தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 29 ஜூன், 2013

5 வருடங்களாக உணவு சாப்பிடாத இலங்கையர்: ஊடகத்தில் பரபரப்பு !

தாம் கடந்த 5 வருடங்களாக எதுவித உணவையும் உட்கொள்ளவில்லை என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் இலங்கையர் ஒருவர். வெளிநாட்டில் இயங்கிவரும் தொலைக்காட்சியன நஷனர் ஜியோ சனல் இதனை வெளியிட்டுள்ளது. கிருப்பி டி லெனோர்லி என்னும் இவர் தான் கடந்த 5 வருடங்களாக உணவை அருந்தவில்லை என்று தெரிவித்துள்ளார். இவரை ஆய்வுக்கு உட்படுத்திய மருத்துவர்கள் சிலரும் அதிர்ந்துபோயுள்ளார்கள் என, மேற்படி தொலைக்காட்சியானது தெரிவித்துள்ளது. வெறும் நீரை மட்டும் உட்கொண்டு தாம் வாழ்ந்துவருவதாகவும், தாம் செய்யும் யோகா மூலமும் காற்று மற்றும் சூரியன் மூலமாகவும் தான் சக்தியைப் பெற்றுவருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இருப்பினும் சுமார் 5 வாரங்களுக்கு மேல் உணவு உண்ணாவிட்டால், ஒருவரால் உயிர்வாழ முடியாது என்று மருத்துவம் கூறுகிறது. அதற்கு அப்பால் பட்டு இம் மனிதர் எப்படி வாழ்கிறார் என்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மேலதிக ஆய்வுகளை நடத்த வெளிநாட்டு மருத்துவர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். வெளிநாடுகளில் பல அதிசயங்களை மற்றும் பூகோழ ரீதியான அதிசயங்கள் பலவற்றை வெளியிட்டு வரும், தொலைக்காட்சியான நஷனல் ஜியோகிராஃபிக் சனலே இதனை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்க விடையமாகும்.

"நடந்தது என்ன"வில் இருவர் பார்த்தேன்,ஒருவர் நீரும் அருந்தாமல் சுகதேகியாக வாழ்கிறார்,இன்னொருவர் நாளுக்கு ஒரு வாழைப்பழம் மற்றும் நீர் மட்டும்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக