தமிழர் விடுதலைக் கூட்டணியின் கொழும்புக் கிளை செயலாளராகவும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முதலாவது தலைவராகவும், ஏதிலிகள் மறுவாழ்வுக்கழகம் (TRRO), காந்தீயம் போன்ற அமைப்புக்களின் நிறுவனர்களில் ஒருவராகவும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் ஸ்தாபகரும், செயலதிபருமாக விளங்கிய அமரர் தோழர் க.உமாமகேசுவரன் அவர்கள் மக்கள் யுத்தத்தின் மகத்தான தளபதியாவார். தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஆயுதமேந்திய மக்கள் போராட்டமாக மிளிரச் செய்த செயலதிபர் உமாமகேசுவரன் அவர்கள், தென்னிலங்கை முற்போக்கு சக்திகளோடும் உறவுகளை பேணி வந்ததோடு, தமிழ் மக்களது போராட்டத்தின் நியாயத் தன்மையை சிங்கள மக்களுக்கும், சிங்கள அரசியல்வாதிகளுக்கும் தெளிவுபடுத்தி ஏற்றுக்கொள்ள வைத்தவர். ஐக்கியமான போராட்டமே உண்மையான விடுதலைக்கு ஒரேவழி, ஒன்றாய் இன்றும் நாமில்லையேல் விடுதலை என்றும் நமக்கில்லை என்னும் தீர்க்க தரிசனமான வார்த்தைகள் மூலம் இன்றைய தமிழ் மக்களது துன்பகரமான, அவலநிலையினை அன்றே கூறிவைத்தவர்.
தொலைக்காட்சி!!
Search This Blog
Saturday, July 20, 2013
அமரர் தோழர் க.உமாமகேசுவரன்
தமிழர் விடுதலைக் கூட்டணியின் கொழும்புக் கிளை செயலாளராகவும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முதலாவது தலைவராகவும், ஏதிலிகள் மறுவாழ்வுக்கழகம் (TRRO), காந்தீயம் போன்ற அமைப்புக்களின் நிறுவனர்களில் ஒருவராகவும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் ஸ்தாபகரும், செயலதிபருமாக விளங்கிய அமரர் தோழர் க.உமாமகேசுவரன் அவர்கள் மக்கள் யுத்தத்தின் மகத்தான தளபதியாவார். தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஆயுதமேந்திய மக்கள் போராட்டமாக மிளிரச் செய்த செயலதிபர் உமாமகேசுவரன் அவர்கள், தென்னிலங்கை முற்போக்கு சக்திகளோடும் உறவுகளை பேணி வந்ததோடு, தமிழ் மக்களது போராட்டத்தின் நியாயத் தன்மையை சிங்கள மக்களுக்கும், சிங்கள அரசியல்வாதிகளுக்கும் தெளிவுபடுத்தி ஏற்றுக்கொள்ள வைத்தவர். ஐக்கியமான போராட்டமே உண்மையான விடுதலைக்கு ஒரேவழி, ஒன்றாய் இன்றும் நாமில்லையேல் விடுதலை என்றும் நமக்கில்லை என்னும் தீர்க்க தரிசனமான வார்த்தைகள் மூலம் இன்றைய தமிழ் மக்களது துன்பகரமான, அவலநிலையினை அன்றே கூறிவைத்தவர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment