தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 23 ஏப்ரல், 2013

மாவீரன் அலெக்ஸாண்டரின் கடைசி ஆசைகள்.......


மாவீரன் அலெக்ஸாண்டரின் கடைசி ஆசைகள்.......

மாவீரன் அலெக்ஸாண்டர் எல்லா நாடுகளையும் கைப்பற்றி விட்டு தாய்நாடு திரும்பும் வழியில் நோய்வாய்ப்பட்டார். பல மாதங்கள் ஆகியும் அவருக்கு அந்த நோய் தீரவில்லை. சாவு தன்னை நெருங்குவதை உணர்ந்தார் அவர்.

ஒருநாள் தன்னுடைய தலைமை வீரர்களை அழைத்து, "என்னுடைய சாவு நெருங்கி விட்டது. எனக்கு மூன்று ஆசைகள் உள்ளன. அவற்றை நீங்கள் கண்டிப்பாக நிறைவேற்றி வைக்க வேண்டும்" என்று கட்டளையிட்டார்.

அவர்களும் அவற்றை நிறைவேற்றுவதாக வாக்களித்தனர்.

முதல் விருப்பமாக, "என்னுடைய சவப்பெட்டியை எனக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் மட்டுமே தூக்கி வர வேண்டும்."

இரண்டாவது, 'என்னைப் புதைக்கும் இடத்திற்குச் செல்லும் வழியானது நான் சம்பாதித்து வைத்த, விலைமதிப்பற்ற கற்களால் அலங்காரம் செய்யப்பட வேண்டும்."

மூன்றாவதாக, "என் கைகள் இரண்டையும் சவப்பெட்டிக்கு வெளியில் தெரியுமாறு வைக்க வேண்டும்."

வீரர்களுக்கு இந்த ஆசைகள் வித்தியாசமாகத் தெரிந்தன. என்ன காரணமாக இருக்கும் என்று கேட்கப் பயந்தார்கள்.

அதில் ஒருவன் தைரியமாக முன்வந்து, "அரசே! நாங்கள் தங்கள் ஆசையைக் கண்டிப்பாக நிறைவேற்றுகிறோம். ஆனால், இதற்கான காரணத்தை தாங்கள் விளக்க வேண்டும்" என்று கேட்க, அலெக்ஸாண்டர் அதற்கு விளக்கமளித்தார்.

1. என்னுடைய சவப்பெட்டியை மருத்துவர்கள் தூக்கிச் செல்வதால், உலகில் உள்ள எல்லோரும் ஒரு விஷயத்தை அறிந்து கொள்வார்கள். மருத்துவர்களால் எந்த ஒரு நோயிலிருந்தும் ஒரு உயிரை நிரந்தரமாகக் காப்பாற்ற முடியாது. மரணத்தை அவர்களால் நிறுத்த முடியாது.

2. வாழ்க்கையில் எவ்வளவு பணமும், நாடுகளும், இன்ன பிற செல்வங்களும் சம்பாதித்தாலும், அவற்றை உன்னுடன் எடுத்துச் செல்ல முடியாது. அது சவக்குழி வரை மட்டும்தான்! மனிதர்கள் வீணாக அதன் பின்னால் செல்ல வேண்டாம் என்பதைத் தெரியப்படுத்துவதற்காக!

3.உலகையே வென்றவன் சாகும்போது கைகளில் ஒன்றுமில்லாதவனாகத்தான் இருக்கிறான் என்று அறிந்து கொள்வதற்காக....


இந்தியா மீது படையெடுக்காதே.. கடுமையான வெயில், மற்றும் கடுமையான குளிர் ஆகிய இரண்டு சூழ்நிலைகளை நம் வீரர்கள் தாங்காமல், சோர்வடைவார்கள் வெற்றி பெறுவது கடினம். - என்ற தன் தாயின் அறிவுரையை கேளாமல், சூரிய வம்சம் என்று புகழப்பட்ட, இந்தியா மீது படையெடுத்தான்.பாதி வீரர்கள் சூழ்நிலை தாங்காமல், நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டு மடிந்தனர். மீறி உள்ளே நுழைந்தான். சூரிய வம்சத்தை சேர்ந்த போரஸ் என்ற புருஷோத்தமன் என்னும் மன்னனால் கடுமையான எதிர்பை அலெக்ஸாண்டர் சந்தித்தான். யானை படையை இதற்கு முன் அவன் கண்டதில்லை. அலெக்ஸாண்டரின் குதிரை படையை யானை படை நசுக்கி துவம்சம் செய்தது. திணறினான் இருந்தும் வீரத்தோடு போரிட்டான். மன்னனின் அம்பு மார்பில் துளைத்து கீழே விழுந்தான். இறக்கும் தருவாயில் இப்படி ஒரு போரை எதிர்ப்பை வீரத்தை தான் கண்டதில்லை, என்றான். இதுதான் கிமு வில் நடந்த சரித்திர உண்மை மற்றபடி அவன் தத்துவத்தை பாராட்டலாம் தவறில்லை.. அதுகூட தாயின் பேச்சை கேளாமல் இதுவரை ஜெயித்த பகுதியையும் ஆள முடியாமல் போனதே என்ற வருத்தத்தில் விளைந்த தத்துவம்..!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக