தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 28 அக்டோபர், 2012

குண்டலினி சக்தியின் அதீத ஆற்றல் .....



குண்டலினி சக்தியின் அதீத ஆற்றல் .....

நமது எல்லா சக்திகளுக்கும்,ஆற்றல்களுக்கும் குண்டலினியே திறவுகோள்.

அதைக்கிளப்புவதற்கு மனம் தான் கருவியாக இருக்கிறது. மனம் ஒருமைப்படும்,

தாரணை,தியானப்பயிற்சிகளால் அதைக் கிளப்ப முடியும்.

பார்வையாலும்,கையாலும்,நாக்காலும் கூட கிளப்பிவிடும் ஞானியர்கள் உண்டு.

இப்பொழுதெல்லாம் கட்டணம் வசூலித்து குண்டல னியை கிளப்பிவிடும் குருமார்கள் அதிகரித்து விட்டார்கள்.

குண்டலினி கிளம்பும் போது அடிமுதுகில் பட்,பட் என்ற சத்தமெழும்பும்,

குறுகுறுப்பு காணப்படும்.

பாம்பு ஊர்ந்து செல்வது போல, பறவை பறப்பது போல

, தவளை போல தத்தி, குரங்கு போல தாவி, மீன் போல நீந்தி

என ஐந்து விதங்களில் குண்டலினியானது மூலாதாரத்தில் இருந்து மேல் நோக்கி சகஸ்ராரத்திற்கு போகும்

என்று சித்தர்களால் சொல்லப்பட்டுள்ளது.

குண்டலினி கிளம்பியவர்களுக்கு நரம்புகள் ஊக்கம் பெறும்

.தேகம் ஆரோக்யமாக விளங்கும்.

பசியைத் தூண்டும்.

புலன்கள் விழிப்பு நிலையில் செயல்படும்.

பாலுணர்ச்சி சக்தி அதிகமாக ஊறும்.

அதை விரயம் செய்யாமல் ஓஜஸாக மாற்றிக் கொண்டால் ஆற்றல் அதிகமாகும்.

ஒழுக்கமில்லாதவர்களுக்கு இதனால் வக்கிரமான எண்ணங்கள் தூண்டப்பட்டு,

காமவெறி பிடித்தவர்களாக மாறி விடுவார்கள்.

தீயவர்களுக்கு இதை கிளப்பி விட்டால்

அகங்காரம், கோபம் அதிகமாகி பேராசைக்காரனாக,

திருடனாக, ஏன் கொலைகாரனாக கூட மாறிவிட வாய்ப்புகள் உண்டு.

கடவுளுக்கே சவால் விடுவார்கள்.

இதை நாம் புராண காலம் தொட்டு இன்றளவும் நடைமுறையில் பார்க்கிறோம்.

ஆகவே குண்டலினியை கிளப்ப வேண்டுமெனில்


முதலில் நல்லொழுக்கங்களை கடை பிடிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

யோகத்தின் நோக்கமே மனிதனை ஒழுக்கம்

உள்ளவனாக வாழ வைப்பதுதான்.

தீய பழக்கவழக்கங்கள் உள்ள பலகீனமானவர்களுக்கு

அதன் சக்தியை தாங்க முடியாமல் போகும்.

மனதிடம் இல்லாதவர்களுக்கு பைத்தியம் பிடிக்கவும் வாய்ப்புகள் அதிகம்.


நல்ல குருமார்கள் சீடர்கள் ஒழுக்கமுள்ளவர்களாக மாறும் வரை அவர்களை

பக்குவப்படுத்தி போதனைகள் செய்து அவர்கள் ஒழுக்கமுள்ளவர்கள்

என்று உறுதி செய்து கொண்டு அதற்குப் பிறகே குண்டலினியைத் திருப்பி விடுவார்கள்.


அதன் சக்தியைத் தாங்க போதிய பலம் தேவை என்பதினால்

ஆசனங்கள், பந்தங்கள், உடல் பயிற்சிகள் யாவும் கற்றுக் கொடுப்பார்கள்.

அதோடு ப்ராணாயாம்ப் பயிற்சியும் தேவை.

சுவாசம் வசப்பட்டால் மனம் அடங்கும்.

எனவேதான் நாடி சுத்தி அதைத் தொடர்ந்து ப்ராணாயாமம்

.
நல்ல குருமுகமாக பயிற்சி மேற் கொண்டால்,

முதலில் குண்டலினியைக் கிளப்பி,

பிறகு ஒவ்வொரு சக்கரமாக இதழ்களை விரித்து அதனுள்

அதை ஏற்றி, மீண்டும் கீழிறங்கிவிடாமல்

ஒவ்வொரு இதழ்களையும் மூடி,

முடிவில் சகஸ்ராரத்துக்கு ஏற்றி ஆயிரம் இதழ்களிலும் நிரப்பி

ஆனந்தந்தைப் பெற வழிவகை செய்வார்கள்

. ஒவ்வொரு சக்கரங்களும் இயங்க மாதக்கணக்கில்

பயிற்சி தேவைப்படும்

. பயிற்சியின் முடிவில் அதிகப் புலனாற்றலும்,

அஷ்டமா சித்திகளும் கைகூடும்.பிரகாசம் உள்ளவர்களாக மாறிவிடுவார்கள்.
 —

1 கருத்து:

  1. மிக்க நன்றி ஐயா குண்டலினி பயிற்சியை பெற யாரை அணுகவேண்டும் என்பதை தெரியப்படுத்துங்கள்.

    பதிலளிநீக்கு