தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 5 மார்ச், 2012

ஆன்மிகத்திற்கு ஜாதியில்லை-விவேகானந்தர்


* நாம் முன்னேற முதலில் நம்மிடம் நம்பிக்கை வேண்டும்; பிறகு கடவுளிடம் நம்பிக்கை வேண்டும். தன்னிடம் நம்பிக்கை இல்லாதவன் கடவுளிடமும் நம்பிக்கை வைக்க முடியாது.
* உள்ளத்துக்குள் இருக்கும் அனைத்தையும் துறந்துவிடு, வைராக்கியத்தைக் கடைபிடி, இதுவே உண்மையான தியாகம். இது இல்லாமல் உனக்கு ஆன்மிகம் கிடையாது. 
* உள்ளம் தூய்மையானால் உலகமும் தூயதாகிவிடும். இந்த உண்மையை உலகுக்கு கூற வேண்டிய அவசியம், முன்பு என்றும் இல்லாத அளவுக்கு இப்போது ஏற்பட்டுள்ளது.
* கல்வி, அறிவு, செல்வம், ஆள்பலம், வலிமை, தைரியம் என்று இயற்கை நமக்கு கொடுத்திருக்கின்ற அனைத்தும், பிறருக்குக் கொடுப்பதற்குத் தான்.
* வாழ்க்கையில் வெற்றி பெற்ற மனிதர்களைக் கவனி. ஒவ்வொருவரின் பின்னணியிலும், அளவற்ற கடமையுணர்வும், நேர்மையும் இருந்தே தீரும்.
* ஆன்மிகத்திற்கு ஜாதியில்லை. ஜாதி என்பது வெறும் சமுதாய ஏற்பாடுதான்.
- விவேகானந்தர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக