தொலைக்காட்சி!!

Search This Blog

Friday, March 2, 2012

ஆண்களுக்கான நிரந்தரமான கருத்தடை முறை – ( 18+ VIDEO ) ஒரு பார்வை!


முந்தைய மருத்துவப்பகுதியில் பெண்களுக்கான நிரந்தட கருத்தடை முறையை தந்திருந்தோம். இன்று ஆண்களுக்கான நிரந்தட கருத்தடை முறையை பார்க்கலாம்.

பெண்களின் உறுப்புக்கள் உடலினுள் சிக்கலான முறையில் அமைந்திருப்பதால் குடும்பக்கட்டுப்பாடு செய்வதென்பது சற்று சிக்கலானது. தொற்றுக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
ஆனால் ஆண்களிலே இந்த குழாயானது விதைப்பையினுள் ஆரம்பித்து வயிற்றின் அடிப்பகுதயின் ஊடாக ஆணுறுப்பை அடைந்து விந்துகளை வெளியேற்றும்.
இவ்வாறு இந்தக் குழாய் விதைப் பையினுள் இருப்பதால் இலகுவாக விதைப் பையில் சிறிய துளை போட்டு அந்தக் குழாய்களை வெட்டித் தைத்துவிடுவதன் மூலம் விந்துகள் வெளியேறுவது தடைப்பட்டு கர்ப்பம் உருவாகுவது தடைப்படும்.
இதற்காக எந்த மயக்க மருந்துகளும் தேவை இல்லை , சத்திர சிகிச்சை கூடமும் தேவை இல்லை.
வெறுமனே வெட்டப்படும் இடத்தை மட்டும் விறைக்கச் செய்யும் மருந்துகளை பாவித்து சத்திர சிகிச்சை கூடம் இல்லாத வைத்திய சாலைகளில் கூட இந்த சத்திர சிகிச்சை மேற்கொள்ளப் படலாம்.
இதற்காக வெட்டப் படும் துளையும் மிகவும் சிறிய(ஒரு சில cm) காயமே.
இந்த சத்திர சிகிச்சை செய்த பின்பு தடைப்படுவது விந்துகளின் வெளியேற்றம் மட்டுமே . ஆனால் ஒரு ஆண் உறவில் ஈடுபடும்   போது வெளிவரும் சுக்கிலப் பாயத்தில் இருக்கும் ஏனைய திரவங்கள் வழமை போல் வெளிவருவதால் அந்த ஆணின் ஆண்மையிலோ அல்லது, உடலுறவின் மீதான ஆர்வத்திலோ எந்த விதமான மாற்றமும் ஏற்படாது.

இந்தச் சத்திர சிகிச்சை செய்து கொள்ளுவதால் ஆண்மை குறையும் என்ற மூட நம்பிக்கையே ஆண்கள் கர்ப்பத்தடை செய்யாமல் பெண்கள் மட்டும் கர்ப்பத்தடை செய்து கொள்ளும் அவலம் எம் சமூகத்தில் இருப்பதற்கானகாரணமாகும்.
( எனினும் பின் வந்த ஆய்வுகளின் படி கருத்தடையின் பின்னர் சில ஆண்கள் தமது ஆண்மையில் குறை ஏற்பட்டுள்ளதாக தாமாகவே எண்ணுவதால் மனரீதியான சிக்கல்கள் ஏற்படுவதாக அறியப்பட்டுள்ளது.)

No comments:

Post a Comment