தொலைக்காட்சி!!

Search This Blog

Saturday, March 10, 2012

ஆண்களின் மனங்கள் மாறும்வரை அடிமைத்தனம்!?


ஆண்கள் மனம் மாறிவிட்டால் பெண்களின் தேவை ஆணுக்கு இராது,பெண்ணை ஆணும் ஆணை பெண்ணும் நேசிக்கும்வரை இயற்கையின் நியதியை நீங்கள் மீற முடியாது,உங்களால் சில பெண்களை மாற்றி அனுபவிக்கமட்டுமே பெண் விடுதலை என்ற பதம் உதவுமே அன்றி இயற்கையை ,செயற்கை வென்றால் முடிவு அழிவே!!அடிமை அடிமை என்கிறீர்களே நீங்கள் என்ன கீழேயா படுக்கிறீர்கள்??எத்தனைநாள்பெண்களை ஏமாற்றுவீர்கள்?காட்டுவாழ்வில் வீரமாக போராடி தங்களையும் பெண்களையும் காத்த ஆண்களுக்கு பெண்கள் பணிந்ததில் வியப்பில்லை,உங்கள் பாசம்தான் புரியாதபுதிர்!இன்று உயர்பதவில் உள்ள பெண்கள் என்ன கல்லா உடைக்கிறார்கள்,உண்மையாக நடவுங்கள்.
ஆண்களின் மனங்கள் மாறும்வரை அடிமைத்தனம் என்றும் மாறிவிடாது !!!

சமுதாயத்தில் ஒவ்வொருவரின் மனதிலும் பெண் என்பவள் வெறும் காமத்துக்கான வடிகால் அல்ல. அவளும் நம்மைப் போன்றே உணர்ச்சிகளும் உருவமும் கொண்ட ஒரு உயிரே என்ற பார்வை உண்டாக வேண்டும். 
அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரை பெண்கள் அடிமைகளாகவும், போகப் பொருளாகவும், ஆண்களுக்குக் கட்டுப்பட்டவர்களாகவும் மட்டுமே சமுதாயத்தால் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இதில் சமுதாயம் என்பதற்கு ஆண்கள் மட்டுமே என்று எடுத்துக் கொள்ள வழியின்றி பெண்ணியத்துக்கு எதிரியாய் சில பெண்களும் அமைந்திருப்பது ஒளிந்திருக்கும் ஒரு உண்மையாகும். ஆதலால் பெண்ணியம் என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் கூறமுடியும்.

இன்று சில பெண்கள் அடங்க மறுத்து அத்துமீறுதல் என்பது போல் கற்பு நெறி, பெரியவர்களை மதித்தல், குடும்பத்தைக் கட்டிக் காத்தல், கணவனை அனுசரித்தல் போன்ற எல்லாவற்றையும் பெண் விடுதலை என்ற பெயரில் சுக்கு நூறாக்கித் திரியும் தான்தோன்றித்தனமான தலைக் கர்வம்தான் பெண்ணியமா?

இல்லை ஆணுக்குப் பெண் சமமென முழங்கி இன்று பல பெண்கள் எமது கலாசாரத்தைத் தொலைத்துத் திரிவதுதான் பெண்ணியமா? எடுத்ததற்கெல்லாம் சண்டையிட்டு இதுதான் பெண்விடுதலையென்று விவகாரத்து பெற்றுச் செல்வதுதான் பெண்ணியமா?. இல்லை இஷ்டப்படி வாழ நினைப்பதுதான் பெண் விடுதலையா?

பெண்களை அடிமைகளாக, ஆணுக்குக் கட்டுப்பட்டவர்களாக நடத்தாமல் ஆணும் பெண்ணும் சமமென்ற நிலை வேண்டுமென்பதுதான் பெண்ணியமாகும். ஆதிகாலத்தி லிருந்து பெண்ணுக்கு மட்டுமே உரித்தானதாய் வரையறுக்கப்பட்ட, சில பழமையான அடிமைத் தனங்களிலிருந்து பெண்மையை மீட்பதுதான் பெண்ணியம்.

நாகரிக வளர்ச்சிகள் உச்சத்தைத் தொடப்போகும் இக்காலத்திலும் பெண்ணியம் பேசுவதன் அவசியம் மட்டும் மாறாமலிருப்பதன் மர்மம்தான் என்ன?

இன்று ஆணுக்கு நிகராய் பெண்கள் கால் பதிக்காத துறைகளே இல்லை. ஆணைவிட அதிகமாய் சம்பாதிக்கும் பெண்களையும், ஆண்களுக்கே மேலதிகாரியாய் திகழும் பெண்களையும், சர்வ சாதாரணமாய் ஒவ்வொரு அலுவலகத்திலும் பார்க்கமுடிகிறது. ஆட்சிப் பொறுப்பலிருந்து ஆகாய விமானம் வரை பெண்கள் சாதித்திருந்தாலும் இன்னும் ஏன் ஒவ்வொரு வீட்டின் சமையலறையும் பெண்ணின் சொத்தாக அவள் கால்களிலேயே கட்டப்பட்டிருக்கிறது?

திருமணமாகி குடும்ப வாழ்க்கையில் கட்டுண்டிருக்கும் யாராவது ஒரு பெண்ணாவது (பெண்ணியம் பேசிக்கொண்டிருப்பவர்களையும் சேர்த்துதான்) நான் எந்தவொரு வகையிலும் ஆணைச் சார்ந்தோ அவனுக்குக் கட்டுப்பட்டோ இல்லாமல் சரிநிகராகத்தான் இருக்கிறேனென்று மனசாட்சியில் கைவைத்துக் கூறமுடியுமா? அப்படியென்றால் எங்கேயிருக்கிறது பெண்ணியத்தின் எதிரி? நமது கலாச்சாரத்திலா? சமூகத்திலா? இல்லை நம் ஒவ்வொருவரின் மனதுக்குள்ளுமா?

எவ்வளவுதான் சாதித்தாலும் சமுதாயத்தில் பெண்களின் மீதான பார்வையில் இதுவரை பெரிதாய் மாற்றங்கள் ஏதுமில்லை. அந்தக் காலத்தில் பெண் விடுதலைக்காகப் போராடியவர்கள் பெண் கல்விக்கே முக்கியத்துவம் அளித்தார்கள். பெண்கள் கல்வியில் முன்னேறினால் பெண் விடுதலை பெற்று பெண்ணியமும் பேணப்படுமென்று நம்பினார்கள். ஆனா, இன்று பெண்கள் கல்வியில் முன்னேறியும் பெண் விடுதலை மலர்ந்ததாய்த் தெரியவில்லை.

இன்றும் பெண்களுக்கெதிரான வன் கொடுமைகள் உலகம் முழுவதும் அரங்கே றிக்கொண்டேதான் இருக்கின்றன. பெண்களுக்கெதிரான பாலியல் கொடுமைகளுக்கு ஒரு நிரந்தரத் தீர்வு உண்டாகாத வரையில் பெண் விடுதலையும், பெண்ணியம் என்பதும் வெறும் பேச்சில் மட்டுமே இருக்கக்கூடும். பெண் என்றால் அவள் மீது விழும் சமூகப் பார்வை பெரும்பாலும் பாலியல் சம்பந்தப் பட்ட வக்கிர உணர்வாகவே இருப்பது இயற்கையாகவே உருவானாதா? இல்லை, வாழ்க்கைமுறை என்ற பெயரில் ஆணாதிக் கத்தால் உருவாக்கப்பட்டதா? அன்று முதல் இன்றுவரையிலும் திரைப்படங்கள், விளம் பரங்கள் போன்ற ஊடகங்களில் எல்லாம் பெண் என்பவள் வெறும் போகப் பொருளாகவே காட்டப்படும் நிலை மாறாதது ஏன்?

இன்று பெண்ணியம் பேசும் எந்தவொரு ஆணாவது உண்மையான மனதுடன் பெண் விடுதலையை ஆதரிப்பதாய் நம்ப முடியுமா? பெண் என்பவள் ஆணுக்குக் கட்டுப்பட்டவள், என்னதானிருந்தாலும் பெண் என்பவள் ஆணுக்குக் கீழேதான் குடும்பத்தில் சமைப்பது, துவைப்பது, பிள்ளைகளை வளர்ப்பது போன்ற பெண்ணுக்காய் வரையறுக்கப்பட்ட வேலைகளைப் பெண்ணே செய்ய வேண்டும் என்ற எண்ணங்கள் ஆண்களின் மனதில் சிலரிடம் வெளிப்படையாகவும், பெண் விடுதலை பேசும் சிலரிடம் ஆழ் மனதிலும் ஓடிக்கொண்டேதான் இருக்கின்றன.

ஏழை, பணக்காரன், படித்தவன் என்று எந்தவொரு வித்தியாசமுமின்றி எல்லா ஆண்களுமே இன்றும் தங்கள் மனைவியின் மீது தங்கள் விருப்பங்களைத் திணிப்பதுடன் ஏதோவொரு வகையில் அவர்களைக் கட்டுப்படுத்தியே வைத்திருக்கின்றனர். விருப்பப்பட்ட இடத்துக்கு, விருப்பப்பட்ட நேரத்தில், விருப்பப்பட்டவர்களுடன் போய் வரும் ஆண்கள் கூட்டம் தங்கள் மனைவியையோ இல்லை மகளையோ அவ்வாறான சுதந்திரத்திற்கு அனுமதிப்பார்களா? ஆணுக்கு ஒரு பார்வை, பெண்ணுக்கு ஒரு பார்வை என்பதே பெண்ணடிமைத் தனத்தின் ஆணி வேராக இருக்கக்கூடும். பெண்ணடிமைத் தனம் என்பது நமது பரம்பரை வழியாக நம் புத்திக்குள் புரையோடிப் போயிருக்கும் சமுதாய நோயேயன்றி வேறேதுமில்லை.

வெறுமனே பேசுவதாலும், எழுதுவதாலும் மட்டுமே மாறிவிடாது இந்த நிலை. என்னால் நிச்சயமாய் கூறமுடியும் பெண் விடுதலையும் பெண்ணிய வளர்ச்சியும் முழுவதுமாய் பெண்கள்கையில் மட்டுமேயில்லை, ஒவ்வொரு ஆண் மகனும் தன் தாயை, மனைவியை, மகளை எப்போது ஒரு நல்ல நண்பராய் நடத்த ஆரம்பிக்கிறானோ அப்பொழுதுதான் பெண்ணியம் மலரத் தொடங்கும்.

சமுதாயத்தில் ஒவ்வொருவரின் மனதிலும் பெண் என்பவள் வெறும் காமத்துக்கான வடிகால் அல்ல. அவளும் நம்மைப் போன்றே உணர்ச்சிகளும் உருவமும் கொண்ட ஒரு உயிரே என்ற பார்வை உண்டாகவேண்டும். ஆண்டாண்டு காலமாய் நம் சமூகத்தில் ஆழ வேரூன்றியிருக்கும் பெண்ணடிமைத் தனத்தை ஒரே நாளில் ஒழித்து விட இயலாதுதான்.



No comments:

Post a Comment