தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 5 மார்ச், 2012

நியூசிலாந்தில் 14 வயது சிறுமிகளுக்கு மதுகொடுத்து கட்டிப்பிடித்த இலங்கை இளைஞன் வீட்டுக்காவலில்!!

 ஒரு சமூக வலைப்பின்னல் தளம் மூமாக இரு சிறுமிகளை நண்பர்களாக்கி அவர்கள் மீது பாலியல் சேஷ்டை புரிந்த 19 வயது இலங்கை இளைஞர் ஒருவர் நியூசிலாந்தில் மூன்று மாத வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். 

கிறிஸ்சேர்ச் மாவட்ட நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. 

இந்த சம்பவம் குறித்து வெளிநாட்டு ஆங்கில ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

19 வயதுடைய இலங்கை இளைஞன் நியூசிலாந்தின் - கிறிஸ்சேர்ச்சில் கடந்த பெப்ரவரி 22ம் திகதி இடம்பெற்ற புவிநடுக்கத்தின் பின் அங்கு சென்றுள்ளார். 

கிறிஸ்சேர்ச்சில் தனக்கு பழக நண்பர்கள் வேண்டும் என நினைத்து 14 வயதுடைய இரு சிறுமிகளை சமூக வலைத்தளம் மூலம் நண்பர்களாக்கிக் கொண்டுள்ளார். 

நன்கு நண்பர்களான இவ்விரு சிறுமிகளையும் ஒருநாள் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு மதுபானம் அருந்தக் கொடுத்து அவர்களை கட்டிப்பிடித்து, முத்தமிட்டு பாலியல் சேஷ்டை புரிந்துள்ளார். 

குறித்த இரு சிறுமிகளை வீட்டுக்கு அழைப்பதற்கு முன்னர் அவர்களுக்கு கையடக்கத் தொலைபேசி ஊடாக தன்னுடன் உறவு வைத்துக் கொள்ளுமாறு ஆபாச குறுந்தகவல்களையும் அனுப்பியுள்ளார். 

இந்த சம்பவத்தை விசாரித்த கிறிஸ்சேர்ச் மாவட்ட நீதிமன்ற நீதிபதி நவீட், சமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்துவதால் சிறுவர்கள் இவ்வாறு வீணாவதாக சுட்டிக்காட்டியுள்ளார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக