தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013

இதை ஆண்களின் தியாகம் என்பதா சாபம் என்பதா..?

இயற்கையில் மனித ஆணுக்கு மட்டுமல்ல ஒவ்வொரு உயிரினத்திலும் ஆண்களின் கதை தனிக்கதையாகத் தான் உள்ளது.
இவ்வாண்டு இலைதளிர் காலத்தில் (வசந்த காலத்தில் ) நிலவிய அசாதாரண குளிர் காலநிலையால் பிரிட்டனில் குளவிகளின் எண்ணிக்கை குறைந்து போயுள்ள கவலை ஒரு புறம் இருக்க இந்தக் குளவிகளின் வாழ்க்கை வட்டத்தில் இராணி குளவிகள் வேறு சமூக ஆண் குளவிகளுடன் இனக் கலப்புச் செய்த பின் குளிர் காலநிலை வந்ததும் ஆண் குளவிகள் செத்துமடிய இடமளிக்கின்ற நடத்தையியல் என்பது ஆச்சரியமடையவும் வைக்கிறது.
ஆண்கள் குளிருக்கு இறந்து போக பெண் இராணிக்கள் மட்டும் தாம் கூடி கட்டி அதற்குள் ஒளித்துக் கொள்கின்றன அடுத்த தவணைக்கு குளவிகளை உருவாக்க..!
இதில் ஆண்களின் இந்த இறப்பை தியாகம் என்பதா சாபம் என்பதா? இயற்கை எவ்வளவு பாரபட்சமா இருகின்றது பார்த்தீர்களா? எப்படி எல்லாம் இயற்கை உயிரின வாழ்க்கை வரலாற்றை தனக்கேற்ப மாற்றி அமைக்கிறது!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக