தொலைக்காட்சி!!

Search This Blog

Friday, August 23, 2013

இதைப் பற்றி யார் சிந்திக்கப் போகிறார்கள்?


விண்வெளி அறிவியல் நிபுணரும் எழுத்தாளருமான கார்ல் சாகன் சொல்கிறார்,''மனித சமூகம் தன்னைத்தானே அழித்துக் கொள்ள வில்லை என்றால்,மனித இனத்திற்கு புதிய வாய்ப்புகளும், மகிழ்ச்சிகரமான அனுபவங்களும் எப்போதும் கிடைக்கும்,''

ஒவ்வொரு நாடும் போருக்காக செய்யும் செலவுகள் ,சமூகம் தன்னைத்தானே அழித்துக் கொள்ள வழிவகை செய்வதாகவே இருக்கிறது..

அமெரிக்காவில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் போருக்காக செலவிடப்படும் பணம் கிடைக்குமானால், அதைக் கொண்டு மனித இனம் முழுமைக்கும் கீழ்க்கண்ட நலன்களை ஏற்படுத்திக் கொடுக்க முடியும்.

*இரண்டு கோடி படுக்கைகள் கொண்ட முப்பதாயிரம் மருத்துவமனைகள் கட்ட முடியும்.

*நாற்பது கோடி குழந்தைகள் படிப்பதற்கு ஆறு லட்சம் பள்ளிகள் திறக்க முடியும்.

*இரண்டு கோடி மனிதர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கக்கூடிய இருபதாயிரம் தொழிற் சாலைகள் தொடங்க முடியும்.

*முப்பது கோடி மக்களுக்கு வேண்டிய ஆறு கோடி குடியிருப்பு மனைகளைக் கட்டிக் கொடுக்க முடியும்.

*நூறு கோடி மக்களுக்கு வேண்டிய உணவு தானியங்களை உற்பத்தி செய்யலாம்.

இதைப் பற்றி யார் சிந்திக்கப் போகிறார்கள்?

No comments:

Post a Comment