தொலைக்காட்சி!!

Search This Blog

Monday, July 15, 2013

குத்து விளக்கு ஏற்றும் முறை, ஏற்றுவதனால் பலன்


குத்து விளக்கு ஏற்றும் முறை, ஏற்றுவதனால் பலன்

நம் பண்பாட்டில், ஒவ்வொரு விஷயமும் காரணத்தோடு தான் வகுக்கப்பட்டிருக்கின்றது. வீட்டில் விளக்கு ஏற்றுவதும் அது போன்றே. அவ்வகையில், விளக்கு ஏற்றுவதில் உள்ள வேறுபாடுகளும், குத்து விளக்கு ஏற்றுவதனால் ஏற்படும் பலன்கள் என்னென்ன என்பது கீழே விளக்கப்பட்டிருக்கிறது.

எந்த திக்கு நோக்கி விளக்கின் திரி இருக்க வேண்டும்?

கிழக்கு முக விளக்கு பலன்

குத்து விளக்கின் தீபம் கிழக்கு முகமாக ஏற்றினால் துன்பங்கள் நீங்கி வசீகரம் உண்டாகும்.

மேற்கு முக விளக்கு பலன்

மேற்கு முகமாக தீபம் ஏற்றினால் கிரக தோஷம் பங்காளி பகை உண்டாகும்.

வடக்கு முக விளக்கு பலன்

வடக்கு முகமாக தீபம் ஏற்றினால் கல்வி மற்றும் சுப காரியங்களில் ஏற்படும் தடைகள் நீங்கும்; திரண்ட செல்வம் உண்டு.

தெற்கு முக விளக்கு பலன்

தெற்கு முகமாக விளக்கு ஏற்றினால் அப சகுனம்; பெரும் பாவம் உண்டாகும்.

எத்தனை முகம் அல்லது திரி ஏற்ற வேண்டும்?

குத்து விளக்கில் ஒரு முகம் ஏற்றினால் மத்திம பலன்.
இரு முகம் ஏற்றினால் குடும்ப ஒற்றுமை.
மும்முகம் யற்றினால் புத்திர சுகம், கல்வி கேள்விகளில் விருத்தி.
நான்கு முகம் ஏற்றினால் சர்வ பீடை நிவர்த்தி, ஐஸ்வர்ய லக்ஷ்மி கடாட்சம் ஆகியவை பெருகும்.

எந்த திரியில் விளக்கு ஏற்றினால் என்ன பலன்?

தாமரைத் தண்டு திரி பலன்

தாமரைத் தண்டில் திரி போட்டால் மூன்று ஜென்ம பாவங்கள் போகும்.

வாழைத் தண்டு திரி பலன்

வாழைத் தண்டு நூலில் திரி போட்டால் குல தெய்வ குற்றமும், சாபமும் போகும்.

புது மஞ்சள் சேலைத் துண்டு திரி

புது மஞ்சள் சேலைத் துண்டில் திரி போட தாம்பத்ய தகராறு நீங்கும்.

புது வெள்ளை வஸ்திர திரி

புது வெள்ளை வஸ்திரத்தில் பன்னீரை விட்டு உலர விட்டு போட்டால் வீட்டில் லக்ஷ்மி கடாட்சம் வந்து மூதேவி அகன்று விடுவாள்.

எந்த எண்ணையை திரிக்கு விட்டால் என்ன பலன்?

நெய்த் திரி

நெய் விளக்கு ஏற்றினால் லக்ஷ்மி கடாட்சம் உண்டாகும்

இலுப்பை எண்ணைத் திரி

இலுப்பை எண்ணெய் கொண்டு விளக்கு ஏற்றினால் பூஜிப்பவருக்கும், பூஜிக்கப்படும் இடத்திற்கும் விருத்தி

விளக்கு எண்ணைத் திரி

விளக்கு எண்ணெய் கொண்டு விளக்கு ஏற்றினால் துன்பங்கள் விலகும்

நல்லெண்ணைத் திரி

நல்லெண்ணெய் கொண்டு விளக்கு ஏற்றினால் மிகுந்த பலன் இல்லை, மத்திம பலன்

குறிப்பு: கடலை எண்ணையோ இதர தரம் குறைந்த சமையல் எண்ணைகளையோ விளக்கில் உபயோகிப்பது மூதேவி ஆராதனையாகக் கருதப்படுவதால், அவற்றை நீக்குவது நன்மை தரும்.

No comments:

Post a Comment