தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 23 ஜூலை, 2012

திருவாலங்காடு; திருஞானசம்பந்தர்


திருவாலங்காடு; 
திருஞானசம்பந்தர் 
******************www.fb.com/thirumarai
வெள்ள நீர்ச் சடையர் போலும்;
விரும்பு வார்க்கு எளியர் போலும்;
உள்ளுளே உருகி நின்று
அங்கு உகப்பவர்க்கு அன்பர்போலும்;
கள்ளமே வினைகள் எல்லாம் கரிசு
அறுத் திடுவர் போலும்
அள்ளல் அம் பழனை மேய
ஆலங்காட்டு அடிகளாரே.

செந்தழல் உருவர் போலும்;
சின விடை உடையர் போலும்;
வெந்த வெண்நீறு கொண்டு
மெய்க்கு அணிந்திடுவர் போலும்;
மந்தம் ஆம் பொழில் பழன்னை
மல்கிய வள்ளல் போலும்;
அந்தம் இல் அடிகள்போலும்
ஆலங்காட்டு அடிகளாரே.

கண்ணினால் காம வேளைக்
கனல் எழ விழிப்பர் போலும்;
எண் இலார் புரங்கள் மூன்றும்
எரியுணச் சிரிப்பர் போலும்;
பண்ணின் ஆர் முழவம்
ஓவாப் பைம் பொழில் பழனை மேய
அண்ணலார் எம்மை ஆளும்
ஆலங்காட்டு அடிகளாரே.
 


காறிடு விடத்தை உண்ட கண்டர்;
எண் தோளர் போலும்;
தூறு இடு சுடலை தன்னில்
சுண்ண வெண் நீற்றர் போலும்;
கூறு இடும் உருவர் போலும்;
குளிர் பொழில் பழனை மேய
ஆறு இடு சடையர் போலும்
ஆலங்காட்டு அடிகளாரே.

பார்த்தனோடு அமர் பொரூது
பத்திமை காண்பர் போலும்;
கூர்த்த வாய் அம்பு கோத்துக்
குணங்களை அறிவர் போலும்;
பேர்த்தும் ஓர் ஆவ நாழி
அம்பொடும் கொடுப்பர்போலும்
தீர்த்தம் ஆம் பழனை மேய
திரு ஆலங்காடனாரே.

வீட்டினார் சுடு வெண் நீறு மெய்க்கு
அணிந்திடுவர் போலும்;
காட்டில் நின்று ஆடல்
பேணும் கருத்தினை உடையர் போலும்;
பாட்டின் ஆர் முழவம் ஓவாப்
பைம்பொழில் பழனை மேயார்;
ஆட்டினார், அரவம்தன்னை;
ஆலங்காட்டு அடிகளாரே.

தாள் உடைச் செங்கமல்லத்
தடங் கொள் சேவடியர்போலும்;
நாள் உடைக் காலன் வீழ
உதை செய்த நம்பர்போலும்;
கோள் உடைப் பிறவி தீர்ப்பார்;
குளிர் பொழில் பழனை மேய
ஆள் உடை அண்ணல் போலும்
ஆலங்காட்டு அடிகளாரே.

கூடினார், உமைதன்னோடே குறிப்பு
உடை வேடம் கொண்டு;
சூடினார், கங்கையாளைச்
சுவறிடு சடையர் போலும்;
பாடினார், சாம வேதம்;
பைம் பொழில் பழனை மேயார்;
ஆடினார், காளி காண;
ஆலங்காட்டு அடிகளாரே.

வெற்று அரைச் சமணரோடு
விலை உடைக் கூறை போர்க்கும்
ஒற்றரைச் சொற்கள் கொள்ளார்
குணங்களை உகப்பர்போலும்;
பெற்றமே உகந்து அங்கு
ஏறும் பெருமையை உடையர்போலும்;
அற்றங்கள் அறிவர்போலும்
ஆலங்காட்டு அடிகளாரே.

மத்தனாய் மலை எடுத்த
அரக்கனைக் கரத்தோடு ஒல்க
ஒத்தினார், திருவிரல்லால்
ஊன்றியிட்டு அருள்வர் போலும்
பத்தர்தம் பாவம் தீர்க்கும்
பைம் பொழில் பழனை மேய
அத்தனார்; நம்மை ஆள்வார்
ஆலங்காட்டு அடிகளாரே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக