தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 25 ஆகஸ்ட், 2012

வள்ளலார் வழங்கிய அறிவுரைகள்!!


நன்றுடையானைத் தீயதிலானை நரைவெள்ளே
றொன்றுடையானை உமையொருபாகம் உடையானைச்
சென்றடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக்
குன்றுடையானைக் கூறவென்னுள்ளங் குளிரும்மே.

வள்ளலார் வழங்கிய அறிவுரைகள்---


நல்லோர் மனதை நடுங்க செய்யாதே!

தானம் கொடுப்போரைத் தடுத்து நிறுத்தாதே!

மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்யாதே!

ஏழைகள் வயிறு எரியச் செய்யாதே!

பொருளை இச்சித்து பொய் சொல்லாதே!

பசித்தோர் முகத்தைப் பாராதிராதே!

இரப்போர்க்கு பிச்சை இல்லை என்னாதே!

குருவை வணங்கக் கூசி நிற்காதே!

வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சம் அழிக்காதே!

தந்தை தாய் மொழியைத் தள்ளி நடக்காதே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக