தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 9 அக்டோபர், 2013

வேற்று கிரக வாசிகளுக்கும் இந்துமதத்துக்கும் என்ன சம்பந்தம்?

October 9, 2013 at 3:58pm

சில நாட்களுக்கு முன் நண்பர் ஒருவர் பயிர் வட்டம் என்ற ஒரு புதிய விடயத்தை பற்றி சில விடயங்கள் மினஞ்சலில் அனுப்பி இருந்தார் அது பற்றிய தேடலில் அது எனக்குத்தான் புதிய விடயம் உலகுக்கு ரொம்ப பழமையான விடயம் என தெரிந்தது அதனால் என்னை போன்ற இதுபற்றி தெரியாதவர்களுக்காக .........




2012 வரை தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த பயிர் வட்டங்கள் ஒரு சுவாரசியமான மர்மங்கள். விளைந்திருக்கும் பயிரில் ஒரே இரவில் ஏதோவொரு அமானுஷ்ய சக்தி இதுபோன்ற உருவங்களை உருவாக்கிச் செல்வதாய் கதைகள் நீள்கின்றன. இந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் இந்த பயிர் வட்டங்கள் தோன்றியிருக்கும் போதும் கிட்டத்தட்ட 80 சதவீதத்திற்கும் அதிகம் பதியப்பட்டிருப்பது இங்கிலாந்தில்தான்.

பெரும்பாலான உருவங்கள் ஒரே இரவில் மனிதர்கள் உருவாக்க சாத்தியமேயில்லாத முறையில் உருவாக்கப்பட்டிருப்பது இதன் மர்மத்தை மேலும் கூட்டுகிறது. இரவுப்பொழுதில் வெளிச்சம் இல்லாமல்  சுற்றியிருக்கும் பயிருக்கு எந்தவொரு சிறு சேதமும் இல்லாமல் எந்தவொரு வாகனமோ, மனிதக்காலடியோ, இல்லை இயந்திரத்தின் தடயமோ இல்லாமல் இப்படிப்பட்ட படைப்புகள் உருவாக்கப்படுவது மர்மத்திலும் மர்மமே. அதுவும் சில ஆராய்ச்சிகளில் இந்த பயிர்வட்டங்கள் உருவாக்கப்பட்ட இடத்தின் மண் மட்டும் பாறைப்படிவம் போல மாறியிருப்பது மர்மத்தின் உச்சம். ஏனென்றால் ஒரு சாதாரண மண் இறுகிப் பாறைபடிவம் போல மாறவேண்டுமென்றால் அதற்கு இயற்கையாய் 1000 ஆண்டுகளுக்குமேல் தேவைப்படும். இப்படி ஒரேயிரவில் பாறைப்படிவம் போல மாறவேண்டுமானால் கிட்டத்தட்ட 8000 டிகிரி வெப்பத்தில் மண்ணை சூடுபடுத்தவேண்டும். அவ்வாறு வெப்பம் உண்டாக்கப்படும் பட்சத்தில் அந்த இடமே சின்ன புல் பூண்டு கூட இல்லாமல் பஸ்பமாகிவிடும். இப்படியாக தொடர்கிறது இந்த பயிர் வட்டம் ... 



 ராஜ் சிவா என்பவர் எழுதிய தொடரில் இருந்து சில ....

 2007ம் வருடம் ஜூலை மாதம் 7ம் திகதி அந்தச் சம்பவம் நடந்தது. வின்ஸ்டன் கீச்சும்(Winston Keech), காரி கிங்கும் (Gary King) நண்பர்கள். வின்ஸ்டன் ஒரு எஞ்சினியராக இருந்தாலும், அவருக்கு ஏலியன்களைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆர்வம் நெடுநாட்களாக உண்டு. இரவில் படம் பிடிக்கும் காமெராக்கள் சகிதமாக வைல்ட்ஷையரில் உள்ள வயல்வெளிப் பிரதேசங்களில் திரிந்தபடி கண்காணிப்பதே அவர் வேலை. 07.07. 2007 அன்று, 'ஈஸ்ட்ஃபீல்ட்' (East Field) என்னும் இடத்திலுள்ள மலையில் நண்பர் காரியுடன் அமர்ந்தபடி வயல்வெளிகளை அவதானித்துக் கொண்டிருந்தார். தன்னிடம் இருந்த காமெராக்களை ஓடவிட்டுக் கொண்டு உடனிருந்த காரியுடன் பேசிக்கொண்டிருந்தார்.நள்ளிரவு தாண்டி, நேரம் அதிகாலை 1.35 ஐ நெருங்கியது. கும்மிருட்டில் திடீரென 'ஃப்ளாஷ்' வெளிச்சங்கள் போல ஒளி வட்டங்கள் தோன்றின. இதற்கென்றே தயாராக இருந்த அவர்கள் ஆச்சரியத்துடனும், சந்தோசத்துடனும், ஒருவித பயத்துடனும் அங்கு நடப்பதை வீடியோக் காமெராவினால் பதிவு செய்தனர். அத்துடன் 'நைட்விஷன்' பொருத்தப்பட்ட வேறு கமெராவில் பார்த்தபோது, எங்கும் மனித நடமாட்டமோ, வாகனங்களோ காணப்படவில்லை. அவர்கள் அமர்ந்திருந்தது சிறிய மலைப்பிரதேசம் என்றபடியினால், அனைத்தையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது. அதிகாலை 3 மணிவரை அந்த ஃப்ளாஷ் வெளிச்சங்கள் ஆங்காங்கே எரிந்து அணைவதைக் கண்டார்கள்.  3.13 மணிவரை அவர்களுக்கு முன்னால் காட்சி தந்த பெரிய வயல்வெளியில் எதுவுமே இருக்கவில்லை. ஆனால் ஏழே நிமிடங்களின் பின்னர் 3.20க்குப் பார்த்த போது அவர்களால், அவர்கள் கண்களை நம்பவே முடியவில்லை. வயல்வெளியில் நீளமான வடிவமொன்றைக் கண்டார்கள். அது என்ன எதுவென்று தெரியவில்லை. உடன் சென்று பார்க்கவும் பயமாக இருந்தது. நான்கு மணியளவில் கொஞ்சம் வெளிச்சம் வரத்தொடங்கியதும் பார்த்த போதுதான் தெரிந்தது. அது ஒரு மிகப்பெரிய பயிர்வட்டம் என்பது.

நடந்தவை அனைத்துமே காட்சிகளாக, சாட்சிகளாக வின்ஸ்டனின் காமெராக்களில் பதிவாகியிருந்தன. உருவாக்கப்பட்டிருந்த பயிர்வட்டம் 300 மீட்டர் நீளமாகப் பிரமாண்டமானதாக இருந்தது. 150 தனித்தனி வட்டங்களால் அது உருவாக்கப்பட்டிருந்தது.அந்தச் சம்பவத்தைப் பொய்யென்று யாருமே மறுக்க முடியாதபடி, உண்மையான வீடியோ ஆதாரங்களுடன் அவர்கள் கொடுத்த பேட்டி ஐரோப்பாவையே உலுக்கியெடுத்தது. அனைத்துப் பத்திரிகைகளும் அது பற்றிய செய்திகளை வெளியிட்டன. இதில் என்ன ஆச்சரியமென்றால், 'மைக்ரோவேவ்' (Microvave) என்று சொல்லப்படும்  வெப்பக் கதிர்கள் இதில் பயன்படுத்தப்பட்டிருப்பது உடனடியான பரிசோதனைகள் மூலம் அவதானிக்கப்பட்டது. யாரும் இதை நாங்கள்தாம் செய்தோம் என்று சொந்தம் கொண்டாடி வரவுமில்லை. மனிதனால் செய்யப்படாத பயிர்வட்டத்துக்கு மிகவும் ஆணித்தரமான சாட்சியாக இந்தப் பயிர்வட்டம் காட்சியளித்தது.

 இதுவரை பயிர்வட்டங்களைப் பற்றி பலவிதமாகப் பேசிக் கொண்டிருந்தவர்கள் எவராலும், எதுவும் சொல்ல முடியவில்லை.ஏழே நிமிடங்களில் 300 மீட்டர் அதாவது இரண்டு ஃபுட்பால் மைதானங்கள் அளவு பெரிய பயிர்வட்டம் ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது. இது எப்படிச் சாத்தியமாக முடியும்? சரி, இதை மனிதன்தான் உருவாக்கினான் என்றால் அவனுக்குக் குறைந்தபட்சம் இரண்டு நாட்கள் இதைச் செய்வதற்குத் தேவைப்பட்டிருக்கும். சரி, இவை மனிதனால் செய்யப்படவில்லை என்றால், யாரால் செய்யப்படுகின்றன? பகலில் காற்றுச் சுழல்கள் போலவும், இரவில் வெளிச்சப் பந்துகள் போலவும் காட்சி தருபவை என்ன? இப்படியான கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருக்கையில், இந்தப் பயிர்வட்டத்தை ஆராய்ந்த சிலர் வேறு ஒரு விளக்கத்துடன் நிற்கிறார்கள். அந்த விளக்கத்தை நீங்கள் அறிந்தால் எப்படிப்பட்ட மனநிலையில் இருப்பீர்களோ தெரியவில்லை.ஆராய்ச்சியாளர்களில் சிலர் கொடுத்த விளக்கம் என்ன தெரியுமா...?

அதைப் படத்திலேயே பாருங்கள் தெரியும்.......!


ஆம்! சாட்சாத் இந்துக்களின் 'ஓம்' என்னும் அடையாளம்தான் இது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்களில் சிலர். இப்படிப் பர்க்கும்போது நிலைமை மேலும் சிக்கலான ஒரு வடிவத்தையே எடுக்கிறது என்று நம்பக் கூடிய நிலைக்கு நாம் வந்துவிடுவோம்.



இந்துக்களின் 'ஓம்' என்னும் வடிவம் பயிர்வட்டங்களில் இருந்தது நம்மை மட்டுமல்ல, உலகம் முழுவதையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது என்பது என்னவோ உண்மைதான். அதுவும் பயிர்வட்டங்களின் வரலாற்றிலேயே மிகவும் ஆணித்தரமாக,மனிதனால் உருவாக்கப்படவில்லை என்று சொல்லப்படும் ஒன்றாக, 'ஓம்' வடிவப் பயிர்வட்டம் இருக்கிறது என்கிறார்கள்.உண்மையில் அந்த வடிவம் 'ஓம்' தானா அல்லது வேறு ஒன்றைக் குறிப்பதா? என்பது இன்றுவரை புரியவில்லை. 'ஓம்' என்னும் வடிவத்துக்கு இருக்க வேண்டிய அனைத்துக் கோடுகளும் அந்தப் பயிர்வட்டத்தில் உருவாக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி, அது'ஓம்'தான் என்று அடித்துச் சொல்கிறார்கள் சிலர். ஒரு பேச்சுக்கு அதை 'ஓம்' என்று நாம் எடுத்துக் கொண்டால், ஏலியன்களுக்கும்  'ஓம்' வடிவத்துக்கும் என்ன சம்பந்தம் என்ற ஆராய்ச்சிக்குப் போக வேண்டும். அப்படிப் பார்க்கும்போது, புராதன ஏலியன்களின்  (Ancient Aliens) ஆராய்ச்சியில் இந்து மதப் புராணக் கதைகளும், கடவுளர்களும்தான் மேற்குலக ஆராய்ச்சியாளர்களால் முதன்மைப்படுத்திச் சொல்லப்படுவதாக இருக்கிறது. 'புராதன ஏலியன்களும், இந்து மதமும்' என்று இன்னுமொரு தொடரையே உங்களுக்கு நான் தரும் அளவுக்குத் தகவல்கள் அவை பற்றி நிறைந்திருக்கின்றன. முடிந்தால் வேறொரு தொடர் மூலம் அதைத் தருகிறேன். மேலே சொல்லப்பட்ட 'ஓம்' வடிவப் பயிர்வட்டத்துக்கு இன்னுமொரு சிறப்பும் உண்டு. அது 07.07.07 இல் என்று எல்லாமே ஏழில் வரும் திகதியில் உருவாக்கப்பட்டிருக்கிறது.




 நிச்சயம் இது இந்துக்களின் 'ஓம்'தான் என்று சிலர் அடித்துச் சொல்வதற்கு,சாட்சியாக வேறொரு வட்டச் சித்திரத்தைக் காட்டுகிறார்கள். இந்தப் பயிர்வட்டச் சித்திர அமைப்புகள் பயிர்களினால் மட்டுமல்ல,மணல், ஐஸ் போன்றவற்றினாலும் உருவாக்கப்பட்டிருக்கின்றன என்று இந்தத் தொடரின் ஆரம்பத்திலேயே சொல்லியிருக்கிறேன். அமெரிக்காவின் ஆரிகனில் (Oregon) 1990ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், ஒரு ஆற்றுப்படுகைக்கு அருகே இருக்கும் மணல்பரப்பில் ஒரு சித்திரம் உருவாக்கப்பட்டிருந்தது. அந்தச் சித்திரம் ஒரே இரவில் உருவாக்கப்பட்டிருந்தது. "ஆற்று மணலில் சித்திரம் வரைவதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது. மனிதர்கள் சுலபமாக அதை வரைந்துவிடலாமே" என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அந்தச் சித்திரம் நீங்கள் நினைப்பது போலல்ல. மிகவும் சிக்கல் வாய்ந்த ஒரு சித்திரம் அது. அந்தச் சித்திரத்தில் வரையப்பட்டிருக்கும் கோடுகளின் மொத்த நீளம் 21 கிலோமீட்டர் என்றால் அதன் பிரமாண்டத்தைக் கற்பனை பண்ணிப் பார்த்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு கோடும் 10 அங்குலம் அகலமுள்ள மிகவும் பிரமாண்டமான சித்திரம் அது. அந்தச் சித்திரம் என்ன வடிவத்தில் இருந்தது என்பதுதான் இங்கு ஆச்சரியமே! அந்த வடிவம் என்ன தெரியுமா? இந்துக்களின் 'இயந்திரம்' (Sri Yantra) என்று சொல்வோமே அந்த வடிவத்தில் அது இருந்தது.



ஒரே இரவில் இவ்வளவு பெரியதொரு சித்திரத்தை மனிதர்களால் உருவாக்கவே முடியாது. அதுமட்டுமல்லாமல், அந்தச் சித்திரம் அமைக்கப்பட்ட இடம், ஈரமான சேற்று மண்ணில். அங்கு யாராவது சித்திரத்தை அமைத்திருந்தால்,  அவர்களது காலடித் தடம் எல்லா இடங்களிலும் இருந்திருக்க வேண்டும். அந்தச் சித்திரம் அமைந்த இடம் மட்டுமில்லாமல், அதைச் சுற்றிவர எங்குமே எந்தக் காலடித் தடங்களும் காணப்படவில்லை. மனிதர்கள் செய்திருந்தால், செய்தவர்களின் காலடித் தடத்தில் ஒன்றாவது அங்கு இருந்திருக்க வேண்டுமல்லவா? சேற்று மணலில் தடங்களை அழித்துவிட்டு எப்படிச் செல்ல முடியும்?சித்திரத்தின் உள்ளேயும் எந்தக் காலடிகளும் இல்லை. எப்படி இது சாத்தியம்? அந்தச் சித்திரம் அமைக்கப்பட்டதும் மக்கள் கூட்டமாக வந்து அதைக் கவனிக்கத் தொடங்கியபோது, இருவர் தாங்கள்தான் அதை உருவாக்கியது என்று சேறு படிந்த காலணிகளுடன் வந்தார்கள். அவர்கள் அதை வரைந்த விதத்தை விளக்கியபோதே சந்தேகம் தோன்றியது. அவர்களிடம் இது போல ஒன்றைச் சாதாரண காகிதத்தில், அல்லது நிலத்தில் மீண்டும் வரைந்து காட்டினால், தகுந்த பரிசு அளிக்கிறோம் என்று கூறியதும், போக்குக் காட்டிவிட்டு அவர்கள் நழுவியதும் நடந்தது. உலகமெங்கும் மனிதர்கள் அறிய முடியாத இது போன்ற மர்மங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. அப்படி நடக்கும் மர்மங்களில் பல, மனிதர்கள் சம்பந்தப்படாத போதும் நம்பக்கூடிய வகையிலேயே அமைந்துவிடுகின்றன. இங்கு நடந்திருப்பதும் மனிதர்களல்லாத ஏதோ ஒரு சக்தியால் உருவாக்கப்பட்டதாகவே சொல்கிறார்கள். அதுவும் அங்கு வரையப்பட்டிருக்கும் சித்திரம் இந்துக்களின் 'ப்ரீ இயந்திரம்'  என்று சொல்லும் வடிவில் அமைந்திருந்தது. ப்ரீ இயந்திரச் சித்திரத்துடன் முடிச்சுப் போட்டே, 'ஓம்'என்னும் பயிர் வட்டத்தையும் இந்துக்களுடைய வடிவம்தான் என்கிறார்கள் சிலர். இந்த நம்பிக்கையின் அடிப்படையில் 'ஓம்' பயிர் வட்டத்தில் இரவு பகலாக தியானங்களும், இந்துப் பஜனைகளும் பல நாட்களாக நடந்து வந்தது தனிக் கதை.


இந்த இணைப்பில் முழு பதிவையும் படிக்கலாம் ... மிகவும் சுவையான ஒரு பதிவு ரொம்ப நல்லாவே குழப்புகிறார்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=105668 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக