தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 14 மே, 2013

வாசி பயிற்சி செய்...ஆசை அடங்கும்..


போகர்-7000

சுழிமுனையே திறந்தாக்கால் மனமொடுங்கும் சுழியிலே அகப்பட்ட துரும்புபோலாம்
வழிமுனையே ஆதாரம் ஏறலாகும் மகத்தான சித்தியது எட்டுவாகும்
சுழிமுனையாஞ் சுழித்துள்ளே அழித்திடாது கணக்கோடே வாசியென்ற குதிரையேறு
சுழிமுனையில் இருந்தாக்கால் அங்கொன்றுமில்லை அதைத் தாண்டி மேலேயேறே

ஏறவே ஐம்புலனும் உலக்கையாக விடும்பான ஆங்காரம் உரலுமாக
ஆறவே ஆசையது உருவமாக வழுப்பான மனதையுள்ளே காட்டிக்கொண்டு
மூறவே ஆசையதை அடித்துத்தள்ளி முழுமோச மாகியல்லோ பிரலப்பண்ணும்
தேறவே யோகம்முதல் ஞானம்ரெண்டும் தெரியாதே இறந்தவர்கள் கோடிதானே


Related Info::
யோகிகள் இடுப்பிற்குக் கீழாக உள்ள அடுப்பு போன்ற பகுதியில் நாகம் போல சுருண்டு கிடக்கும் குண்டலினியைத் தூண்டி விடுவார்கள். குண்டலினி சக்தியால் உந்தப்பட்டு ஆன்மாவானது 36 தத்துவங்களின் கட்டிலிருந்து விடுபட்டு சுழிமுனை நாடியில் ஒளியாக மேலேறும். குண்டலினி சக்தியால் தத்துவக் கட்டிலிருந்து மூலாதாரத்தில் ஆன்மா விடுபடுவது இருக்கிறதே இதுதான் ஆன்மாவிற்கு உண்மையான பிறப்பு. ஆனால் நாம் தாயின் யோனியிலிருந்து விடுபடுவதை மட்டுமே பிறப்பு என்று கருதிக் கொண்டிருக்கிறோம்.

வாசி பயிற்சி செய்...ஆசை அடங்கும்..
யோகமும் ஞானமும் தெரிந்து கொள்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக