தொலைக்காட்சி!!

Search This Blog

Monday, August 13, 2012

கல்யாணம் ஆகாத ஒவ்வொரு ஆண்களும் கண்டிப்பாக படிக்க வேண்டியது...





அவள் விகடனில் இருந்தது ....

கல்யாணம் ஆகாத ஒவ்வொரு ஆண்களும் கண்டிப்பாக படிக்க வேண்டியது...

- சென்னையில் சில இளம் பெண்களிடம் கேட்டோம்... மளிகை கடை லிஸ்ட் போல நீண்டன பாயின்ட்ஸ்!

குறிப்பு: ரொம்ப இளகிய மனதுள்ள ஆண்கள் படித்து பயந்தால் நாங்கள் பொறுப்பில்லை.

ஸ்ரீ சந்திரா, ஐ.டி, அண்ணா பல்கலைக்கழக கிண்டி பொறியியல் கல்லூரி:

''மாப்பிள்ளை மாநிறமா, மேன்லியா இருக்கணும். என்னைவிட ஒரு மூணு இன்ச் உயரம் அதிகமா இருக்கணும். துறுதுறுனு, எல்லாருக்கும் பிடிக்கிற பையனா இருக்கணும். நம்ம சிவகார்த்திகேயன் மாதிரினு வெச்சுக்கோங்க. அப்புறம்... ஸ்போர்ட்ஸ், டான்ஸ்னு கண்டிப்பா ஏதாவது ஒரு எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்டிவிட்டியில கலக்கணும். வாரத்துல அஞ்சு நாள் சமையல் என் பொறுப்பு. பட், மிச்சம் ரெண்டு நாள் அவர் சமைக்கணும். இந்த அக்ரிமென்ட்டுக்கு முகம் கோணாம ஒப்புக்கணும்.

பெயர் சொல்லித்தான் கூப்பிடுவேன். சமயத்துல 'வாடா போடா’வையும் ஜாலியா ரசிக்கணும். எனக்கு நிறைய டிரெஸ் எடுத்துக் கொடுக்கணும். ஷாப்பிங் வர்றப்போ, அவர்தான் எல்லாப் பையையும் தூக்கிக்கணும். புதுசா என்ன டிரெஸ் போட்டாலும், 'உனக்கு சூப்பரா இருக்கு’னு சொல்லணும். எனக்கு தும்மல் வந்தாகூட துடிச்சுப் போயிடணும். கண்டிப்பா அக்கா, தங்கச்சி இல்லாத பையனா இருக்கணும். நாத்தனார் பாலிடிக்ஸ் எல்லாம் சமாளிக்க முடியாதுப்பா. முக்கியமான பாயின்ட்.... மாமியார் எப்பவும் சிரிச்ச முகத்தோட இருக்கணும்!''

சவிதா, எம்.பி.பி.எஸ் இறுதியாண்டு, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி:

''மாப்பிள்ளை ஃபேர், மாநிறம்னு எப்படி இருந்தாலும் ஓ.கே. ஆனா, பணக்கார மாப்பிள்ளை வேண்டவே வேண்டாம். அன்பு காட்டுறதுல பணக்காரங்களா இருந்தா போதும். அப்புறம் ஒரு சின்ன ஆசை உண்டு. அவர் ஒரு 'யமஹா ஆர் 120’ வண்டி வெச்சுருக்கணும் அல்லது வாங்கணும். இதுவரைக்கும் யார் கூடவும் நான் பைக்ல போனதில்ல. பைக்ல பின்னாடி உட்கார்ந்து போற த்ரில்லை அவர் எனக்குக் காட்டணும்.

குழந்தைகள்னா ரொம்பப் பிடிக்கும். குவார்டர்லி, ஹாஃப் இயர்லி, சம்மர் லீவுக்கு அவரோட சொந்தக்காரங்க பசங்க, என்னோட சொந்தக்காரங்க பசங்கனு எல்லா குழந்தைகளையும் வீட்டுக்கு கூப்பிட்டு, அமர்களம் பண்ணணும். ஸ்நாக்ஸ் வாங்கிட்டு வர்றது, தீம் பார்க் டிக்கெட் எடுத்துக் கொடுக்கிறது, டிராவல் அரேஞ்மென்ட் பண்றதுனு எல்லாம் அவர் சப்போர்ட்டிவ்வா இருக்கணும்.

அப்புறம் அடிக்கடி அவர் வேஷ்டி கட்டணும். ஆனா, புடவை கட்டச் சொல்லி என்னை கம்பல் பண்ணக்கூடாது. அவங்க அம்மா பேசுறதைக் காதால கேட்கலாம், ஆனா ஃபாலோ பண்ணக் கூடாது. மீனாட்சி ஆட்சிதான் இருக்கணும் வீட்டுல!''

லீலாவதி, எம்.காம், சென்னைப் பல்கலைக்கழகம்:

''மாமனார், மாமியார் கூட இருக்கறதுல பிரச்னை இல்ல... ஆனா, மொத்தமா பெரிய கூட்டுக் குடும்பம் வேண்டவே வேண்டாம். மாமியாரையும் மாமனாரையும் முடிஞ்சளவு அட்ஜஸ்ட் பண்ணிப்பேன். மாசம் ஒருமுறை ஜாலியா வெளிய கூட்டிட்டுப் போவேன். மாமியாரை சுடிதாரும், மாமனாரை ஜீன்ஸும் போட வெச்சு சந்தோஷப்படுத்துவேன்.

கணவரைப் பொறுத்தவரைக்கும், கலகல டைப்பா இருக்கணும். மீசை கண்டிப்பா இருக்கணும்ங்கிறதை, அண்டர்லைன் பண்ணிடுங்க. கிச்சன்ல இருந்து ஹால் வரைக்கும் பாட்டு பாடி, டான்ஸ் ஆடிக்கிட்டு வர்ற பழக்கம் எல்லாம் எனக்கு உண்டு. அதை எல்லாம் ரசிக்கணும். வாரம் ஒருமுறை பீச், தியேட்டர்னு அவுட்டிங் கூட்டிட்டுப் போகணும். கொஞ்சம் அதிகமா பேசுவேன்... அதனால அவர் அமைதியானவரா இருக்கணும். சண்டை போடுறப்போ, அவர்தான் 'ஸாரி’ கேட்கணும்!''

ஸ்ரீநிவாஸன் என்பவரின் கருத்து :
இந்தக் காலத்து பையன்களிடம் போய் "எப்படிப்பட்ட பெண் வேண்டும்?" என்று கேட்டிருந்தால் இப்படி பதிலளித்திருப்பார்கள்:-

அடிமையும் வேண்டாம்; எனக்கு எஜமானியும் வேண்டாம். என்னைப் போல் அவளும் ரத்தமும், சதையும், இதயமும் உள்ள ஒரு மனிதப் பிறவியாக இருந்தால் போதும். மடிசார் கட்டிக் கொண்டிருக்கும் என் அறுபது வயது அம்மாவை சுடிதார் போட்டுக் கொள்ளச் சொல்லி வற்புறுத்தவும் வேண்டாம். மாடர்ன் டிரஸ்ஸில் உலாவரும் இருபது வயதாகும் என் மனைவி மற்றவர்கள் வற்புறுத்தலால் வேண்டாவெறுப்பாக புடவை கட்டிக் கொள்ளவும் வேண்டாம். ஆக மொத்தம், எனக்கு ஒரு "பெண்" மனைவியாக வர வேண்டும் என்று விரும்புகிறேன் - என்று இந்தக் காலத்து ஆண்கள் சொல்வார்கள்.

நன்றி -அவள் விகடன்
 

No comments:

Post a Comment