தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 11 மே, 2012

பனை!


சண்டக்காரன் கொல்லையா இருந்தா ராத்திரியில வெட்டுவோம். வேற ஊர்க்காரன் கொல்லையா இருந்தா விடியகாத்தால வெட்டுவோம். ஒரு மூட்டைக்கு கம்மியா இருந்தா அங்கியே வெட்டி உறிஞ்சிடுவோம். நல்ல இளசா ரெண்டு மூணு மூட்டையா இருந்தாதான் வூட்டுக்கு வரும். காலைல கெளம்பி பனைமரம் தேடி செல்லும் பயணம் பொழுது இறங்கியும் நீளும் அவ்வப்போது. மரம் ஏறுன பாதிபேர் மலேசியா சிங்கப்பூர்லயும், ஓடி ஓடி காய் பொறுக்கி மூட்டைக்கட்டுனதுல முக்காவாசி பேர் துபாய் சவுதினு கெடக்கானுவ. ஏதோ பனைமரத்தப் பாக்கமுடியலனாலும் காசு குடுத்தாலாவது கெடைக்குதே இந்த ஊர்ல. நொங்குக்கு காப்புரிமை வாங்கி பாக்கெட்ல அடைச்சி நமக்கே விக்காம இருக்கானுங்களே, எவன் கண்ணுலயும் சிக்கலையோ?. அடுத்த வாரம் ரெண்டு கொலைய போடணும் ஊருக்குப்போய். :-):-)

(மேற்கண்ட படம் க்ளிக்கியது தி.நகர் துரைசாமி பாலம் அருகில்.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக