தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 2 மார்ச், 2012

தமிழ்நாடு!!

தமிழ்நாடு (Tamil Nadu) ஓர் இந்திய மாநிலமாகும். தமிழ்நாடு, தமிழகம் என்றும் பரவலாக அழைக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் மெட்ராஸ் ஸ்டேட் என்றும் தமிழில் சென்னை ராஜ்ஜியம் என்றும் அழைக்கப்பெற்றது. இதனை தமிழ்நாடு என்று மாற்றக்கோரி போராட்டங்கள் நடைபெற்றன. சங்கரலிங்கனார் என்பவர் 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்துறந்தார்[4]. பின்னர் மதராசு ஸ்டேட் என்று இருந்த பெயர் 1969 ஆம் ஆண்டு தமிழ்நாடு என்று மாற்றப்பட்டது.

பொருளடக்கம்

  [மறை

[தொகு]புவியமைப்பு

தமிழ்நாடு இந்திய தீபகற்பத்தின் தென் கோடியில் அமைந்துள்ளது. வடக்கில் கர்நாடகம்ஆந்திரா ஆகிய மாநிலங்களும், மேற்கில் கேரளாவும் உள்ளன. யூனியன் பிரதேசமாகிய புதுச்சேரி (முன்பு பாண்டிச்சேரி என்று அழைக்கப்பட்டது) தமிழ் நாட்டின் கிழக்குக் கரையோரத்தில் அமைந்துள்ளது. இம்மாநிலத்துக்குத் தென்கிழக்கில்இலங்கைத் தீவு உள்ளது.
நாட்டின் ஏனைய பல பகுதிகளைப் போலன்றி, தமிழ்நாடு, அக்டோபர் - டிசம்பர் மாதங்களில் "வடகிழக்குப் பருவப் பெயர்ச்சிக் காற்று" மூலமே மழை பெறுகிறது. இக்கால கட்டத்தில் வங்காள விரிகுடாவில் உருவாகும் புயற்சின்னங்களின் மூலம் பெய்யும் மழையை உழவர்கள் பெரிதும் நம்பியுள்ளனர்.
இம்மாநிலத்தின் முதன்மையான ஆறான காவிரி ஆறு வடக்கே கர்நாடக மாநிலத்தில் குடகு மலையில் உருவாகித் தமிழ்நாட்டில் பாய்கிறது. வைகைதாமிரபரணி ஆகியவை பிற முதன்மையான ஆறுகளாகும்.
மதராஸ் என்று 1996 வரை அழைக்கப்பட்டு வந்த சென்னையே மாநிலத்தின் மிகப் பெரிய நகரமும் தலைநகரமுமாகும். உலகின் இரண்டாவது நீளமான கடற்கரையான மெரீனா கடற்கரை சென்னையிலேயேஉள்ளது. மதுரை,திருச்சிராப்பள்ளிசேலம்,திருநெல்வேலி , ஈரோடு,கோயம்புத்தூர்,திருப்பூர்தூத்துக்குடிமற்றும் வேலூர் தமிழ் நாட்டின் ஏனைய பெரிய நகரங்களாகும்.

[தொகு]வரலாறு

தமிழ்நாடு சேர, சோழ, பாண்டிய மன்னர்களால் ஆளப்பெற்று பல கோயில்களையும்,சிற்பங்களையும் பெற்ற கலை அம்சம் கொண்ட பகுதியாக விளங்குகிறது. இதன் எல்லைகளை தொல்காப்பியப் பாடல்
வட வேங்கடம் தென் குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகம்
என்று வரையறுக்கிறது (தொல்காப்பியம், சிறப்புப் பாயிரம், 1-3).
தொன்றுதொட்டே தமிழ் மக்கள் வாழ்ந்த நிலப்பரப்பு தமிழகம் என்ற பெயரால் அழைக்கப்பட்டது. அதற்குச் சான்றாகக் கீழ்வரும் இலக்கியக் குறிப்புகளைக் காட்டலாம்:
வையக வரைப்பில் தமிழகம் கேட்ப (புறநானூறு, 168 :18)
இமிழ் கடல் வேலித் தமிழகம் விளங்க (பதிற்றுப்பத்து, இரண்டாம் பத்து, பதிகம் : 5)
இமிழ் கடல் வரைப்பில் தமிழகம் அறிய (சிலப்பதிகாரம், அரங்கேற்றுகாதை : 38)
சம்புத் தீவினுள் தமிழக மருங்கில் (மணிமேகலை, 17: 62)

தமிழ்நாடு, ஏறத்தாழ 6000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வரலாற்றைக் கொண்டுள்ளது. இங்கே வாழுகின்ற திராவிட இன மக்களின் தோற்றம் தொடர்பாகப் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. சிலர், ஒரு காலத்தில் இந்தியா முழுதும் பரவி வாழ்ந்திருந்த திராவிடர், சிந்து வெளி நாகரீகத்துக்குஉரியவர்களுள் ஒரு பிரிவினராக இருந்தனர் என்று கருதுகிறார்கள். இவ்வினத்தவருடைய தெற்கு நோக்கிய பெயர்வு, ஆரிய ஆக்கிரமிப்புக் கொள்கையுடன்தொடர்புபடுத்தப் படுகின்றது. இக் கொள்கைப்படி, வடக்கிலிருந்து வந்த ஆரிய ஆக்கிரமிப்பு திராவிடர்களை இன்றைய இந்திய மாநிலங்களான தமிழ்நாடு,ஆந்திரப் பிரதேசம்கர்நாடகம்கேரளா ஆகியவை அடங்கிய தென்னிந்தியாவுக்குள் ஒடுக்கியதாகக் கருதப்படுகின்றது. வரலாற்று உண்மைகள் எவ்வாறு இருப்பினும், தற்காலத் தமிழ் மக்களுடைய அடையாளம் மேற்கண்ட கொள்கைகளின் அடிப்படையிலேயே வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது எனலாம்.
மதுரை மீனாட்சியம்மன் கோயில்(1600). 170 அடி உயரத்தில் எழுகின்ற தெற்குக் கோபுரம்
இன்றைய தமிழ்நாட்டையும் உள்ளடக்கிப் பரந்திருந்த பண்டைய திராவிட நாடு, பல்வேறு நாடுகளாகப் பிரிந்திருந்தது. இவற்றைக் காலத்துக்குக் காலம் பல அரச வம்சங்கள் ஆண்டுவந்தன. இவற்றுள் முதன்மையாகக் குறிப்பிடத்தக்கவர்கள், பாண்டியர்சேரர்சோழர்பல்லவர்சாளுக்கியர்விஜய நகரத்தார்நாயக்கர் என்போராவர்.
மேலே குறிப்பிடப்பட்ட மதுரை தற்கால மதுரைக்குத் தெற்கே அமைந்திருந்து பிற்காலத்தில் ஏற்பட்ட கடல்கோளினால் முற்றாக அழிந்து போனதாகப் பழந் தமிழ் இலக்கியங்கள் வாயிலாக அறியக்கிடைக்கின்றது. பாண்டிய நாடு கல்வியிலும், வணிகத்திலும் சிறந்து விளங்கியது. இவர்கள் அக்காலத்தின் பேரரசுகளாகிய கிரேக்கரோமப்பேரரசுகளுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். அவ்வப்போது பல்லவர்களாலும்சோழர்களாலும் அடக்கப் பட்டிருந்தாலும், தமிழ்நாட்டின் ஆற்றல் மிக்க அரச பரம்பரைகளில் ஒன்றாகப் பாண்டியர் விளங்கினர்.

[தொகு]கிபி 1 தொடக்கம் 4 ஆம் நூற்றாண்டு வரை

முற்காலச் சோழர் கிபி முதலாம் நூற்றாண்டு தொடக்கம் நான்காம் நூற்றாண்டு வரை தமிழகத்தில் ஆட்சி செலுத்தினர். இவர்களுள் மிகப் புகழ் பெற்றவனாக கரிகால் சோழன் விளங்கினான். தற்காலத் தஞ்சாவூர்திருச்சிராப்பள்ளி ஆகியமாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளில் செல்வாக்குச் செலுத்திய இவர்கள், போர் நடவடிக்கைகளில் சிறந்து விளங்கியதாக நம்பப்படுகிறது.

[தொகு]கிபி 4 தொடக்கம் 9 ஆம் நூற்றாண்டு வரை

கடற்கரைக் கோயில்; அமைத்தவர்: பல்லவர்; இடம்:மாமல்லபுரம்; காலம்: (கி.பி.8ம் நூற்றாண்டு.) – யுனெஸ்கோவின்உலக பாரம்பரியக் களம்.
கி.பி. நான்காம் நூற்றாண்டின் பிற்பகுதியில், சிறந்த கோவில்களை அமைத்த பல்லவர்கள் முன்னணிக்கு வந்தனர். இவர்கள் தென்னிந்தியாவில் 400 ஆண்டுகள் ஆதிக்கம் செலுத்தினர். காஞ்சிபுரத்தைத் தலை நகரமாகக் கொண்டு தமிழ் நாட்டின் பெரும்பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். ஆறாம் நூற்றாண்டில் பல்லவர்கள் சோழரைத் தோற்கடித்தனர். இவர்கள் செல்வாக்கு இலங்கை வரை பரவியிருந்ததாகக் கருதப்படுகிறது. முதலாம் மகேந்திரவர்மனும், அவனுடைய மகனான நரசிம்மவர்மனும் பல்லவர்களுள் சிறந்து விளங்கிய அரசர்களாவர்.திராவிடக் கட்டிடக்கலை பல்லவர் காலத்திலேயே உருப்பெற்றது. இறுதிப் பல்லவ மன்னன் அபராசிதன் ஆவான். இவன் கி.பி ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் ஆதித்த சோழனால் தோற்கடிக்கப்பட்டதுடன் பல்லவராட்சி தமிழ் நாட்டில் முடிவுக்கு வந்தது.
இக்காலக்கட்டத்தில் (கிபி 300 - கிபி 600பெளத்தம் தமிழகத்தில் மிகவும் செல்வாக்கோடு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. [5]

[தொகு]9 தொடக்கம் 13 ஆம் நூற்றாண்டு வரை

இராசேந்திர சோழன் ஆட்சியில் சோழப் பேரரசு கி.பி. 1030
கி.பி ஒன்பதாம் நூற்றாண்டில் சோழர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தனர். இராசராச சோழன் மற்றும் அவனது மகனானஇராசேந்திர சோழன் ஆகியோரது காலத்தில் சோழர், தென்னிந்தியாவில் ஆற்றல் மிக்கவர்களாக உருவெடுத்தனர். இவர்களுடைய பேரரசு, மைய இந்தியா, ஒரிசா, மற்றும் வங்காளத்தின் சில பகுதிகள்வரைகூடப் பரவியிருந்தது.
இராசராச சோழன் கிழக்கிலிருந்த சாளுக்கிய அரசர்கள் மற்றும் சேர மன்னர்களை வீழ்த்தினான். அத்துடன் பாண்டிய அரசிடமிருந்து இலங்கையின் சில பகுதிகளையும் கைப்பற்றினான். இராசேந்திர சோழன் மேலும் முன்னேறி அந்தமான் நிக்கோபார் தீவுகள்இலட்சத்தீவுகள்சுமத்ராசாவாமலேயா மற்றும் பெகு தீவுகளையும் தன் கப்பற்படையைக் கொண்டு கைப்பற்றினான். அத்துடன் தற்போதைய பீகார் மற்றும் வங்காளப் பகுதிகளை ஆண்டு வந்த மகிபாலனையும் வீழ்த்தினான். தன் வெற்றியைக் கொண்டாடும் வகையில் கங்கை கொண்ட சோழபுரம் எனும் தலைநகரை உருவாக்கினான். பதிமூன்றாம் நூற்றாண்டு வாக்கில் சோழர்களின் ஆதிக்கம் குறைந்தது.

[தொகு]14ஆம் நூற்றாண்டு

14ஆம் நூற்றாண்டில் சோழர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு பாண்டியர்கள் மீண்டும் எழுச்சி பெற்றனர். ஆயினும் அந்த எழுச்சி நீண்ட காலம் நீடிக்கவில்லை. 1316 இல் வடக்கிலிருந்து படையெடுத்து வந்த கில்சி ஆட்சியாளர்கள், மதுரையை முற்றுகையிட்டு சூறையாடினர். இசுலாமியர்களின் படையெடுப்பு சோழர்களையும் பாண்டியர்களையும் ஆற்றலற்றவர்களாக்கி இசுலாமிய "பாமினி" ஆட்சிக்கு வித்திட்டது. இசுலாமியப் படையெடுப்புக்கு பதிலடி தரும் வண்ணம் பல்வேறு சிற்றரசுகள் சேர்ந்து விசயநகர பேரரசைத் தோற்றுவித்தன. இப்பேரரசின் பல்வேறு பகுதிகள் பிரிக்கப்பட்டு அவற்றை மேற்பார்வையிட நாயக்கர்கள் என்னும் ஆட்சியாளர்கள் நியமிக்கப் பட்டனர். அம்பியை தலை நகராகக் கொண்டிருந்த விசய நகரப் பேரரசு செல்வச் செழிப்போடும் அமைதியுடனும் திகழ்ந்தது.
ஆனால், 1564 ஆம் ஆண்டு வாக்கில் நடந்த தலிகோட்டா போரில் தக்காணப் பீடபூமியைச் சேர்ந்த சுல்தான்களால்விசயநகர ஆட்சியாளர்கள் தோற்கடிக்கப்பட்டு, அவர்கள் ஆட்சிக்கடங்கிய பகுதிகள் யாவும் நாயக்கர்களிடையேபிரித்தளிக்கப்பட்டன. நாயக்கர் ஆட்சிக் காலத்திலும் தமிழ்நாடு அமைதியுடனும் செழிப்புடனும் விளங்கியது. தஞ்சைமற்றும் மதுரையைச் சேர்ந்த நாயக்கர்கள் புகழ் பெற்று விளங்கியதோடு பழங்கால கோயில்களை புதுப்பிக்கவும் செய்தனர்.
இன்றைய கேரளாவும் மலபாரை ஒட்டிய பகுதிகளும் சேர நாட்டின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. கடலை ஒட்டியிருந்த சேரர்களின் ஆட்சிப்பகுதி ரோமானியர்களுடனான வாணிபத்திற்கு ஏதுவாக இருந்தது. ஆங்கிலேய படையெடுப்பு நிகழும் வரை சேரர்களின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்த சிறிய நிலப்பகுதி பெரும்பாலும் வேறெவருடைய படையெடுப்பிற்கும் ஆளாகாமல் இருந்தது.

[தொகு]17 ஆம் நூற்றாண்டு

1639 இல் ஆங்கிலேயர்கள் மதராசில் (தற்பொழுது சென்னை என்று அழைக்கப்படுகிறது) கிழக்கிந்தியக் கம்பெனியை நிறுவிய பிறகு தமிழ் நாட்டின் அரசியல்வரலாற்றில் புதிய பகுதி தொடங்கியது. தமிழ் நாட்டு சிற்றரசர்களிடையே நிலவி வந்த சச்சரவுகளைப் பயன்படுத்தி அவர்களைப் பிரித்தாண்டு , அவர்களின் மேல் தங்கள் அதிகாரத்தை செலுத்தத் தொடங்கினர். தமிழ்நாடும் அதைத் தொடர்ந்து தென்னிந்தியாவும் மெல்ல மெல்ல ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. ஆங்கிலேயர் அதிகாரத்தை தம் வசப்படுத்திய இந்த காலக்கட்டத்தில் அவர்களை எதிர்த்துப் போராடிய தமிழ் ஆட்சியாளர்களும் கணிசமானோர் இருந்தனர். மருது பாண்டியர்புலித்தேவன்மாவீரன் அழகுமுத்துக்கோன்மருதநாயகம்வீரபாண்டிய கட்டபொம்மன்வீரன் சுந்தரலிங்கம், வெள்ளையன்,கந்தன் பகடைஒண்டி வீரன்வெண்ணி காலடிதீரன் சின்னமலைகட்டன கருப்பணன் போன்றோர் ஆட்சியாளர்களுக்கு வெள்ளையரை எதிர்த்து போரிட படைகளை தலைமையேற்று நடத்தினர். --

[தொகு]20 ஆம் நூற்றாண்டு

1947இல் இந்தியா விடுதலை அடைந்தபோது, மதராசு மாகாணம்(The Madras Province) மதராசு மாநிலம் ஆனது. தமிழ்நாடு, கடலோர ஆந்திரப் பகுதிகள், மேற்குகேரளம், தென் மேற்கு கர்நாடக கடற்கரைப் பகுதிகள் ஆகியவை மதராசு மாநிலத்தின் கீழ் வந்தது. 1953இல் மதராசு மாநிலத்தின் தெலுங்கு பேசும் மக்கள் உள்ள வட பகுதிகள் ஆந்திர மாநிலமாகவும் தமிழ் பேசும் தென் பகுதிகள் மதராசு மாநிலமாகவும் மேலும் பிரிக்கப்பட்டது. 1956இல் மாநில எல்லைகளை மறு வரையறை செய்யும் சட்ட திருத்தத்தின் மூலம் மதராசு மாநிலத்தின் மேற்கு கடற்கரை பகுதிகள் கேரளாவிற்கும் கர்நாடகத்திற்கும் இடையே பிரித்தளிக்கப்பட்டது. 1969இல், மதராசு மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. கேரள மாநிலத்தின் தென்பகுதியில் தமிழ் பேசும் மக்கள் வாழிடம் கன்னியாகுமரி மாவட்டமாக உருவாக்கப்பட்டு, நவம்பர் 1, 1956இல் தமிழகத்தோடு இணைக்கப்பட்டது.

[தொகு]பாரம்பரியம்

தமிழ்நாடு அரசு குறியீடுகள்
மொழிதமிழ்
சின்னம்திருவில்லிபுத்தூர் கோபுரம்
பாட்டுதமிழ்த்தாய் வாழ்த்து
விலங்குவரையாடு
பறவைமரகதப் புறா
மரம்பனை
பூசெங்காந்தள் கார்த்திகைப் பூ
விளையாட்டுகபடி
ஆடல்பரதநாட்டியம்
தமிழ்நாடு, இன்றும் செழிப்புடன் விளங்கும், வளமான இலக்கியஇசைநடனப் பாரம்பரியங்களுக்குப் பெயர் பெற்றது. இது இந்தியாவின் அதிக அளவு கைத்தொழில் மயமாக்கப்பட்ட மாநிலங்களுள் ஒன்று.
சுப்பிரமணிய பாரதிவ. உ. சிதம்பரம்பிள்ளைசி. வி. இராமன், பெருந்தலைவர் காமராசர்சுப்பிரமணியன் சந்திரசேகர்ஆர். கே. நாராயண்ஆர். வெங்கட்ராமன்சி. என். அண்ணாதுரை , ஈ.வெ.ராமசாமி (பெரியார்), சீனிவாச ராமானுசன்அப்துல் கலாம்பாரதிதாசன்திரு.வி.க.கண்ணதாசன் ஆகியோர் மாநிலத்தின் நன்கு அறியப்பட்டவர்களில் சிலராவர். இவர்களோடு, இளங்கோவடிகள்கண்ணகிதிருவள்ளுவர்,தொல்காப்பியர் ,ஔவையார்கம்பர்கரிகால்சோழன்இராசராச சோழன்,மருதநாயகம் போன்ற முற்காலத்தவரும் இன்றும் நினைவில் இருப்பவர்களாகும்.
Thamizhthaivazhthu-தமிழ் தாய் வாழ்த்து.ogg
தமிழ் தாய் வாழ்த்து

[தொகு]அரசியல்

தமிழ் நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள் எண்ணிக்கை 234. நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 39. 1986 வரை தமிழ் நாட்டில் இரண்டு அடுக்கு சட்ட மன்றங்கள் இருந்தன. தற்பொழுது ஒரு அவை மட்டுமே உள்ளது. மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் ஆகியவற்றுக்கும் ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டு மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்து எடுக்கப் படுகின்றனர்.
தமிழ் நாட்டின் முதன்மையான அரசியல் கட்சிகளாக திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவை விளங்குகின்றன.காங்கிரசு கட்சிமார்க்சிய கட்சிகள்பாட்டாளி மக்கள் கட்சி ,மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்விடுதலைச் சிறுத்தைகள் தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் , பாரதிய ஜனதா கட்சி,மனிதநேய மக்கள் கட்சி,புதிய தமிழகம் கட்சிமூவேந்தர் முன்னேற்ற கழகம்அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி,மற்றும் முஸ்லீம் லீக் ஆகியவையும் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்த கட்சிகளாக உள்ளன.
தமிழ்நாடு முதலமைச்சர்கள் மூவர்: சி. என். அண்ணாதுரை(இடது); மு. கருணாநிதி (நடுவில்); ம. கோ. இராமச்சந்திரன் (வலது)
தந்தை பெரியார் என்று அறியப்படும் ஈ.வெ.ராமசாமி 1916இல் தோற்றுவித்த திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து வந்து, 1949இல் திராவிட முன்னேற்றக் கழகத்தை சி. என். அண்ணாதுரை தோற்றுவித்தார். 1947 இல் இந்திய விடுதலைக்குப் பிறகு 1967 வரை தமிழ் நாட்டை இந்திய தேசிய காங்கிரசு ஆண்டது. 1967இல் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைத்தது. 1972இல் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து பிரிந்து, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ம. கோ. இராமச்சந்திரன் தோற்றுவித்தார். 1977இல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் முதன் முதலில் ஆட்சியைப் பிடித்தது.
1967 முதல் 2011இல் கடைசியாக நடந்த சட்ட மன்ற தேர்தல் வரை தி.மு.க. அல்லது அ.இ.அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளில் ஒன்று அல்லது அக்கட்சிகள் தலைமை வகிக்கும் கூட்டணிகள் பெரும்பான்மை தொகுதிகளை வென்று வருகின்றன. தமிழ் நாட்டு சட்டமன்றத் தேர்தல்களில் பல கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுவது உண்டு என்றாலும், இது வரை தனிக் கட்சி ஆட்சியே நடைபெறுகிறது. முதன் முறையாக தி.மு.க. ஒரு அறுதிப் பெரும்பான்மையற்ற சிறுபான்மை அரசாகச் (2006-2011) செயல்பட்டது. இருப்பினும், தமிழக கட்சிகள் நடுவண் அரசில் கூட்டணி ஆட்சி அமைக்க உதவவும்,பங்கேற்கவும் செய்கின்றன.
தி.மு.க.வின் 2006-2011 ஆட்சிக் காலத்தில் தமிழ் மொழி வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு, தாழ்த்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை சமூகத்தின் நலன்,இலங்கைதமிழர் பிரச்சினை, இட ஒதுக்கீடு, காவிரி நதி நீர்ப் பங்கீடு பிரச்சினை, விவசாயிகள், பாமரர் மற்றும் நலிவடைந்த பிரிவினர் நலன், ஊழல், இலஞ்சம், நிதிமோசடி, சாதி அரசியல் ஆகியவை தமிழ் நாட்டு அரசியலில் முதன்மைத்துவம் கொண்டிருந்தன. பின்னர் குடும்ப அரசியலும் முக்கியத்துவம் பெற்றது.
2011இல் நடந்த சட்ட மன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றிபெற்றது. ஜெயலலிதா தலைமையிலான அ.இ.அ.தி.மு.க. அமைச்சரவை 2011, மே மாதம் 16ஆம் நாள் ஆட்சிப்பொறுப்பேற்றது. இத்தேர்தல் முடிவுகள் தி.மு.க. ஆட்சிமீது மக்கள் அடைந்த அதிருப்தியை வெளிப்படுத்துவதாக பத்திரிகை விமர்சனங்கள் அமைந்துள்ளன.
தி.மு.க.வின் தோல்விக்குக் காரணங்களாகக் காட்டப்படுவை:
  • கடந்த சில ஆண்டுகளாக தமிழகம் எங்கும் நிலவிய மின்வெட்டு
  • விலைவாசி உயர்வு
  • அரசியலில் ஆட்சிக் குடும்பத்தினரின் ஆதிக்கம்
  • திரைத்துறையில் ஆட்சிக் குடும்பத்தினரின் தலையீடு
  • ஈழப் போரின் இறுதிக் கட்டத்தில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்களின் உயிரைக் காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்காதது
  • 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் தி.மு.க. மைத்திய அமைச்சர் ஆ. ராசாவின் பங்கு
  • நடிகர் விஜயகாந்த் தலைமையிலான தேசிய முற்போக்கு திராவிட கழகம் அ.இ.அ.தி.மு.க.வோடு கூட்டணி ஏற்படுத்தியது

[தொகு]மாவட்டங்கள்

தமிழ்நாடு வரைபடம் http://tnmaps.tn.nic.in/tamil/
தமிழ் நாட்டில் 32 மாவட்டங்கள் உள்ளன.

[தொகு]மக்கள்

தமிழ்நாடு இந்தியாவின் ஏழாவது மக்கட்தொகை மிகுந்த மாநிலமாகும். சூலை 1, 2008-இல் மக்கட்தொகை 66,396,000. இந்தியாவிலேயே அதிகப்படியாக 44% மக்கள் நகரங்களில் வாழ்கின்றனர். 89 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் தமிழை தாய்மொழியாகக் கொண்டுள்ளனர். தெலுங்கு (5.65%), கன்னடம் (1.68%),உருது (1.51%), மலையாளம் (0.89%) ஆகிய மொழிகளும் பேசப்படுகின்றன.

[தொகு]பழங்குடிகள்

தமிழகத்தன் மக்கட்தொகையில் 3.5% மக்கள் பழங்குடிகள் (2001 கணக்கெடுப்பு). மாநிலத்தில் 40-க்கும் மேற்பட்ட பழங்குடிகள் உள்ளனர். நீலகிரி,ஆனைமலைகொல்லிமலை ஆகிய பகுதிகளில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் தோடர்காடர்குறும்பர்காணிக்காரர்மலமலசர்பணியர்பழியர்முதலிய பழங்குடி இன மக்கள் வாழ்கின்றனர்.

[தொகு]சமயம்

சமயவாரியாக மக்கள் தொகை [6]
சமயம்பின்பற்றுவோர்விழுக்காடு
மொத்தம்62,405,679100%
இந்துகள்54,985,07988.11%
இசுலாமியர்3,470,6475.56%
கிறித்தவர்3,785,0606.07%
சீக்கியர்9,5450.02%
பௌத்தர்5,3930.01%
சமணர்83,3590.13%
ஏனைய7,2520.01%
குறிப்பிடாதோர்59,3440.10%

[தொகு]பொருளாதாரம்

தமிழ்நாடு, நல்ல தொழில் வளர்ச்சி கண்டுள்ள ஒருசில இந்திய மாநிலங்களுள் ஒன்றாக விளங்குகிறது. தமிழக மக்கள் தொகையில் குறிப்பிடத் தகுந்த பகுதியினர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். கோயம்புத்தூர் நெசவாலைகளுக்கும், ஈரோடு மஞ்சள் சாகுபடி மற்றும் ஆடை ஏற்றுமதிக்கும், கரூர் இல்ல உப-சவுளி ஏற்றுமதி மற்றும் கனரக வாகன கூடு கட்டும் தொழில்களுக்கும், திருப்பூர் ஆயத்த ஆடை ஏற்றுமதிக்கும், சேலம் இரும்பு உருக்கு ஆலைகளுக்காகவும், நாமக்கல் கோழிப் பண்ணைகள், சிவகாசி அச்சுத் தொழில், பட்டாசு உற்பத்திக்கும், காவிரி பாசன பகுதியில் அமைந்துள்ளதிருச்சி,தஞ்சாவூர் போன்ற பகுதிகள் விவசாயத்திற்கும், வேலூர் தோல் தொழிலுக்கும், சென்னை வாகன உற்பத்தி, தகவல் தொழில் நுட்பம் சார்ந்த தொழில்களுக்கும் பெயர் பெற்றுள்ளன.பாலிவுட் என அழைக்கப்படும் மும்பை திரைப்படத் துறைக்கு அடுத்ததாக, தமிழ்நாடு இந்தியாவின் இரண்டாவது பெரிய திரைப்படத் தொழில் மையமாகவும் திகழ்கிறது. ஒவ்வொரு ஆண்டும், பெருமளவில் தமிழ் மற்றும் தென்னிந்திய மொழிகளில் திரைப் படங்கள் தமிழ் நாட்டில் தயாரிக்கப்படுகின்றன.

[தொகு]தமிழ்நாட்டின் ஏழ்மை நிலை

தமிழ்நாடு பலமுனைகளில் வளர்ச்சியடைந்து வந்தாலும் கணிசமான மக்கள் ஏழ்மைக் கோட்டுக்கு கீழேயே வாழ்கின்றார்கள். 1999/00 கணிப்பீட்டின் படி 12-17மில்லியன் மக்கள் அல்லது 21 விழுக்காடு மக்கள் ஏழ்மைக் கோட்டுக்கு கீழே வாழ்கின்றனர்.[2]

[தொகு]கல்வி அறிவு மற்றும் சமூக வளர்ச்சி

சென்னையில் அமைந்த இந்தியத் தொழில்நுட்பக் கழக (IIT) முதன்மை நுழைவாயில். இலச்சினையும் குறிக்கோளுரையும்
கிண்டி பொறியியல் கல்லூரிசென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக முதன்மை வளாக பரப்பில் அமைந்துள்ளது. இது இந்தியாவின் பழமையான நுட்பவியல் கல்லூரி
சமூக முன்னேற்றத்தின் குறியீடுகளான பரவலான கல்வியறிவு, ஆண் - பெண் சமத்துவம், மேம்பட்ட பொது சுகாதாரம், நீண்ட சராசரி மனித ஆயுள், சட்டம் ஒழுங்கு பராமரிப்பு , வேலை வாய்ப்புகள், தொழில் வளர்ச்சி அகியவற்றில் இந்தியாவின் முன்னோடி மாநிலங்களுள் ஒன்றாக தமிழ்நாடு விளங்குகிறது.
தமிழ்நாடு கல்வியறிவு இந்தியாவின் சராசரியைவிட அதிகம். இங்கு 1991-2001 இடைப்பட்ட காலத்தில் 62.66%ல் இருந்து 73.47% கல்வியறிவு அதிகரித்தது. இதில் ஆண்கள்: 82.33% ம் பெண்கள்: 64.56%ம் ஆகும். தமிழ்நாட்டில் 37 பல்கலைக்கழகங்கள், 454 பொறியியல் கல்லூரிகள், 1150 கலை கல்லூரிகள், 2550 பள்ளிக்கூடங்கள் மற்றும் 5000 மருத்துவமனைகள் உள்ளன. இங்கு இரண்டு நடுவண் அரசு கல்வி நிறுவனங்கள் உள்ளன. அவை சென்னையில் அமைந்த இந்திய தொழில்நுட்பக் கழகம், மற்றும் திருச்சியில் அமைந்த தேசிய தொழில்நுட்ப கழகம் ஆகும். மேலும் புகழ்மிக்க சென்னை பல்கலைக்கழகம்அண்ணா பல்கலைக்கழகம்பாரதிதாசன் மேலாண்மைக் கல்வி நிறுவனம்,வேலூர் கிருத்துவ மருத்துவ கல்லூரிசென்னை மருத்துவக் கல்லூரிதமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்கோயம்புத்தூர், இலயோலாக் கல்லூரி, சென்னை ஆகியனவும் உள்ளன. தமிழகத்தில் வருடம்தோறும் 1,30,000 பேர் பொறியியல் படிப்பு முடித்து வெளியே வருகின்றனர்.

[தொகு]பண்பாடு

[தொகு]விழாக்கள்

காளையை அடக்கும் இளைஞன்
கன்னியாகுமரியிலுள்ள திருவள்ளுவர் சிலை

[தொகு]சுற்றுலாத்துறை

தமிழ்நாடு அழகிய நிலப் பகுதிகள், பாரம்பரியச் சின்னங்கள் நிறைந்த சுற்றுலா முதன்மைத்துவம் உள்ள மாநிலமாகும். தமிழ்நாடு, திராவிட கட்டிடக் கலை பாணியைப் பிரதிபலிக்கும் கோயில்களுக்குப் புகழ் பெற்றது.இக்கோயில்களுக்கு வியக்க வைக்கும் கோபுரங்களும் ரதங்களும் அழகு சேர்க்கின்றன.இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம்இராமநாதசுவமி திருகோவிலின் மூன்றாம் பிரகாரம் உலகின் மிகபெரியவையாகும். சோழர் கால தஞ்சை பெரிய கோவிலும் பல்லவர் கால மாமல்லபுரம் சிற்பங்களும் கோவில்களும் உலகப் பாரம்பரியச் சின்னங்களாக அங்கீகரிக்கப் பட்டுள்ளன. இராமநாதபுரம்தஞ்சைமதுரைசுவாமிதோப்பு மற்றும் காஞ்சி ஆகியவை கோயில் நகரங்களாகத் திகழ்கின்றன. கன்னியாகுமரி கடல் முனையில் அமைந்துள்ள வள்ளுவர் சிலையும் காண வேண்டிய இடங்களாகும். எழில் கொஞ்சும் நீலகிரி மற்றும் கோடைக்கானல் மலைப் பகுதிகள், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய அடர்ந்த வனப் பகுதிகள், கிழக்கு கடற்கரை,ஏற்காடு, பகுதிகள் போன்ற மனம் கவரும் தலங்களும் உண்டு.

[தொகு]இவற்றையும் பார்க்கவும்

[தொகு]மேற்கோள்கள்

  1.  http://www.tn.gov.in/tamiltngov/prof-govern-Tamil.htm
  2.  http://www.tn.gov.in/gov_cm.html
  3.  தமிழ்நாடு சட்டசபை.
  4.  "தமிழ்நாடு" எனப் பெயர் மாற்றக் கோரிக்கை சங்கரலிங்கனார் உயிர்த்தியாகம்
  5.  ராசு கொளதமன். (2004). க. அயோத்திதாசர் ஆய்வுகள். சென்னை: காலச்சுவடு பதிப்பகம்.
  6.  Census of india , 2001

[தொகு]வெளி இணைப்புகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக