தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 30 நவம்பர், 2012

டிசம்பர் 21 உலகம் அழியுமா ? மாயன் நாள்காட்டி !



டிசம்பர் 21 ம் திகதியோடு உலகம் அழியப்போவதாக பெரும் புரளி ஒன்று கிளம்பியுள்ளதை பலரும் அறிந்திருப்பீர்கள். மாயன் என்று சொல்லப்படும் ஒரு பழங்குடி மக்களின் நாள் காட்டியில் இவ்விடையங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. உலகம் வெப்பமாதல், சுணாமி தோன்றும், என்று எல்லாம் இந்த நாள் காட்டியில் முதலிலேயே எழுதப்பட்டுள்ளது. சொன்னது போல நடந்தும் உள்ளதாம். பல ஆயிரம் ஆண்டுகளாக பாதுகாத்து வரப்படும், இந்த நாள்காட்டி டிசம்பர் மாதம் 21ம் திகதொயோடு முடிவுற்றுள்ளது. அதாவது அதற்குப் பின்னர் ஒன்றும் எழுதப்படவில்லையாம். இதன் அடிப்படையில், பூமிக்கு பாரிய சேதம் ஏற்பட்டு பூமி அழியும், இல்லையேல் மனித குலம் அழியும் என்று நம்பப்படுகிறது. பூமி தோன்றிய காலத்தில் கடலில் தான் முதல் உயிரினம் தோன்றியது, பின்னர் அவற்றில் சில தரையில் வாழக் கற்றுக்கொண்டது, அற்றில் சில பறக்கவும் கற்றுக்கொண்டது. இதனை நாம் கூர்ப்பு என்கிறோம். அதாவது இயற்கை எம்மை மாற்றுகிறது. அதேபோல எமது உடலும் மாறுகிறது. இதற்கு மிகச் சிறந்த உதாரணம் என்னவென்றால், இலங்கையில் உள்ள ஒரு ஆட்டை(ஆடு) லண்டனில் கொண்டு வந்துவிட்டால் அது செம்மறி ஆடாக மாறிவிடும். குளிரை தாங்கக்கூடிய ரோமங்கள் தானாகவே வளர ஆரம்பிக்கும். இதனையே நாம் பரிணாம வளர்ச்சி என்கிறோம்.

இதேபோல உலகம் தோன்றிய நாளில் இருந்து, பல ஜீவராசிகள் இவ்வுலகில் வாழ்ந்து மறைந்துவிட்டன. அவற்றில் பல இந்த உலகில் வாழ்ந்து மறைந்ததற்க்கு அடையாளம் கூட இல்லை. இருப்பினும் பாரிய உடல்வாகு கொண்ட டைனசேர்கள் எச்சங்களை மட்டுமே மனிதர்கள் தற்போது கண்டு பிடித்து வருகின்றனர். இதேபோல ஒரு காலத்தில் மனிதன் வாழ முடியாத கிரகமாக பூமி மாறும் என்பது அனைவரும் ஏற்றுக்கொண்ட விடையம். அக் காலத்தில், வேறு ஒரு ஜீவராசியே உலகில் இருக்கும். ஆனால் அந்த நிலை அவ்வளவு சீக்கிரம் வந்துவிடுமா ? அங்கே தான் பலருக்கும் இருக்கிறது சந்தேகம். அமெரிக்க விண்வெளி ஆராட்சி நிறுவனம் இன்றைய தினம் காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது டிசம்பர் 21ம் திகதி உலகம் அழியாது என்பது தான். பரவிவரும் இச் செய்தியால், பல சிறுவர்கள் சிறுமிகள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் என்ற அதிர்சித் தகவலும் வெளியாகியுள்ளது. குறிப்பாக பள்ளி மாணவர்கள் இது குறித்து கவலையடைந்துள்ளதாகவும், இரவில் உறங்காது கவலையோடு காணப்படுவதாகவும் அது மேலும் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக சிறுவர்கள் மன அழுத்தத்துக்கு உள்ளாகியுள்ளதாகவும், சிலர் தற்கொலை செய்யலாம என்று தமது நண்பர்களோடு அளவளாவி வருவதாகவும் மேலும் அறியப்படுகிறது. எனவே பெற்றோர், வீட்டில் இது குறித்து பேசவேண்டாம் என்றும், இது குறித்துப் பேசுகையில் பிள்ளைகளுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் பேசவேண்டும் என்றும் அமெரிக்க விண்வெளி ஆராட்சி மையம் மேலும் தெரிவித்துள்ளது. அமெரிக்க விண்வெளி ஆராட்சி மையம், எமது சூரிய வட்டாரத்துக்கு அப்பால், உள்ள கிரம் ஒன்று பற்றி கடும் ஆராட்சிகளை மேற்கொண்டு வருகிறது. இக் கிரகம் இன்னும் சில நூறு ஆண்டுகளில் பூமிபோல, மனிதர் வாழ ஏற்ற கிரகமாக மாறிவிடும் என்று நம்பப்படுகிறது. ஓரளவு ஆக்சிஜன் இக் கிரகத்தில் இருப்பதால், அங்கே செயற்கை கோள் ஒன்றை அனுப்பி, ஆக்சிஜனை தயாரிக்கக்கூடிய தாவரங்களையும் மரங்களையும் அங்கே விதைக்க, நாசா பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந் நிலையில் பூமிக்கு ஆபத்து வந்தால், பூமியில் இருந்து குறிப்பிட்ட ஒரு தொகை மக்களை அந்தக் கிரகத்துக்கு மாற்றவும் முடியும். எனவே புத்தி ஜீவிகளான மனித இனம் அவ்வளவு சீக்கிரத்தில் அழியப்போவது இல்லை. அதிலும் தமிழன் இருக்கும்வரை நடக்குமா என்ன ? கதைத்து கதைத்தே பூமியைக் காப்பாற்றிவிடமாட்டோமா என்ன ? இல்லை என்றாலும் எங்களுக்குள் இருக்கும் அடிபாட்டை(பிளவு) பார்த்து பூமியோடு மோதவுள்ள விண் கல் திரும்பிச் சென்றுவிடாதா என்ன ?

அதிர்வுக்காக:

வல்லிபுரத்தான்.

http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=4087

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக