தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 10 நவம்பர், 2013

ஆதி காவியம்-பகுதி ,,06 ,,


சிவன் அருகில் சக்தி நின்றாலும் அவர் கற்பனை உலகில் தனது உள்ளம் உடல் உணர்வு அனைத்தும் அவளோடு ஒன்றிவிட்டதான உணர்வில் தன்னை மறந்து நிலத்தில் கால் விரல்களால் சக்கரம் வரைந்து கொண்டு நின்றார் ,அவர் மௌனத்தை கலைக்க சக்தியே மறுபடியும் ,தன் கடமையில் கண்ணாக .அடுத்து செய்ய வேண்டிய அவசிய கருமத்தை பற்றி எடுத்து சொல்ல தொடங்கினார் .

நாம் அனைவரும் இங்கு இன்று ஒன்று கூடி பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளோம் ,நாம் ஒவ்வொருவரும் செய்யவேண்டிய பணிகளை வகுத்துள்ளோம் .நாம் தங்கு தடை இன்றி நமது பணிகளை சிறப்பாக செய்ய முடியாமல் தடுப்பதற்கும் இடையூறு செய்வதற்கும் இன்னும் ஒரு குழுவினர் இங்கு வந்து கலந்து கொள்ளாமல் .ஆணவத்தில் சுயநல செருக்கு கொண்டு மனித குலத்தை துன்புறுத்தி கொண்டு இருக்கின்றார்கள்.

இவ்வாறு சத்தி சொல்லி முடிக்கும் முன்னமே யார் அவர்கள் உடனே சென்று அவர்கள் செருக்கை அடக்கி தண்டனை வழங்குகின்றேன் என்று சிவன் கோபத்துடன் கூறினார் .

சுவாமி சாந்தம் கொள்ளுங்கள் .நான் முதலில் அவர்களை பற்றிய விபரங்களை சொல்லுகின்றேன் .பின்னர் வீரத்துடன் விவேகமும் விநோதமும் கொண்டு அவர்களை அடக்கி நல்வழிப்படுத்துவோம் என்றார் சக்தி .
சக்தி தன்னை சுவாமி என்று முதன் முறையாக அழைத்ததை எண்ணி மனம் குளிர்ந்து அவள் சொல்வதை சிவன் அமைதியாக கேட்டார் .

தாருகன் என்ற ஒரு வயோதிப முனிவர் சில காலத்துக்கு முன்னம் எனது பர்ணசாலைக்கு வந்தார் .பல திறமைகள் படைத்த அவர் எனக்கு சில கலைகள் கற்று தந்தார் .பிரதி உபகாரமாக நானும் எனக்கு தெரிந்த அனைத்து கலைகளையும் அவருக்கு கற்று கொடுத்தேன் .அவர் பக்கத்தில் ஒருவனத்தில் தனது பிள்ளைகள் உறவினர்கள் என சிறு குழுவினரோடு வாழ்ந்து வந்தார் .அவர் தாம் என்னிடம் கற்ற வசிய கலைகளையும் தாம் அறிந்த கலைகளையும் தனது பிள்ளைகளுக்கும் உறவுகளுக்கும் கற்றுகொடுத்தார்.அவர்கள் வாழும் வனத்தை தாருகா வனம் என்று அழைகின்றனர் .

அங்கு சகல கலைகளையும் கற்று வாழும் தாருகாவனத்து முனிவர்கள் தற்பெருமையின் சிகரங்கள் .ஆணவத்தின் மொத்த உருவங்கள் ,என் மூலம் கற்ற வசிய கலைகளை வைத்தே அவர்கள் பகுதிகளில் வாழும் பெண்களை தங்கள் வசப்படுத்தி சிறைப்படுத்தி சிற்றின்ப ஆசைகளை நிறைவேற்றி வருகின்றார்கள் .நானும் அந்த பெரியவரும் கலைகளை மக்கள் நலன்களுக்கு பயன்படுத்துவதற்காகவும் ,கொடிய மிருகங்களில் இருந்து தற்காத்து கொள்வதற்கும் அவற்றை மனித குலத்தின் தேவைகளுக்கு பயன்படுத்துவதற்காவும் தான் கற்று கொடுத்தோம் . ஆனால் அவர்கள் பெண்களை வசப்படுத்தவும் , தாம் வசியம் செய்த விலங்குகளை ஏவி கொண்டு ஏனைய மனிதர்களை அழிக்கும் கொடிய செயலையும் செய்து வருகின்றார்கள் .

அவர்கள் கற்ற கலைகளை மனித குலத்தின் நன்மைகளுக்கு பயன்படுத்த வேண்டும் .அவர்கள் தனித்துவமான பல்வேறு திறன் உள்ளவர்கள் .நாம் கூட அவர்களிடம் இருந்து பல விடயங்களை கற்றுகொள்ள வேண்டும் .அதனால் அவர்களை கொல்வது நல்லவிடயம் அல்ல ,அவர்கள் கர்வத்தை அடக்கி தவறுகளை புரிந்துகொள்ளவைத்து .அவர்களிடம் அகப்பட்டு உள்ள அவர்கள் செயல்களில் விருப்பம் இல்லாத பெண்களை மீட்டு காப்பாற்றவேண்டும் .மனித வாழ்வியலை ஒரு நெறி முறைக்கு கொண்டுவரவேண்டும் என்று சக்தி கூறினார் .

அவர்கள் வாழும் தாருகா வனம் .எனது பர்ணசாலைக்கு வரும் வழியில் தான் இருக்கிறது .அந்த வனபகுதியில் பல கொடிய விலங்குகள் மறைந்து இருக்கிறது .அந்த விலங்குகளை அவர்கள் ,மூலிகைகளை உபயோகித்து வசப்படுத்தி விடுவார்கள் .மரீசியாலும் என்னாலும் அந்த விலங்குகளை சில நொடிகளின் வசப்படுத்த முடியும் .ஆனால் விலங்குகளை வசப்படுத்துவது அல்ல இங்கு முக்கியம் ,விலங்குகளை வைத்து மனிதர்களை துன்பபடுத்தும் அவர்கள் கர்வத்தை அடக்குவேதே முக்கியம் .அன்று உங்களுக்கு நினைவு இருக்கலாம் நீங்கள் எனது பகுதிக்கு வந்து திரும்பியபொழுது புலி ஒன்று மிருகண்டுவை தாக்க பாய்ந்தது .அதை கூட அவர்களே ஏவி இருப்பார்கள் என்று நான் ஊகிக்கின்றேன் .இவ்வாறு போவோர் வருவோர் மீதெல்லாம் அவர்கள் மிருகங்களை ஏவி துன்பபடுத்துகின்றார்கள் .அவர்கள் வசிக்கும் பகுதிக்குள் நாம் கூட்டமாக சென்றால் எங்களுக்கு தான் ஆபத்து .எனவே நாளை அதிகாலையில் .நானும் மரீசியும் முதலில் சென்று போகும் வழியில் வரும் விலங்குகளை வசப்படுதுகின்றோம் .சுவாமி நீங்கள் பிரம்மாவுடைய இந்த எரிந்த தலை மண்டை ஓட்டை பிச்சை பாத்திரமாக ஏந்தி ,பிச்சை காரன் போல வேடம் இட்டு அவர்கள் மனைவிமார் ,பெண்கள் வசிக்கும் பகுதிக்கு செல்லுங்கள் ,விஸ்ணு ஒரு அழகான பெண் போல வேடம் இட்டு அந்த முனிவர்கள் தவம் செய்யும் பர்ண சாலைக்கு வரட்டும் .நானும் மரீசியும் ,கொடிய விலங்குகள் உங்களை தீண்டாத வாறு மறைவில் இருந்து பார்த்துகொள்கின்றோம்.

தங்கள் தவ வலிமையாலும் அழகினாலும் தாம் ஆசை கொள்ளும் அனைத்தையும் அடையலாம் என்று நினைத்து கொண்டு இருக்கும் அவள்கள் ஆசை என்ற இச்சையினால் நிற்சயம் உங்கள் பால் ஈர்க்கபடுவார்கள் .அந்த ஆசை நீராசை ஆகும்பொழுது உங்கள் மீது கோபம் கொள்வார்கள் .அந்த வேளையில் உங்களை எதிர்பார்கள் .அவர்கள் எதிர்க்கும் வேளையில் அவர்களை எதிர்த்து நாங்கள் யார் என்பதை உணர்த்தி அவர்கள் செருக்கை அடக்கவேண்டும் .அவர்கள் எதிர்க்கும் தருணத்தில் இவர்கள் அறியும் வண்ணம் பெரு நெருப்பை அங்கு உருவாக்குவேன் .அந்த வேளையில் அதை பார்த்து உங்களுடைய சிவகணங்கள் அங்கு வந்தால்போதும் அதுவரை இவர்கள் எனது பர்ணசாலை பகுதியில் இருக்கட்டும் .என்று தனது திட்டத்தை ஆதி சக்தி எடுத்து கூறினார் .

தனது வீரத்தில் அதீத நம்பிகை கொண்டு இருக்கும் சிவனுக்கு ஆதி சக்தியின் திட்டத்தில் முழுமையான சம்மதம் இல்லாவிட்டாலும் ,ஆதி சக்தி காரண காரியங்களை சரியான கணித்து அதற்கேற்ப வகுப்பவர் எதை செய்தாலும் பொறுமையாகவும் சாதுரியமாகவும் செய்பவர் அதனால் அவரது திட்டத்துக்கு உடன்பட்டார் .விஷ்ணுவும் அங்கு நின்று பார்த்து கொண்டு இருக்கும் லட்சுமியின் ஏளன சிரிப்பை பார்த்து மனதில் சஞ்சல பட்டாலும் உலக நன்மைக்காக அழகிய பெண் வடிவம் எடுக்க ஒப்புகொண்டார் .ஆனால் தன்னை ஏன் பெண் வடிவம் எடுக்க சொல்கின்றார் என்பது தாருகாவனத்து முனிவர்கள் முன் செல்லலும் வரை அவருக்கு புரியாத புதிராகவே இருந்தது.

பிரமன் குழுவினரிடம் இருந்துவிடை பெற்று அனைவரும் ஆதி சத்தியின் பர்ணசாலை நோக்கி சென்றார்கள் .அன்று இரவு பொழுதை ஆதி சக்தியின் பர்ணசாலையில் தங்கி கழிப்பது என்றும் அதிகாலையில் முனிவர்கள் தவம் செய்ய புறப்படும் வேளையில் ,அவர்கள் தங்கள் திட்டத்தை நடைமுறை படுத்துவது என்றும் தீர்மானித்து கொண்டார்கள் .ஆதி சக்தியின் பர்ணசாலையில் தங்குவது என்ற முடிவு எல்லோருக்கும் சந்தோசத்தை கொடுத்தது என்றாலும் சிவனுக்கு அதில் இருந்த சந்தோசத்தை வார்த்தைகளால் வடிக்கமுடியாது உணர்வுகளால் மட்டுமே உணர்ந்துகொள்ள முடியும்.

இன்றுதானே என்னை முதல் முதலாக சுவாமி என்று அழைத்தாள் அதற்கு காரணம் என்ன என்னை அவளும் விரும்புகின்றாளா அல்லது என்னை உயர்வாக மதித்து அப்படி அழைத்தாளா ,தானும் ஆசைகளின் வழியில் வரும் உணர்வுகள் உள்ளவள் என்றும் ஞானத்தின் மூலம் மனித ஆசைகளைவிட மனிதகுலத்தின் நன்மைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் அந்த உணர்வுகளை தியானத்தின் மூலம் அடக்கி கொள்வதாகவும் கூறினாளே அப்படியானால் அவள் தனது வாழ்வை முழுமையாக மக்கள் நலனுக்காகவே அர்பணிக்க போகின்றாளா .எனது ஆசைகள் கூட நிராசையாக தான் போய்விட போகின்றதா .இவ்வாறு சிவனது மனது ஆதிசக்தியின் கற்பனையிலேயே ஆழ ஊடுருவி சஞ்சரித்து கொண்டே அவளது பர்ணசாலைக்கு அனைவரும் வந்து சேர்ந்தார்கள் .

பர்ணசாலைக்கு அனைவரும் வந்ததும் அவர்கள் தங்குவதற்கு உரிய ஏற்பாடுகளையும் தேவையான உணவு வகைகளையும் கொடுத்து அவர்களை கௌரவிக்கும் படி தனது குழுவினரை சக்தி கேட்டுகொண்டார் .தனது மனம் சஞ்சலபடுவதை உணர்ந்த சக்தி தனது இருக்கைக்கு சென்று தியானத்தில் ஆழ்ந்தார் .சின் முத்திரை பதித்து ஆழ்ந்த உறக்க நிலையில் இருந்து மனதை ஒருநிலை படுத்த சக்தி முயற்சிசெய்தார் .சிவன் அவரது செயல்பாடுகளை அன்று முழுவதும் அவதானித்து இருந்தாலும் தியான நிலையில் சக்தி இருக்கும் பொழுது .அவரிடம் ஒரு மிகப்பெரிய அருள் ஒளி ஒரு ஈர்ப்பு சக்தி இருப்பதை உணர்ந்துகொண்டார் .இந்த பிரபஞ்சத்துக்கு பெண்ணே முதன்மையானவள் என்ற உண்மையை புரிந்துகொண்டார் .சக்தியின் முகத்தை பார்த்துக்கொண்டே தானும் தன்னை மறந்த நிலையில் தான் இருக்கும் இடத்தில் தியானத்தில் ஆழ்ந்தார் .

சிறிது நேரம் கழித்து சுவாமி என்ற குரல் கேட்டு விழித்துக்கொண்ட சிவன் முன்னிலையில் ஆதி சக்தி தண்ணீர் அருந்தும் குவளையை கையில் ஏந்தி வாறு நின்று கொண்டு முக்கியமான ஒரு கலையை இன்று நான் உங்களுக்கு கற்று தரவேண்டும் தன்னுடன் வருமாறு சிவனை அழைத்தார் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,தொடர் வளரும் 

By: சிவ மேனகை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக