தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 22 ஜூலை, 2012

உலகம் எவ்வாறு அழிவைச் சந்திக்கும்?


2012 ஆம் ஆண்டு உலகம் பேரழிவைச் சந்திக்கும் என்ற அச்சமும் எதிர்பார்ப்புக்களும் பல வருடங்களுக்கு முன்னமே ஏற்பட்டு விட்டன. உலகம் இயற்கை அழிவுகளை எதிர் நோக்கி மனித இனம் பூமியில் உயிர்வாழும் சூழல் சிக்கலாகுவதை ஏற்கனவே வெளியான சில ஹாலிவுட் திரைப் படங்களிலும் சித்தரிக்கப் பட்டுள்ளன.
இதற்கு உதாரணமாக 'தி டீப் இம்பாக்ட்' மற்றும் '2012' ஆகிய திரைப்படங்களைக் கூறலாம். இத்திரைப் படங்களின் கதைப் படி 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 21 உடன் மாயன் கலெண்டர் முடிவடைவதால் ஒரு யுகப் பிரளயம் நடந்தே புதிய யுகம் தோன்றும் என்று கூறப்படுகின்றது. இப் பிரளயம் நிகழக் கூடிய வழி வகைகள் பற்றிப் பின்வருமாறு கூறப்படுகின்றது.

1.விண்கற்கள்
சுமார் 6 மைல் விட்டமுடைய விண்கல் ஒன்று மிக வேகமாக பூமியில் மோதியதாலேயே 65 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் பூமியில் வாழ்ந்த இராட்சத உயிரினங்களான டைனசோர்கள் முற்றாக அழிக்கப்பட்டன எனும் கருதுகோள் ஒன்று விஞ்ஞானிகளுக்கிடையே நிலவுகின்றது. கிட்டத்தட்ட அதே போன்ற சம்பவம் ஒன்று பூமியில் நிகழ்ந்தால் மனித இனத்துக்கும் அதே கதிதான் என இவர்கள் கூறுகின்றனர். சமீபத்தில் அதாவது 1908 ஆம் ஆண்டு ரஷ்யாவின் சைபீரியாக் காட்டில் மோதிய விண்கல்லினால் டோக்கியோ நகருக்கு ஒப்பான வெளி ஒன்று உருவான ஆதாரங்களும் உள்ளன.


2. தி ரப்ஜுர் (பேரானந்தம்)
இது கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த ஒரு சாராரின் நம்பிக்கைப் படி 2011 மே 21 அல்லது ஆக்டோபர் 21 இல் உயிரிழக்காதவர்கள் அனைவரும் திவ்விய உடலைப் பெற்று வானத்தில் உறையும் கிறிஸ்துவுடன் இணைவர். அதன் பின் பூமி முழுதும் அழிந்து புது வாழ்க்கைக்குத் தயாராகி விடும்.

3. மாயன் தீர்க்கதரிசனம்
உலகின் மிகவும் புராதன அதே நேரம் பரிணாமத்தில் உச்சக் கட்டத்தை அடைந்து அழிந்து போன நாகரிங்களில் ஒன்றான மாயன் இனத்தவரின் சூரிய நாட்காட்டி டிசம்பர் 21 2012 உடன் முடிவடைகின்றது. இதன் போது சுமார் 25 800 வருடங்களுக்கு ஒருமுறையே ஏற்படும் நிகழ்வாக பால்வெளி அண்டத்தின் (Milky way galaxy) மையத்திற்கு பூமியும் சூரியனும் வரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு வரும் பட்சத்தில் பூமியின் ஈர்ப்பு விசையில் குளறுபடி ஏற்பட்டு மிகப் பெரியளவு இயற்கை அனர்த்தங்கள் அதாவது சுனாமி, பூகம்பம், எரிமலை வெடிப்பு, டோர்னிடோ, என்பன ஏற்பட்டு உலகம் அழிவடையும் என மும்மொழியப் பட்டுள்ளது.

4. மனித இனத்தை கூண்டோடு அழிக்கவல்ல வைரஸ் (Zombies)
மனித இனம் கூண்டோடு அழியத்தக்க விதத்தில் மாற்று மருந்து இல்லாத வைரஸ் கிருமிகள் மனித உடலில் செலுத்தப்பட்டு அம்மனிதர்கள் மூளைச்சாவடைந்து ஒருவரை ஒருவர் மூர்க்கமாக அழித்துக் கொள்வர். இவர்கள் Zombies எனப்படுவர்.

தற்போது கற்பனையிலும் திரைப்படங்களிலும் மட்டுமே நிகழ்ந்து வரும் Zombies பற்றிய கருதுகோள் சாத்தியப் படாவிட்டாலும் மனித இனத்தை ஏற்கனவே பாதித்து வரும் மாற்று மருந்து இல்லாத தொற்று நோய்கள் இவர்கள் மத்தியில் காணப்படுகின்றன. இவையாவன 'SARS', 'avian flu',swine flu, birds flu and AIDS

5. விசேட உயிர் எரிமலை - (Super Volcano)
ICE AGE எனும் அண்மைய கடும் பனிக்காலத்தின் இறுதியில் அதாவது சுமார் 75 000 வருடங்களுக்கு முன்னர் இந்தோனேசியாவின் சுமாத்திரா தீவில் உள்ள டோபா விசேட உயிர் எரிமலை வெடித்து அதன் புகை மண்டலம் பூமியின் முக்கால்வாசி வான் பரப்பை மறைத்தது. இதனால் பல நாட்களுக்கு சூரிய ஒளி மறைக்கப்பட்டு கடும் பனியில் வாடி தாவரங்களும் பல்கிப் பெருகியிருந்த விலங்குகளையும் அழித்துத் துடைத்தது.

இதே போன்ற ஒரு ஆபத்து 21 ஆம் நூற்றாண்டிலும் நேரிடலாம் என விஞ்ஞானிகள் கூறி வருகின்றனர். அதாவது அமெரிக்காவின் வியோமிங் மாநிலத்திலுள்ள மிகப் பெரிய பரப்பளவை உடைய விசேட உயிர் எரிமலையான 'யெல்லோ ஸ்டோன்' (Yellow stonee) வெடித்த்தால் அமெரிக்காவின் மூன்றில் இரண்டு பங்கு பகுதி புகை மண்டலத்தால் சூழப்பட்டு அழிவினைச் சந்திக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக