தொலைக்காட்சி!!

Search This Blog

Monday, February 27, 2012

அகிம்சையை மதிக்க!!


அகிம்சையை மதிக்க அதுபற்றி ய அறிவும்,மனதில் நல்லெண்ணமும் வேண்டும்,ஆங்கிலேயனிடம் அது நிறையவே இருந்ததால் மகாத்மா மதிக்கப்பட்டார்,ஆயுதத்தை அழித்த ஆங்கிலேயர் அகிம்சையை கண்டு பயந்தார்கள்.அவர்கள் மனிதம் அங்கு வெளிப்பட்டது.இந்தியர்களுக்கு எதிராக அகிம்சையில் போராடியவர்கள் இம்சை செய்யப்பட்டனர்,சாக விடப்பட்டனர்.எதற்கு உண்ணாவிரதம் இருப்பது என்ற வரைவிலக்கணமே இல்லாமல் சின்ன சின்ன விடயங்களுக்கும் அது துஷ்பிரயோகமானது.உண்ணாவிரதிகள் இறந்தது இந்தியாவில் என்பதால் இந்திய அரசோ கட்சிகளோ வருந்தியது கிடையாது.வெட்கப்பட்டதில்லை,காரணம் ரோசநரம்புதான் இல்லையே!!ஈழத்தில் நீராகாரம் கூட அருந்தாத உண்ணாவிரத்தி திலீபன் இறந்தபோது பாரதம் என்ன செய்தது,எள்ளி நகையாடியதே,மனிதருக்கு எதிராக மகாத்மா உண்ணாவிரதம் இருந்ததால் வென்றார்.மகா அயோக்கியரும் அரக்கருமானவருக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்த இந்தியரும் இலங்கைத் தமிழரும் இறந்தனர்.ஆகவே சத்யம் அறிந்தவனுடன் சத்யம் பேசு,அகிம்சை எண்ணம் கொண்டவனுடன் அகிம்சையால் பேசு.ஆயுதத்துடன் ஆயுதமே பேசவேண்டும்.அரக்கரும் ராட்சசரும் நிறைந்த இலங்கை இந்தியாவில் சொந்த இனத்தையே காட்டிக்கொடுக்கும் கூட்டிக்கொடுக்கும் கூட்டமைப்புகள் உள்ளவிடங்களில் கடவுள்தான் மனிதரை காக்கவேண்டும்!

No comments:

Post a Comment