப் படுகின்றது. முதலாவது பாடல் “முத்து நல் தர்மம் பூ மாலை தூக்கி முளைக்குடம் தூபம் நல் தீபம் வைமின்” என்று தொடங்குகிறது.

சிவன் நீராடும் பொழுது பூசுவதற்குரிய சுண்ணத்தை இடிக்கத் தொடங்குமுன் வீட்டை சுத்தம் செய்து அலங்கரிக்குமாறு கோரப்படுகின்றது. இரண்டாவது பாடல் “பூ இயல் வார் சடை எம்பிரானுக்கு பொன் திருச்சுண்ணம் இடிக்க வேண்டும்.” என்று தொடங்குகிறது. அதாவது மலர் நிறைந்த சடையையுடைய இறைவனுக்கு அபிஷேகப் பொருளாகிய பொற்சுண்ணத்தை இடிக்கத் தொடங்க வேண்டும்.

பத்தாவது பாடல். இது நடனமாடிக் கொண்டு பொற்சுண்ணம் இடிப்பது. பொற்சுண்ணம் இடிக்கும் மகளிரை முன்னிலைப்படுத்திப் பாடப்பட்டது. “சித்தம் சிவனொடும் ஆட ஆட” என்ற வரி கவனிக்கப்பட வேண்டியது. சித்தத்தை சிவன்பால் இருத்தி ஆடும்படி கூறப்படுகின்றது. பாடல் 13 ல் முதலில் வழமை போன்ற பெண்டிர் விழித்துரைக்கப்படு கின்றனர்.

பின்னர் எம்பெருமானைப் பற்றி குறிப்பிடுகையில்” இமவான் மகட்கு தன்னுடைக்கேள்வன் மகன், தகப்பன், தமையன்” என மாணிக்க வாசகர் குறிப்பிடுகின்றார். சிவன்தான் எல்லாம்- அதாவது கணவன், மகன், தந்தை என வியாபித்திருக்கிறார். அப்பேற்பட்ட தலைவனின் பாதவிந்தாரத்தைப் பூசித்து பொற்சுண்ணம் இடிப்போம் என்று கூறுகின்றார்.

பாடல் 15ல் - எளிதில் அடைய முடியாத பரம்பொருள்- அத்தகையவர் எமது சித்தத்தில் புகுந்து இனிமை தரவல்லவனை, அல்லாமல் பிறப்பறுத்து ஆட் கொண்ட கூத்தனை நாம் புகழ்ந்து பாடிப் பொற்சுண்ணம் இடிப்போம். பாடல் 16ல் சிவனின் புகழ் பற்றியும் பாடல் 17 ல் சிவபெருமானின் அணிகலன்கள் பற்றிப் புகழ்ந்து பாடப்படுகின்றது. தேவரும் பூவுலகோரும் உய்யும் பொருட்டு ஆலகால விசத்தை உண்ட சிவனைப்பாடி நாம் திருப்பொற்சுண்ணம் இடிப்போம். 20 வது கடைசிப் பாடலில் முழு சைவசித்தாந்தக் கருத்துக்கள் பொதிந்துள்ளன.

அவன்தான் (சிவன்) வேதமும், வேள்வியும்

அவன்தான் எல்லாம் பொய்மையும் மெய்மையும்

சுடரொளியும் அவனே, இருளும் அவனே

துன்பமும் அவனே, இன்பமும் அவனே

பாதியுமாய் இருக்கின்றாய், முழு நிறைவாகவும்- இருக்கின்றாய்

நீயே பந்தபாசத்தில் கட்டுண்டு இருப்பவனும் நீயே, மோட்சமும்

தொடக்கமும் நீயே முடிவும் நீயே

அவன்தான் (சிவன்) வேதமும், வேள்வியும் அவன்தான் எல்லாம், பொய்மையும், மெய்மையும், சுடரொளியும் அவனே இருளும் அவனே, துன்பமும் அவனே இன்பமும் அவனே, பாதியுமாய் இருக்கின்றாய், முழு நிறைவாகவும் இருக்கின்றாய், பந்த பாசத்தில் கட்டுண்டு இருப்பனும் நீயே, மோட்சமும் நீயே தொடக்கமும் நீயே முடிவும் நீயே. அப்பேற்பட்ட பரம் பொருளை நீராட்டுவதற்கு திரவியப் பொடியை இடிப்போமாக என விழித்துரைத்துக் கொண்டு மாணிக்கவாசக சுவாமிகளின் திருப்பொற்சுண்ணப் பாடல் நிறைவு பெறுகின்றது.

திருவாசகப் பாடல்களைப் படிப்பதன் மூலம் ஆன்ம விமோசனம் உண்டாகும் என்ற பொதுவான நம்பிக்கை வைசமக்கள் மத்தியில் உள்ளது. ஒருவரின் உயிர் பிரியும் தறுவாயில் அவர் முன்னிலையில் திருவாசகத்தை பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ சூழவுள்ள சுற்றத்தார் படிப்பது வழமையாகும்.

இதனைக் கேட்டு அவரின் கடைசித் சிந்தனைகள் இறைவன்பால் ஈர்க்கப்பட்டு மோட்ஷத்துக்கு இட்டுச் செல்லும் என நம்ப்படுகின்றது. சைவசமய எழுச்சிக்கும் காரணமாயிருந்த ஸ்ரீல ஸ்ரீ ஆறுமுகநாவலர் மரணப்படுகையில் இருக்கும் போது திருவாசகத்தைப் படிக்கும் படி கேட்டுள்ளார். திருவாசகம் படிப்பதனால் விமோசனம் கிடைக்கும் என்ற கருத்துக்கு வலுவூட்டும் வகையில் மற்று நிகழ்வைக் குறிப்பிட முடியும்.

ஓலைச் சுவடிகளை அச்சிட்டு பிரசுரித்து தமிழ் இலக்கியத்திற்கு அரிய சேவை ஆற்றிய கலாநிதி யூ. வி. சாமிநாதை யர் தமது உயிர் பிரியப் போகின்ற தென்பதை உணர்ந்து திருவாசகப் பாடல்களைப் படிக்க வைத்துள்ளார். இந்த வழமையை எமது மூதாதையர்கள் வெகு சிரத்தையோடு அனுசரித்து வந்துள்ளமை கண்கூடு.

இந்த வகையில் ஒருவரின் மரணத்தறுவாயில் தேவாரம், திருவாசகம் குறிப்பாக எமது மூதாதையினால் படிக்கப்பட்டு வந்தது கண்கூடு. நாகரீகம் மிக்க கலியுகத்தில் இது அருகி வருவது வருந்தத்தக்கது. “ஒவ்வொரு ஜீவான்மாவும், உள் நிறைந்த தெய்வத் தன்மையுடையது” என்று சுவாமி விவேகாந்தனர் கூறியிருப்பது கருத்திற் கொள்ளப்பட வேண்டியது


நமது மூதாதையர்களான பித்ருக்கள் அவர்கள் நினைக்கிற போதெல்லாம் பூலோகத்திற்கு வர இயலாது. ஆனால் அமாவாசை, மாதப்பிறப்பு, இறந்த அவர்கள் திதி மற்றும் மஹாளயபட்ச தினங்களில் தான் அவர்கள் பூலோகத்திற்கு வர அனுமதிக்கப்படுகிறார்கள். எனவே அவர்கள் சூட்சும தேகத்துடன் நம்மை தேடி பூலோகத்திற்கு வருகின்ற நாட்களில் நாம் பித்ரு தர்ப்பண பூஜைகளை நிறைவேற்றிட, அவர்களும் அதை இங்கு நேரடியாகப் பெற்று ஆசியளிக்கின்றனர்.
மஹாளய பட்சம் என்றால் பித்ருக்களுக்கு முக்கியமான காலம் என்று பொருள். அந்த மஹாளய பட்ச காலத்தில் விச்வே தேவாதி தேவதைகள் பித்ரு லோகத்தில் இல்லாமல் பூலோகத்தில் எத்தனை ஜீவராசிகள் இருக்குமோ அத்தனை ஜீவராசிகளுக்கும், நமக்கும் அருள் பாலிப்பதற்காக இங்கே சஞ்சரிப்பதாக அறநூல்கள் கூறுகின்றன. அகவே அந்த மஹாளய பட்ச காலத்தில் அவசியம் பித்ரு தேவதைகளுக்க தர்ப்பணம், ஹிரண்ய ச்ரார்த்ம், அன்ன ச்ரார்த்தம் இம்மூன்றுள் எதையேனும் ஒன்றை விடாமல் செய்ய வேண்டும்.
உங்கள் சுற்றத்திடமும் நட்பிடமும் பகிர்ந்துகொள்ளவும். பித்ருகடனை அவர்கள் தீர்ப்பதற்கு உதவும் புண்ணியம் உங்களுக்கும் கிடைக்கும். உங்கள் பித்ருக்களும் மகிழ்ந்து நல்லாசி வழங்குவார்கள்.
சூரியனும் சந்திரனும் சேரும் அமாவாசையன்று பித்ருக்களுக்கு பசியும் தாகமும் அதிகமாக ஏற்படும். நாம் இங்கு செய்யும் சிரார்த்தம் தர்ப்பணம் மூலம் தான் அவர்களுக்கு உணவும் நீரும் கிடைக்கும். எனவே அந்த கடமையை செய்ய நாம் தவறுகிற போது அவர்கள் பசி தாகத்தால் அவதிப்பட்டு சபிக்க வாய்ப்பிருக்கிறது. எனவே உங்கள் நீத்தார் கடனை தீர்க்க இந்த மஹாலய காலத்தை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
சிரார்த்தம், திதி, தர்ப்பணம், மஹாளயம் மற்றும் பித்ரு தோஷ பரிகாரம் – ஐயம் போக்கும் முழு தகவல்கள் – 60 !
1. வீட்டில் பசியால் வாடும் தனது வயதான பெற்றோர்களுக்கு சாப்பாடு கொடுக்காமல் தெய்வத்திற்கு சர்க்கரைப் பொங்கல் போன்ற பொருட்களை நிவேதனம் செய்வதாலும் ஆடை இன்றி பெற்றோர்கள் கஷ்டப்படும் போது தெய்வங்களுக்கு பட்டு வஸ்திரங்களை அணிவிப்பதாலும் எந்த பலனும் கிடைக்காது. பித்ருதோஷம்தான் ஏற்படும்.
2. பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய மாதத்தில் தர்ப்பணம் நடைபெறும் நாளுக்கு முன்பாக தர்ப்பணம் செய்பவர் தனது வீட்டில் தினசரி தெய்வங்களுக்கு செய்யும் பூஜையைத் தவிர வேறு எந்த ஒரு விசேஷமான பூஜைகளையோ ஹோமத்தையோ செய்யக் கூடாது.
3. தர்ப்பணம் செய்ய வேண்டிய மாதத்தில் சிரார்த்தம் செய்யும் முன்பாக தங்கள் வீட்டு மங்கள நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது.
4. தர்ப்பணம் செய்யும் நபர் தர்ப்பணம் செய்யும் முன்பாக அந்த மாதத்தில் மற்ற இடங்களில் நடை பெறும் எந்த ஒரு பூஜைகளிலும் ஹோமங்களிலும், ஆலய நிகழ்ச்சிகளிலும் தனது பெயர் சொல்லி சங்கல்பம் செய்து கொள்ளக் கூடாது.
5. பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாளன்று, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து மூடிக்கும் வரை, வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை நிறுத்தி வைத்து விட்டு, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிந்த பின்னர் தினசரி செய்ய வேண்டிய தெய்வ சம்பந்தமான பூஜைகளைச் செய்ய வேண்டும்.
6. சூரியனும், சந்திரனும் ஒன்றாக இணைந்திருக்கும் நாளான அமாவாசையன்று பித்ருக்களுக்கு பசியும் தாகமும் அதிகமாக ஏற்படும் என்று தர்ம சாஸ்திரங்கள் கூறுகின்றன.
7. அமாவாசை திதியை பித்ரு திதி என்று கூறி அன்றைய நாளில் இறந்தவர்களின் பசியையும் தாகத்தையும் போக்க கறுப்பு எள் கலந்த தண்ணீரால் தர்ப்பணம் செய்ய வேண்டும். இதனால் இறந்தவர் களின் பசியும் தாகமும் விலகி ஆசி வழங்குவார்கள்.
8. அமாவாசை திதியன்று ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அந்தந்த வீட்டு பித்ருக்கள் வந்து நின்று கொண்டு தங்களுக்குத் தரப்படும் எள் கலந்த தண்ணீரை பெற்றுக் கொள்வதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நம்பப்படுகிறது. அன்றைய தினம் வீட்டில் தர்ப்பணம் செய்து அவர்களுக்கு எள் கலந்த தண்ணீரை தரப்படவில்லை என்றால் அவர்கள் ஏமாற்றமடைந்து வருத்தப்பட்டு கோபத்தோடு செல்கிறார்கள் என்றும், ஒரு சில பித்ருக்கள் சாபம் கூட தந்து விட்டுச் செல்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
9. மறைந்த முன்னோர்களுக்கு நாம் செய்யும் சிரார்த்தங்களும், தர்ப்பணங்களும் நமது குடும்பத்தினரின் நன்மைக்காவே செய்யப்படுகிறது. அகவே தவறாது சிரார்த்தத்தையும் தர்ப்பணங்களையும் செய்ய வேண்டும்.
10. மார்கழி, தை, மாசி, பங்குனி ஆகிய நான்கு மாதங்களிலும் கிருஷ்ணபட்ச அஷ்டமி திதியன்று அஷ்டகை எனப்படும் சிரார்த்தம் செய்ய வேண்டும்.
11. மன்வாதி 14 நாட்களிலும் யுகாதி 4 திதிகளிலும் பித்ருக்களுக்கு கொடுக்கப்படும் தர்ப்பணம் ஆயிரம் ஆண்டுகள் வரை முன்னோர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.
12. மன்வாதி யுகாதி நாட்களில் செய்யப்படும் புண்ணிய நதி நீராடல், ஜெபம், ஹோமம் ஆகியவை கூடுதல் பித்ரு புண்ணியத்தைத் தரும்.
13. தமிழ் மாத பிறப்பன்று பித்ருக்களை வழிபட்டு சூரியனை வணங்குவதற்கு மிகச் சிறந்த நாள். அன்று சூரியனுக்குச் செய்யும் பூஜை மற்றும் ஏழைகளுக்குச் செய்யப்படும் தானம் ஆகியவை அளவற்ற பலனைத்தரும்.
14. ஒரு வருடத்தில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாட்கள் மொத்தம் தொன்னூற்று ஆறு நாட்கள். இவைகளில் 14 மன்வாதி நாட்கள், யுகாதி நாட்கள் 4, மாதப்பிறப்பு நாட்கள் 12, அமாவாசை 12, மஹாளய பட்சம் 16, வ்யதீபாதம் 12, வைத்ருதி 12, அஷ்டகா 4, அன்வஷ்டகா 4, பூர்வேத்யு 4 நாட்கள். இந்த நாட்களில் செய்யப்படும் தர்ப்பணத்தால் பித்ருக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்கள்.
15. இந்த 96 நாட்களை விட மிக மிக உத்தமமான நாள் என்பது தாய் தந்தையருக்கு சிரார்த்தம் செய்ய வேண்டி நாள்தான்.
16. துவாதியை விட அமாவாசையும், அமாவாசையை விட தாய் தந்தையருக்கு சிராத்தம் செய்யும் நாட்களும் மிகவும் புண்ணியங்களைத் தரும். ஆகவே அதிக புண்ணி யங்களைத் தரும் தந்தையரின் சிரார்த்தத்தை எக்காரணம் கொண்டும் செய்யாமல் விட்டு விடக் கூடாது.
17. ஒருவன் தனது தாய் தந்தைக்கு சிரார்த் தம் செய்யாமல் எனக்குச் செய்யும் பூஜைகளை நான் ஏற்றுக் கொள்வதில்லை என விஷ்ணுவும் சிவனும் கூறியுள்ளனர்.
18. இறந்தவருக்கு வருஷம் ஒரு முறையாவது சிரார்த்தத்தைச் செய்ய வேண்டும். ஏனென்றால் அன்றைய நாளன்று இறந்த ஜீவன் காற்று வடிவில் இறந்தவரின் குழந்தைகள் வாழும் வீட்டின் வாசலில் வந்து அவர்கள் செய்யும் சிரார்த்தத்தில் தரும் உணவை சாப்பிடுவதற்காக காத்துக் கொண்டிருக்குமாம்.
19. முறையாக உணவு செய்து வைத்து, ஹோமம், பிண்டதானம் செய்து, நடத்தப்படும் சிரார்த்தத்துக்கு பார்வணசிரார்த்தம் என்று பெயர்.
20. ஹோமம் பிண்டதானம் போன்ற சில காரியங்கள் இல்லாமல், உணவு மட்டும் வைத்து செய்யப்படும் சிரார்த்தம் சங்கல்ப சிரார்த்தம் எனப்படும்.
21. ஒருவருக்கு சாப்பாடு போட என்னென்ன பொருட்கள் தேவையோ அரிசி காய்கறிகள், பருப்பு போன்ற பொருட்கள் அனைத்தையும், சமைக்காமல் அப்படியே தட்சணையுடன் அளித்துச் செய்யும் சிரார்த்தம் ஆம சிரார்த்தம் எனப்படும்.
22. சிரார்த்தம் செய்தால் எவ்வளவு பணம் செலவாகுமோ அந்த பணத்தை நான்கு மடங்கு அதிகமாக்கி தட்சணையாக தந்து செய்வது ஹிரண்ய சிராத்தம் எனப்படும்.
23. சிரார்த்தம் செய்ய எந்த ஒரு வசதியும் இல்லாதவர்கள் கருப்பு எள் கலந்த தண்ணீரை தர்ப்பணமாக செய்யலாம்.
24. சிரார்த்தம் நடத்தப்படும் இடம், சிராத்தம் செய்யும் நேரம், சிரார்த்தத்தில் பித்ருக்களாக பாவித்து பூஜிக்கப்படும் நபர், சிரார்த்தத்தில் உபயோகிக்கும் பொருட்கள், சிராத்தம் செய்யும் நபர் ஆகியவை சிரார்த்தத்துக்கு முக்கியமானவை. இவைகள் தூய்மையானவைகளாக இருந்தால் சிரார்த்தத்தின் முழுமையான பலன்கள் கிடைக்கும்.
25. பித்ருக்களை சிரார்த்தம் செய்ய வேண்டிய நாளன்று முறையாக ஹோமம் செய்து சாப்பாடு போட்டு சிரார்த்தம் செய்து அவர்களுக்கு உணவளித்து, அவர்களை திருப்தி செய்தால் அவர்கள் அவர்களது குடும்பத்தினருக்கு நீண்ட ஆயுள், அழியாப்புகழ், உடல் வலிமை, செல்வம், பசுக்கள், சுகம், தானியங்கள் ஆகியவற்றை தருகிறார்கள்.
26. நமது பித்ருக்களிடத்தில் சிரார்த்தத்தை சிரத்தையுடன் செய்வதாகவும், நல்ல உயர்ந்த ஆடை, தீர்த்த பாத்திரம் சிரார்த்தத்தில் வாங்கி த்தருவதாகவும், பிரார்த்தனை செய்து கொண்டு அவ்வாறே சிரார்த்தத்தை நடத்தினால் நிச்சயம் உங்கள் விருப்பம் நிறைவேறும். விரும்பிய பலன் கைகூடும்.
27. ஒரே நாளில் ஏராளமான பித்ருக்களுக்கு தனித்தனியாக பல பேர் சிராத்தம் செய்யும்போது சிரார்த்த உணவு அவரவர்களின் பித்ருக்களுக்கு எவ்வாறு சரியான முறையில் சென்றடைகிறது என்ற சந்தேகம் சிலருக்கு ஏற்படும். இதை கருத்தில் கொண்டுதான் மறைந்த முன்னோர்களின் கோத்ரத்தையும் பெயரையும் தர்ப்பணம் செய்யும்போது சொல்கிறார்கள். இதனால் ஒருவர் கொடுக்கும் தர்ப்பணம் அவரவர்களுக்கு சரியாகச் சென்றடையும்.
28. பெற்றோர்களின் வருஷ சிரார்த்தமும் மாதப்பிறப்பும் சேர்ந்தால் மாதப்பிறப்பை முதலில் செய்து விட்டு பிறகு பெற்றோர்களின் வருஷ சிரார்த் தத்தைச் செய்ய வேண்டும்.
29. அமாவாசையும் மஹாளயமும் ஒரே நாளில் வந்தால் முதலில் அமாவாசை தின தர்ப்பண பூஜைகளை செய்து விட்டு பிறகு மஹாளயத்தை செய்ய வேண்டும்.
30. பெற்றோர்களின் வருஷாந்தர சிரார்த்தமும் மன்வாதி அல்லது யுகாதியும் ஒன்று சேர்ந்தால் முதலில் மன்வாதி அல்லது யுகாதி தர்ப்பணங்கள் செய்து விட்டு பிறகு பெற்றோர்களின் வருஷ சிரார்த்தத்தைச் செய்ய வேண்டும்.
31. தாய் தந்தை இருவரில் ஒருவருக்கு மாஸிகமும் மற்றொருவருக்கு வருஷாந்திர சிரார்த்தமும் ஒரே நாளில் நேர்ந்தால், முதலில் வருஷசிராத்தம் செய்து விட்டு பிறகு மாஸிகத்தை செய்ய வேண்டும்.
32. தாய் தந்தை இருவருக்கும் ஆண்டு தோறும் செய்யும் சிரார்த்தம் ஒரே நாளில் வந்தால் முதலில் தந்தைக்கு சிரார்த்தம் செய்ய வேண்டும். பிறகு தாய்க்கு அதே நாளில் சிராத்தம் செய்ய வேண்டும்.
33. பெற்றோர் இறந்த மாதம் பட்ச திதியன்று உறவினர்களின் இறப்புத்தீட்டு அல்லது உறவினர்களுக்குக் குழந்தை பிறந்த தீட்டு ஏற்பட்டு விட்டால், தீட்டு எப்போது முடிவடைகிறதோ அன்று பிராயசித்தம் செய்தல் வேண்டும். பிறகு விட்டுப்போன சிராத்தத்தைச் செய்ய வேண்டும்.
34. இறைவனின் ரூபமான தேவதைகளை விட பித்ருக்கள் அதிமுக்கியத்துவம் வாய்ந்தவர்கள். எனவே முதலில் உங்கள் மறைந்த முன்னோர் வழிபாட்டை பிரதானமாக நடத்துங்கள்.
35. சிரார்த்தம், தர்ப்பணம் செய்யாதவன் சண்டாளனாகப் பிறப்பான் என்று புரா ணங்களில் கூறப்பட்டுள்ளது.
36. உடல் நிலை சரியில்லாதவர்கள் – யாரையாவது உதவிக்கு வைத்துக் கொண்டு சிரார்த்தம் செய்ய வேண்டும்.
37. நம்மைவிட்டு பிரிந்த நம் பித்ருக்கள் அனைவரும் சக்தி நிறைந்தவர்கள். அவர்கள் ஆசீர்வாதத்தினால் கோடி கோடியாக புண்ணியமும், செல்வமும் நமக்கு கிடைக்கும்.
38. மஹாளயபட்சம் 15 நாட்களும் பித்ருக்களுக்கு தாகமும், பசியும் மிக அதிகமாக இருக்கும். அதனால் அவர்கள் அருளைப் பெற வேண்டும். அந்த 15 நாட்களில் உறவினர்கள் இறந்து விட்டால் நாம் சிரார்த்தம் செய்ய வேண்டாம் என்று சாஸ்திரம் கூறுகிறது. ஆனால் பிறகு கட் டாயமாகச் செய்ய வேண்டும்.
39. பித்ரு வர்க்கம், மாத்ரு வர்க்கம் பித்ரு காருணீக வர்க்கம் என்று பித்ருக்கள் மூன்று வகைப்படுத் தப்பட்டுள்ளார்கள். அதாவது அப்பா வகையை சார்ந்த பித்ருக்கள் பித்ருவர்க்கம் எனப்படுவார்கள். அம்மா வகையை சார்ந்த பித்ருக்கள் மாத்ருவர்க்கம் எனப்படுவார்கள். சித்தப்பா, மாமா, குரு, நண்பர்கள் காருணீகவர்க்கம் எனப்படுவார்கள். இவர்களை நினைவு கூறி தர்ப்பணங்களை செய்ய வேண்டும்.
40. மக்களுக்கு தொண்டாற்றி, சுயநலமின்றி அரிய இறைப்பணிகளைப் புரிந்தோர் மட்டுமே பித்ருலோகம் அடைகின்றனர் என்பதை கருடபுராணம் தெளிவாக எடுத்துக் கூறுகின்றது.
41. நமக்காக எத்தனையோ கஷ்டங்களை தாங்கிய நம் பித்ருக்களுக்கு, மஹாளபட்சம், அமாவாசை போன்ற நாட்களில் வெங்காயம், பூண்டு, வாசனை திரவியங்கள் போன்றவை வேண்டாம்.
42. கார்த்திகை மாதம் உத்திராயண புண்ணியகாலம் சுக்ல பட்சம், பவுர்ணமி திதியில் தானம் செய்ய வேண்டும். கிருஷ்ணபட்சம் (தேய்பிறை) துவாதசி திதியில் தானங்கள் அளிக்கலாம்.
43. எள், உப்பு, பொன், பருத்தி ஆடை, இரும்பு ஆகியவற்றை தானம் அளிப்பது மிகவும் நல்லது. தானம் பெற வருபவரை மிகுந்த மரியாதையுடன் நடத்தி தானமளிக்க வேண்டும்.
44. பித்ருக்கள் எங்கிருந்தாலும் சரி, தத்தம் சந்ததியருடைய நல்வாழ்விற்காகப் பாடுபடுகின்றனர் என்பதில் எள்அளவும் சந்தேகம் கிடையாது.
45. ஒருவர் மரண படுக்கையில் அவதிப்படும்போது அவரது மகன் அல்லது மகள் மகம் நட்சத்திரத்தன்று அகத்திக்கீரையை எருமை மாட்டிற்கு தானம் அளித்தால் மரண அவதி நீங்கும்.
46. வீட்டில் வயதானவர்கள் படுக்கையோடு அவதியுற்றால் பாய், தலையணை, படுக்கை விரிப்பு போன்றவற்றை தானம் செய்வது நன்மை அளிக்கும். எள்ளுருண்டை, கடலை உருண்டை போன்றவற்றை அளிப்பது பித்ருக்களின் ஆசியைக் கூட்டும்.
47. சாஸ்திரப்படி, சிரார்த்த காரியங்கள் செய்பவர் திருமணம் உள்ளிட்ட விழாக்களிலும் மற்றவர் வீடுகளில் உணவு, உண்ணக் கூடாது.
48. சிரார்த்தம் செய்யக்கூடியவர் முதல் நாள் முகச்சவரம் செய்யக்கூடாது. எண்ணெய் தேய்த்து குளிக்கக் கூடாது, மனைவியுடன் சேர்ந்து உறங்கக் கூடாது, பிரஷ் கொண்டு பல் தேய்ப்பதும், வெற்றிலை தாம்பூலம் போடுவதும் கூடாது.
49. மங்கள நிகழ்ச்சிகள் நம் வீட்டில் நடக்கும் பொழுது முதலில் பித்ருக்களின் ஆசியை நாம் முழுமையாக பெற வேண்டும். இது மிக, மிக முக்கியம்.
50. துவாதசி பன்னிரெண்டாம் நாளன்று பித்ரு பூஜை செய்பவன் சொர்ண லாபம் பெறுவான்.
51. திரயோதசி பதிமூன்றாம் நாளன்று பித்ரு காரியங்களை சரிவர நடத்துபவனுக்கு அறிவு, ஞான சக்தி, பசுக்கள் தேக ஆரோக்கியம், சுதந்திரத்தன்மை, சிறந்த விருத்தி, தீர்க்கமான ஆயுள் பலம், ஐஸ்வர்யம், அனைத்து பலன்களும் தவறாமல் கிடைக்கும்.
52. சதுர்த்தசி அன்று பித்ரு வழிப்பாட்டை சிறப்பாக செய்பவர்களுக்கு அவர்களுடைய பித்ருக்கள் ஆயுதங்களால் தாக்கப்பட்டு இறந்திருந்தால் திருப்தி அடைவார்கள்.
53. மஹாளய அமாவாசை என்பது மிகவும் புண்ணிய நாளாகும். அன்று நம் பித்ருக்களை நினைத்து மனதார வணங்கினால் சகல சவுபாக்கியங்களும் தேடி வரும்.
54. மஹாளய பட்சத்தின் 16 நாட்களும் சிரார்த்தம் செய்வது ஒப்பற்ற உயர்ந்த வாழ்வை அளிக்கும்.
55. தர்ப்பணம் எனும் சொல்லுக்கு திருப்திப்படுத்துதல் என்று பொருள். இதில் வரும் மந்திரங்கள் அர்த்தம் பொதிந்தவை. அற்றை நன்கு தெரிந்து கொண்டு செய்வதால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.
56. தாய், தந்தையின் இறந்த திதிகளை மட்டும் நினைவு கொண்டு தர்ப்பண காரியங்கள் செய்தால் போதும் எனும் பழக்கம் இன்று பலரிடத்தில் ஏற்பட்டுள்ளது. குடும்பத்தில் இறந்த முன்னோர்கள் அனைவரையும் நினைவு கூர்ந்து தர்ப்பண காரியங்கள் செய்ய வேண்டும். அதுதான் சிறப்பானது. முழு பலன்களையும் தரவல்லது.
57. குடும்பத்தில் சன்னியாசம் வாங்கிச் சென்றவர்களுக்கு துவாதசி அன்று மஹாளய சிரார்த்தம் செய்வது மிக முக்கியம்.
58. கோவில்கள், குளங்கள், கடல் போன்ற இடங்களில் செய்யப்படும் தர்ப்பணங்களுக்கு மிக அதிகமான சக்தி உண்டு.
59. திருவாலாங்காடு, திருவள்ளூர், ராமேஸ்வரம், திருமயம் அடுத்து வரும் அரண்மனைப்பட்டி, திருவண்ணாமலை, திருவிடைமருதூர், காசி, திருநள்ளாறு ஆகிய இடங்களில் தர்ப்பணம் செய்வது மிக சிறந்தது.

60. திலதர்ப்பணபுரி எனும் ஊரில் (திருவாரூர்- பூந்தோட்டம் இடையில் உள்ளது) தர்ப்பணம் செய்வது மிக, மிக விசேஷமாக கருதப்படுகிறது. இங்கு ஸ்ரீராமரும் லட்சுமணரும் தம் தந்தையான தசரத மகாராஜாவிற்கு தர்ப்பணம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக