தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 17 ஜூலை, 2013

ஆடி மாதம் வந்தால் புது கல்யாணமான ஜோடிகளை பிரிப்பதேன்...


ஆடி மாதம் வந்தால் புது கல்யாணமான ஜோடிகளை பிரிப்பதேன்...

ஆடி மாதம் வந்தாலே புதிதாக கல்யாணமான ஜோடிகளுக்கு ஆகாத மாதமாகிவிடும்.வீட்டில் உள்ள பெரியவர்கள் புதுமண ஜோடிகளை பிரித்து பெண்ணை அம்மா வீட்டுக்கு அணுப்பி வைத்துவிடுவார்கள்.இந்த பழக்கம் காலம் காலமாக நடந்து வருகிறது.அறிவியல் பூர்வமாகவும் இதை ஏற்றுகொள்கிறார்கள்.

ஆடி மாதம் கூடினால் சித்திரை மாதம் குழந்தை பிறக்கும்.சித்திரை மாதம் அதிகம் வெப்பம் நிறைந்த மாதம் இந்த மாதத்தில் கர்பிணிகளும் பிறக்கும் குழந்தையும் மிகவும் சிரமத்துக்குள்ளாகும்.குழந்தைக்கு சின்னம்மை போன்ற வெப்ப நோய் எளிதில் தாக்கும்.

ஆடி மாதத்தில் தான் பருவமழை தொடங்கும்,தண்ணீர் மூலமாகவும் காற்று மூலமாகவும் நோய்கள் எளிதில் பரவும்.இந்த சமயத்தில் புதுமணத்தம்பதிகள் இணைய நேரிட்டால் கருவில் வளரும் குழந்தைக்கு நோய் எளிதில் தாக்கும்.எனவே தான் இந்த மாதத்தில் புதுமண தம்பதிகளை பிரித்து வைக்கிறார்கள்.

அறிவியல் பூர்வமான காரணங்கள் இருப்பதால் புது ஜோடிகள் இதை ஏற்று கொள்ளத்தான் வேண்டும்.

நன்றி : Ilayaraja Dentist.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக