தொலைக்காட்சி!!

Search This Blog

Sunday, October 6, 2013

தமிழர்கள் இல்லங்களில் தொல்காப்பியம் இருக்கிறதா ?


தமிழர்கள் இல்லங்களில் திருக்குறள் நிச்சயம் இருக்கும். ஆனால் எல்லோர் இல்லங்களிலும் தொல்காப்பியம் இருக்கிறதா ? தமிழர்களின் இன்றைய அடையாளம் , பெருமை அனைத்திற்கும் காரணம் தொல்காப்பியம் தான் . ஒவ்வொரு தமிழரும் அறிய வேண்டிய நூல் தொல்காப்பியம் தான்.

ஆனால் மொழியின் இலக்கணத்தை வகுத்த தொல்காப்பியர் பற்றி பல்வேறு கட்டுக் கதைகளை உருவாக்கி அவர் தமிழரே அல்லர் என்று பொய்யை பரப்பி தொல்காப்பியத்தை தமிழர்களிடம் இருந்து பிரித்தனர் எதிரிகள். தொல்காப்பியர் ஒரு துரோகி என்று சொல்லும் அளவிற்கு துணிந்தனர் எதிரிகள். உண்மையில் அந்த தொல்காப்பியத்தில் என்ன சொல்லப்பட்டு உள்ளது? தமிழர் மரபியல் பண்பாடு வரலாறு அறிய வேண்டும் எனில் ஒவ்வொரு தமிழரும் அறிய வேண்டியது தமிழின், தமிழரின் உயிராக விளங்கும் தொல்காப்பியம் தான்.

அந்த தொல்காப்பியத்தை பற்றி எளிய முறையில் அழகு தமிழில் நமக்கு தொகுத்து வழங்கியுள்ளார் திருச்செல்வனார். தமிழராக பிறந்த ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டிய செய்தி இந்த காணொளியில் உள்ளது . 

No comments:

Post a Comment