தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 16 ஜூலை, 2012

நோய்கள் தோன்றும் விதம் , நோயனுகா விதி!!


நோய்கள் தோன்றும் விதம் , நோயனுகா விதி

நோய்கள் தோன்றும் விதம் 

தன் மனையாலுந் தானுமிருக்கையில்
தாவி வேறுமனை தேடிப்புகுந்தாலும்
நன் மனைவியின் போகமிகுந்தாலும்
நல்லுனவென்றதிகம் புசித்தாலும்
வன்மையாகக் குறைத்துப் புசித்தாலும்
மாலையி லெண்ணெய்முழுகி குளித்தாலும்
சின்னமா மலச்சிக்க லிருந்தாலும்
தேடிப்பாரில் வியாதிகள் வருமே
யாகோபு வைத்தியம் -300

தனக்குத் துணையாகிய மனைவியை விட்டு வேறு பெண்களிடம் தொடர்பு கொண்டாலும்,தன் மனைவியிடம் அதிகம் போகம் கொண்டாலும்,ருசியான உணவு வகைகளை அதிகம் உண்டாலும்,காலம் தவறி உணவுகளை குறைத்து உண்பதாலும்,மாலை நேரத்தில் எண்ணெய் தேய்த்து முழுகி குளித்தாலும்,மலச்சிக்கல் இருந்தாலும் அவர்களுக்கு வியாதிகள் தேடி வரும்


இவைகள் மட்டும் அல்லாமல் உடலில் வாதம்,பித்தம்,கபம் என்ற மூன்று வித நாடிகளின் வேறுபாடுகளாலும்,இயற்கையின் கால சூழ்நிலைகளின் வேறுபாடுகளாலும்,நோய் எதிர்ப்பு சக்தி குறைவதாலும் நோய்கள் வரும்.
---------------------------------------------------------------------------------------
நோயனுகா விதி

நாளி ரண்டு
வாரமிரண்டு
மாதமிரண்டு
வருடமிரண்டு

என்பது சித்தர்கள் வகுத்த மருத்துவ மொழியாகும்

நாளிரண்டு : ஒவ்வொரு நாளும் இருமுறை மலம் கழிக்க வேண்டும்.
வாரமிரண்டு : வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.
மாதமிரண்டு:மாதம் இருமுறை மட்டும் உடல் உறவு கொள்ள வேண்டும்.
வருடமிரண்டு:ஆறு மாதத்திற்கு ஒரு முறை பேதி மருந்து உட்கொண்டு வயிற்றை சுத்தம் செய்யவேண்டும்.

இவற்றை கடை பிடித்தால் நோய்கள் உடலில் தோன்றாது.இவைகள் மட்டும் இல்லாமல் கர்ம வினைகளாலும் நோய்கள் தோன்றும் என்று அகத்தியர் பெருமான் கூறுகின்றார்.அதைப் பற்றிய விளக்கங்களை அடுத்த பதிவில் பார்க்கலாம்.நன்றி!

இமயகிரி சித்தர்
www.siddharprapanjam.org


சித்த மருத்துவ பழமொழிகள் விளக்கம் -2

ஆண்மைக்குறைவு நீக்கும் கீரைகள்

நறுந்தாளி நன்முருங்கை தூதுளை பசலை 
வாளிளறு கீரை நெய்வார்த்துண்ணில் யாழிஎன
விஞ்சுவார் போகத்தில் பெண்களெல்லாம்
பின் வாங்கிக் கேள்

இந்தியாவில் சுகாதாரத்துறை ஆய்வு கணக்கெடுப்பில் இன்றைய ஆண்களிடம் 75% வீதம் ஆண்மைக்குறைவு உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

"கொக்கோகம்" என்ற காம சாஸ்த்திரத்தை முனிவர்களால் உருவாக்கப்பட்டு உலகிற்கு அளித்த நமது இந்தியாவில் இப்படி ஒரு நிலை,இன்றைய கலாச்சார சீரழிவு,மற்றும் past food எனப்படும் உணவு வகைகளாலும் இந்நிலை ஏற்பட்டுள்ளது.ஆண்மைக்குறைவினால் பல குடும்பங்களில் கணவன் மனைவியிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றி விவகாரத்து வரை செல்ல இதுவும் ஒரு காரணமாக உள்ளது
.

ஆண்மைக் குறைவைப் போக்கும் அற்புதமான வழிமுறைகளை சித்தர்கள் வகுத்து அளித்துள்ளனர்.இவற்றுக்கான உணவுகள் மற்றும் மருந்து முறைகள் ஏராளமாக உள்ளது அதில் ஒரு முறைதான் மேலே உள்ள பாடலில் உள்ளது.

நறுந்தாளி என்பது தாளிக்கீரை ஆகும்
நன்முருங்கை என்பது முருங்கைக்கீரை
அடுத்து தூதுவேளை -பசலை கீரை -அரைக்கீரை
இந்த ஐந்து வகை கீரைகளை பசு நெய் ஊற்றி சமைத்து உண்டு வர யாழி என்ற (பத்து சிங்கத்தின் பலம் கொண்டது) விலங்கின் பலம் உடலுக்கு கிடைக்கும் என சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இவைகளை சமைத்து உண்டு அனைவரும் உடல் பலத்துடன் வாழலாமே

நன்றி!
இமயகிரிசித்தர்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக