தொலைக்காட்சி!!

Search This Blog

Sunday, June 9, 2013

பப்பாளி பழத்தின் மருத்துவக் குணங்கள்:-


பப்பாளி பழத்தின் மருத்துவக் குணங்கள்:-

1. பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.

2. பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும். தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்.

3. பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும்.

4. நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்.

5. பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும்.

6. பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், புண்கள் மேல் பூச புண்கள் ஆறும்.

7. பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் ஆறும்.

8. பப்பாளிப் பாலை குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் பூசி வர புண்கள் ஆறும்.

9. பப்பாளி இலைகளை அரைத்து கட்டி மேல் போட்டு வர கட்டி உடையும்.

10. பப்பாளி இலைகளை பிழிந்து எடுத்து வீக்கங்கள் மேல் பூசி வர வீக்கம் கரையும்.

11. பப்பாளி விதைகளை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் பூச வலி, விஷம் இறங்கும்.

12. பப்பாளிக் காய் குழம்பை, பிரசவித்த பெண்கள் உணவில் சேர்த்து வர பால் சுரப்பு கூடும்.

Visit our Page -► தமிழ்ப் பற்றாளர்கள்















ஒரு எலி தன் குடும்பத்தோடு போய்க் கொண்டிருந்தது.. அப்போது திடீரென ஒரு பூனை வழி மறித்தது.

தாய் எலியும், குட்டி எலிகளும் பயத்தில் உறைந்து நிற்க, தந்தை எலி தைரியமாக முன்னே பாய்ந்து, லொள்... லொள்.. என்று சத்தமிட்டது.

அதிர்ச்சி அடைந்த பூனை ஓடிவிட்டது.

குட்டி எலி அப்பாவிடம் இது என்னா கூத்து..? என்று கேட்க

அப்பா எலி சொன்னது..
அதுக்குதான் பெரியவங்க சொல்லுவாங்க.. ரெண்டு பாஷை தெரிஞ்சு வச்சுக்கறது நல்லதுன்னு..!

Visit our Page -► தமிழால் இணைவோம்

No comments:

Post a Comment