தொலைக்காட்சி!!

Search This Blog

Tuesday, September 17, 2013

ஆசாரியராதற்கு யோக்கியர் யாவர்?


சைவ வினாவிடை - ஆறுமுக நாவலர்

சைவபேதவியல்

131. ஆசாரியராதற்கு யோக்கியர் யாவர்?

பிராமணர் முதலிய நான்கு வருணத்தாருள்ளும், மனக்குற்றங்களும், உடற்குற்றங்களும் இல்லாதவராய், நிகண்டு கற்று, இலக்கியவாராய்ச்சி செய்து இலக்கணமுந் தருக்கமும், நீதிநூல்களுஞ் சிவபுராணங்களும் படித்தறிந்தவராய், தேவார திருவாசங்களைப் பண்ணோடு ஓதினவராய், சைவாகமங்களை ஓதி அவைகளால் உணர்த்தப்படும் நான்கு பாதங்களையும் அறிந்தவராய், சீடர்களுக்கு நல்லொழுக்கத்தையுஞ் சைவ சமயத்தையும் போதித்தலின்கண் அதிசமர்த்தராய் உள்ளவர்.

No comments:

Post a Comment