தொலைக்காட்சி!!

Search This Blog

Tuesday, July 31, 2012

எட்டாம் தேதியில் பிறந்து ............


எட்டாம் தேதியில் பிறந்து இந்த உலகத்தில் தலையெழுத்தை மாற்றிக்கொண்டிருப்பவர்கள் நமது மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்களின் பிறந்த தேதி ஜனவரி 17. நடிகை ரோஜாவின் பிறந்த தேதி நவம்பர் 17. கடவுள் இல்லை;இல்லவே இல்லை என சத்தியம் செய்து இந்துமதத்தினை புதுப்பித்தவர் ராமசாமி நாயக்கர் எனப்படும் ஈ.வே.ரா.அவர்கள் பிறந்ததும் ஒரு 17 ஆம் தேதியில் தான். தமிழ்நாடு அரசின் பாரன்சிக் துறையில் பணிபுரிந்து கொண்டே அரசியல்கட்சி ஆரம்பித்த அரசியல்வாதி தொல்.திருமாவளவன் பிறந்தது ஆகஸ்டு 17. இலங்கைத் தமிழர்களின் துருவநட்சத்திரம், மகா சரித்திரம் வே.பிரபாகரன் பிறந்தது டிசம்பர் 26. கேரளக்கிளி அசின் பிறந்தது 8 ஆம் தேதியில்.பெங்களூரில் பிறந்து தென் இந்திய நாட்டையே மயக்கும் அரபுக்கடல் அப்சரஸ் நயன் தாரா பிறந்தது 26 ஆம் தேதியில்! பிரும்மாண்ட இயக்குநர் என்ற பெயர் எடுத்திருக்கும் ஷங்கர் பிறந்தது ஒரு 26 ஆம் தேதியில்! சரி! இவர்களின் விபரத்தால் என்ன பயன் எனக் கேட்கிறீர்களா? கர்மவீரர் காமராஜர் அவர்களால் மதிய உணவுத்திட்டம் பள்ளிக்கூடங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது.அதை தமிழ்நாடு முழுக்கப்பரவலாக்கியவர் எம்.ஜீ.ஆர்.அநேகமாக 1979 ஆம் வருடம் இந்த முழுமையான சத்துணவுத்திட்டம் தமிழகம் முழுக்க அறிமுகப்படுத்தப்பட்டது என நினைக்கிறேன்.(சில வருடங்கள் முன்பு அல்லது பின்பு இருக்கலாம்) இன்று வரை இந்தத் திட்டத்தை யாராலும் ரத்து செய்ய இயலாது.இந்தத் திட்டத்தால் எத்தனை கோடி தமிழ்க்குழந்தைகள் உயிர் பிழைத்தது என்பது கடவுளுக்கே தெரியும். (ஆக,பலரின் தலையெழுத்தையே மாற்றும் சக்தி 8,17,26 ஆம் தேதியில் பிறந்தவர்களுக்கு உண்டு.இந்த மூன்று தேதிகளும் சனியின் முழு அம்சத்துடன் இயங்குவதால் இந்த தேதியில் பிறப்பவர்கள் பலரது தலையெழுத்தையே அடியோடு மாற்றப்பிறந்தவர்கள்!) நடிகை ரோஜா ஆணைப்போல வேட்டி சட்டை போட்டு தமிழ்ப்படங்களில் நடித்தார்.இன்றும் இந்த நடைமுறைப் பின்பற்றப்படுகிறது. பிராமணர்கள் கடவுளின் பெயரைச் சொல்லி கோயிலிலும்,ஆன்மீகத்திலும் செய்யும் அக்கிரமங்களுக்கு அளவே இல்லை.பிராமணர்களை எதிர்த்தால் ஜாதி வெறியன் என்ற பெயர் வரும்.ஆகவே,இந்த பிராமணர்கள் யாரைச் சொல்லி ஏமாற்றிவருகிறார்களோ,அந்த யாரையே இல்லை எனக்கூறிவிட்டால் தமிழன் சிந்திக்கத்துவங்குவான் .சுயமரியாதையுடன் திகழுவான்.அதனால்தான் கடவுள் இல்லை என நான் பிரச்சாரம் செய்கிறேன் என ஈ.வே.ரா. தனது கருத்தை ‘நான் ஏன் நாத்திகனானேன்?’ என்ற புத்தகத்தில் கூறியுள்ளார். அவர் மேலும் கூறியிருப்பது, ‘கிறிஸ்தவம்,இஸ்லாம் போன்ற வெளிநாட்டு மதங்களைப்பற்றி எனக்குக் கவலையில்லை.எனது இந்து மதம் இந்த மூடநம்பிக்கைகளால் அழிந்துபோய்விடக்கூடாது.அதற்காக என்னால் முடிந்த சீர்திருத்தம் செய்கிறேன்’ என அந்த புத்தகத்தில் கூறியுள்ளார்.அவர் இந்த பிரச்சாரம் செய்து 30 வருடங்கள் ஓடிவிட்டன. இன்று?! நான் கோவிலுக்கெல்லாம் போவதில்லை என சும்மா சாதாரணமாக ஒருவர் சொன்னாலே அவரிடம் , ‘ஏன்பா நீ நாத்திகவாதியா?’ என கேட்குமளவுக்கு ஈ.வே.ரா.வின் பிரச்சாரம் அமைந்துள்ளது. (17 ஆம் தேதியில் பிறந்தவர்கள் அனைவரும் சீர்திருத்தவாதிகள்.இவர்கள் மதவிஷயங்களில் ஈடுபாடு கொண்டால் அளவற்ற எதிர்ப்பை சம்பாதிப்பார்கள்.ஆனால்,இவர்களது சீர்திருத்தம் பல நூற்றாண்டுகள் கடந்தும் பரவிக்கொண்டே இருக்கும்) இலங்கைத் தமிழர் பிரச்னையில் இந்தியாவை இலங்கைக்கு ஆதரவாகவும்,தமிழர்களுக்கு எதிராகவும் இந்திய அரசை திருப்பியது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியில் இருக்கும் எம்.கே.நாராயணன் என்ற அதிகாரிதான்.அந்த அதிகாரியின் நயவஞ்சகத்தை அரசியல் அரங்கில் தோலுரித்துக்காட்டியவர் தொல்.திருமாவளவன்.அதற்காக மத்திய அரசின் மிரட்டலுக்கும் ஆளானார்.ஆதாரம்:1.1.2009 முதல் 1.9.2009 வரை வெளிவந்த தமிழ்நாட்டு தினசரிப்பத்திரிகைகள்.ஆக அவரது பிறந்த தேதியான ஆகஸ்டு 17 இங்கு செயல்படுவது தெரிகின்றது. கி.பி.1970 முதல் இலங்கைத் தமிழ்இனத்தை அழித்துக்கொண்டே இருக்கும் இலங்கை அரசு பிரபாகரனின் அசுரப்பாய்ச்சலுக்குப் பின்னர் தான் சிங்கள ராணுவத்தின் கொட்டம் அடங்கியது.இலங்கைத் தமிழ்மக்களின் தலையெழுத்தை மட்டுமல்ல,இலங்கை அரசு, இந்திய அரசு இவைகளின் தலையெழுத்தையே மாற்றும் சர்வ வல்லமை சனியின் அம்சத்தில் பிறந்த பிரபாகரனுக்கு உண்டு என்பதை இதுவரை நாம் படித்த செய்திகள் சொல்லும்.பிரபாகரனின் வரலாற்றை எழுதவே 20 லட்சம் பக்கங்கள் தேவைப்படும்.அவர் பிறந்தது டிசம்பர் 26. [ முட்டாள் பிரபாகரன்இந்தியாவோடு சேராமல்
தமிழ் நாட்டைக் கவனிக்காமல் இருந்திருந்தால்
சீனாவின் உதவியோடு ஈழத்தைப் பெற்று இருக்க முடியும்
ஆனால் ..................கீழே வாசியுங்கள் ] 

பிரபாகரனிடம் சீனா பல முறை ரகசியப்பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றது. சீனா பிரபாகரனுக்கு தமிழ் ஈழம் வாங்கித் தருமாம்.அதற்குப் பரிசாக திரு கோணமலையை சீனாவுக்கு 99 வருட குத்தகைக்கு தரவேண்டுமாம்.(இயற்கையாக அமைந்துள்ள திருகோணமலைத் துறைமுகத்தின் மீது அமெரிக்காவுக்கு நீண்டநாட்களாக காதல் உண்டு) பிரபாகரன் இந்தியா மீதும்,தமிழ்நாட்டின் மீதும்,தமிழ் சகோதர்கள் மீதும் உள்ள பாசத்தால் இதைச் செய்யவில்லை;(இதைச் செய்திருந்தால் இந்தியாவின் தலையெழுத்தோடு உலக வரலாறே மாறிப் போயிருக்கும்) இப்போது, சீனா இலங்கை அரசிடம் இதே கோரிக்கையோடுதான் கொஞ்சிக்குலாவுகிறது. ஆதாரங்கள்:தமிழ்நாட்டில் வெளிவரும் அனைத்து தமிழ்ப்பத்திரிகைகளும். கி.பி.2006,2007,2008,2009. தமிழ்சினிமாவில் பிரம்மாண்டம் என்பதை நவீனமயமாக அறிமுகப்படுத்தியவர் ஷங்கர்.ஒரு பாடலுக்கு ஒரு கோடி ரூபாயைச் செலவிடும் அளவுக்கு செல்வாக்கு படைத்தவர்.இவரது ஒவ்வொரு படமும் மக்கள் மத்தியில் எந்தளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை ஆராய்ந்தாலே 10 பி.எச்.டி.பட்டம் வாங்கலாம். எம்.ஜி.ஆர்.(17) அவர்கள் பிரபாகரன்(26) மீது பாசம் வைத்திருந்தார்.தற்போது திருமாவளவன்(17), பிரபாகரன் மீது அக்கறை கொண்டுள்ளார். 8 ஆம் எண்ணில் பிறந்தவர்களுக்கு எப்போதும் தான் ஒரு அனாதை என்ற எண்ணம் இருந்து கொண்டே இருக்கும்.எனக்கென இந்த பூமியில் யார் இருக்கிறார்கள் என ஏக்கத்துடன் இருப்பர். இவர்கள் நண்பர்களை பாதிப்பார்கள்.அதாவது,இவர்களது சில ஆளுமைத்திறனை இவருடன் பழகுபவர்கள் பின்பற்றத்துவங்கி மள மளவென முன்னேறிக்கொண்டே இருப்பர்.இவர்கள் மிக மெதுவாக ஆனால் உறுதியாக முன்னேறுவர்.இவர்களுக்கு சுய தம்பட்டம் அடிப்பதில் விருப்பம் அதிகம். இவர்களுக்கு 1 ஆம் எண்காரர்கள் போல வேறு யாரும் உதவ முடியாது.

No comments:

Post a Comment