தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 27 மார்ச், 2013

தமிழ்ச் சித்தர்கள் வகுத்த காலக்கணித வாய்பாடு



நாலடியார் - 14.கல்வி 

வைப்புழிக் கோட்படா; வாய்த்தீயிற் கேடில்லை;
மிக்க சிறப்பின் அரசர்செறின் வவ்வார்;
எச்சம் எனஒருவன் மக்கட்குச் செய்வன
விச்சைமற் றல்ல பிற.
- நாலடியார் 134-

பொழிப்பு: வைத்த இடத்திலிருந்து (மனத்திலிருந்து) பிறரால் கவர்ந்து கொள்ள இயலாது; தமக்குக் கிடைத்துப் பிறருக்குக் கொடுத்தால் அழிவதில்லை; மேலான படை வலிமையையுடைய மன்னர் சினந்தாலும் கவர்ந்து கொள்ள முடியாது. ஆதலால், ஒருவன் தன் மக்கட்குப் 'செல்வம்' எனச் சேர்த்து வைக்கத்தக்கது கல்வியே; பிற அல்ல!

அனைவருக்கும் கல்வி கிடைக்க வழிசெய்தல் வேண்டும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக